World Tamil Blog Aggregator Thendral: த.மு.எ.ச.விழா

Wednesday 9 October 2013

த.மு.எ.ச.விழா

20.09.2013அன்று த.மு.எ.ச.திருக்கோகர்ணம் கிளையின் சார்பாக
முன்னையரிந்து வருங்காலம் முழங்கியவன்
தன்னையறிந்து தமிழ்க்கவிதை ஓதியவன்
பாரதத்தின் மகாகவியாக-தமிழ்
பா ரதத்தில்வலம் வந்த
முண்டாசு கவிஞனுக்கு நினைவு கூர் விழா!
மற்றும்
தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற
திரு .தங்கம்மூர்த்தி அவர்களுக்கு பாராட்டு விழா!
குற்றாலச் சாரலாய்,இனிய சங்கீதமாய்,குழவியின் புன்சிரிப்பாய் மனதை வருடிச் சென்றது.
பாராட்டும் முகத்தான் எனது எளிய கவிதையுடன்!

சங்கம் வைத்து தமிழ் வளர்த்தது மதுரை
தங்கம் வளர புகழ் பெற்றது புதுகை!
மருத்துவ
தங்கம் தந்த தவப்புதல்வன்
திருமகள் பெற்ற வெற்றிமகன்
பண்புகளின் களஞ்சியம்-வியப்பில்லை
பாலாவின் மாணாக்கரன்றோ!

அன்பிற்கினிய அஞ்சலியை தேவியாய் 

 அடைந்ததனால் இல்லறக்கவலையின்றி
அகிலம் போற்ற சிறக்கின்றார்
அளிக்க வேண்டும் முதல்வாழ்த்து அவருக்கே!

காவியம் படைத்த பாரதியின்
பாதையை மாற்றியவர் நிவேதித்தை-இவர்
காவியம் படைக்கவே தொன்றினரோ
காவியாவும் நிவேதிதாவும்!

காட்சிக்கு எளிமையாய்
கருத்தினில் இனிமையாய்
காண்பவர் மனதைக்
கொள்ளை கொள்ள
கேட்பாரை கேளாரை
போதை கொள்ள வைக்கும்
வெண்கலக் குரலோன்!

இவர் புகுஞ் சபைகள் தோறும்
இவர் குரல் ஒன்றே ஓங்கும்-இவரின்
நண்பர்கள் படைகண்டு
நலிந்தவர்கள் பலருண்டு
நட்புக்கே இலக்கணமாய் சிறக்கின்றது
இவர் வாழ்க்கை!

வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவோருக்கும்
வெகுளியான புன்னகையே பகிர்ந்திடுவார்!
வந்த எண்ணம் ஈடேறாமல்
வலியிழந்து செல்வோர் சிலர்
வகையின்றி செல்வோர் பலர்!

கடந்து வந்த பாதைதனில்

 கற்களோடு முட்களாயினும்
மலர்பாதையாய் வெற்றி
மாலைகள் சூடிடுவார்!

அன்பில் வணங்கும் அழகிய நாணல்
ஞானத்தலைவன்
நாநயச்செல்வன்

பதவிகள் தேடி ஓடுபவரில்லை-இவரை
பதவிகள் நாடி வரும் விந்தையென்ன?
பட்டிமன்றம் நடத்திடலாம்
தங்கம்மூர்த்தியின் புகழிற்கு காரணமென்ன?
வெண்கலக்குரலா?
நாவினில் தவழ்ந்திடும் தமிழா?
பண்பான மனித நேயமா?
பட்டிமன்ற பேச்சுக்களா?

தாயுமானவனாய் தன் பள்ளிதனில்
திகழ்வதாலா?
தடையின்றி கொட்டுகின்ற கவிதைகளாலா?
அப்பப்பா தலைப்புகள் தலைசுற்ற வைக்கின்றன!

அழைத்தது தேசம் அன்புடனே...
அரைப்பணியின்றி அறப்பணியெனவே-தன்னை
ஆசிரியப்பணிக்கு அர்ப்பணித்ததால்
தேசம் தலை வணங்கி 

 தேசிய விருதளித்தது......

தூற்றூவார் தூற்றல் கேட்டும்
சோர்விலாப் பணிகள் செய்தாய்
ஆற்றலால் அன்னை நாட்டில்
அரியதோர் விருது பெற்றாய்
ஏற்றதோர் தகுதியென்றே
இதயமுள்ளோர் வாழ்த்தினரே!

போற்றுவார் நாட்டினரே
பண்புள்ளோர் இயல்புதானே!

அன்புடனே வாழ்த்துக்கள் குவிய
அச்சம் வேண்டாம்-இவை
தமிழ் மகளின் பா மலர்களே!

புதுகையின் பெருமைக்கு
மேலும் ஓர்மைல்கல்
சீரிய விருது பெற்ற
சீராளன் தங்கம் மூர்த்தியும்
புதுமை போற்றும் புதுகையின்
அழியாச்செல்வமென

”தடம் பதிப்போம்
தலை நிமிர்வோம்’

No comments :

Post a Comment

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...