World Tamil Blog Aggregator Thendral: புத்தகம்
Showing posts with label புத்தகம். Show all posts
Showing posts with label புத்தகம். Show all posts

Wednesday, 5 July 2017

முதல் நூல்

எனதுமுதல் நூலான

கே ஜீவபாரதியின் "வேலு நாச்சியார் நாவலில் பெண்ணியச்சிந்தனைகள் "என்ற இளநிலை முனைவர் பட்ட ஆய்வு புத்தகமாக கவிஞர் ஜீவபாரதி அவர்களின் முயற்சியால் எனது தாத்தா தியாகி மாணிக்கம் அவர்கள் பிறந்த "சுந்தரப்பெருமாள் கோவில் "இல் திருமிகு ரெங்க சாமி மூப்பனார் அவர்களால் 2009 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது .

அந்நூலுக்காக வேலுநாச்சியார் வாழ்ந்த இடங்களுக்குச் சென்ற போது மனம் சொல்ல முடியாத உணர்வலைகளில் மிதந்து கொண்டிருந்தது ...

இன்னமும் அவரை நினைத்தாலே மனம் பெருமிதம் கொள்ளும் ...ஜான்சிரானிக்கு 75 ஆண்டுகளுக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து போராடி வெற்றி பெற்ற முதல் பெண்மணி .வரலாறு மறைத்தாலும் அவள் வெளிப்பட்டு வருவது யாராலும் தடுக்க முடியவில்லை ..அவளையும் சாதி விடாமல் துரத்துகின்றது என்பது தான் வேதனை .

பெண்களுக்கென்று தனிப்படை அமைத்து அதில் குயிலி என்ற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்ணை தலைமை ஆக்கி எல்லோருக்கும் எடுத்துக்காட்டாய் வாழ்ந்தவர் ...

ஐம்பது வயதில் ஒரு பெண் ஆங்கிலேயரை எதிர்த்து யானை மேல் ஏறி போராடியிருக்கிறாள் என்றால் அவளை எப்படி நாம் கொண்டாடி இருக்க வேண்டும் ...

அவளைப்பற்றி தேடுகையில் ஆங்கிலேயர் எழுதி வைத்த சில வரிகளே ஆதாரமாக கிடைக்கின்றது ...தமிழர் வரலாறை இன்றும் மறந்து புறக்கணிக்கத் தானே செய்கின்றோம் ...

எனது முதல் நூல் வேலுநாச்சியார் பற்றி என்பதில் மிகுந்த பெருமை உண்டு ..எனது வாழ்க்கைக்கு அவரே முன்னோடி ,வழிகாட்டி எனலாம் ...

Saturday, 25 March 2017

சின்னவள்-நூல் விமர்சனம்

தாயுமானவனின் "சின்னவள் "கவிஞர் மீரா.செல்வக்குமார் அவர்களின் கவிதை நூல்

காலப்பெருநதியில்...சிறிய காவியமாய் "சின்னவள்" சிரிக்கின்றாள் .

ஒரு அன்பான தந்தைக்கு பாத்திரமான குழந்தை ...தந்தையின் ஸ்பரிசத்தில் உலகை வெல்லத்துடிக்கும்....கவிதையாய் "சின்னவள்"...மகளுக்கே தான் வடித்த உணர்வுகளை நெய்து நூலாக்கி சின்னவளோடு நம்மையும் சிறைப்படுத்தும் வித்தை அருமை..

ஆண்களே மோசம் என்ற குற்றச்சாட்டுகளை பொய்ப்பிக்க சின்னவள் பிறந்துள்ளாள்.

தேவதைகளால் தேடப்படுபவன் -நூல் விமர்சனம்

கவிஞர் தங்கம் மூர்த்திஅவர்களின் "தேவதைகளால் தேடப்படுவன் "நூல் திருமிகு பாரதிகிருஷ்ணகுமார் அவர்களால் அண்மையில் வெளியிடப்பட்டது ....

புதுகை மக்களின் அன்பில் நிறைந்த கவிஞரின் நூலின் தலைப்பே அவரின் தன்மையை உணர்த்துவதாக அமைந்துள்ளது மிகச்சிறப்பு ..

குளிர் இளந்தென்றலின் மணமும்,மென்மையும் .....நம்மை பரவசப்படுத்துவது போல ...மழையில் நனைந்த பூக்களின் தலையாட்டலாக ,மல்லிகையாய் மனம் முகிழ்க்கும் கவிதைகள் .....
                
                                                 "குளிர்ந்த ஒளி
                                       மழையெனப் பொழிந்து
                                         என்னை முழுவதும்
                                           நனைத்திருந்தது

                                                அப்போது
                                             பூமியெங்கும்
                                           பூத்திருந்தன
                                             நிலவுகள் "
நிலா பூக்கும் அதிசயம் இவருக்கு தான் தோன்றும் ...

Wednesday, 15 March 2017

மின்னூல்கள்




 நம்பவே முடியவில்லை புஸ்தகா நிறுவனம் எனது நூல்களை மின்நூலாக வெளியிட்டுள்ளது .கவிஞர் முத்துநிலவன் அண்ணாவின் முயற்சியால் இன்று புதுகை எழுத்தாளர்களின் நூல்கள் அனைத்தும் மின்னுக்குள் வடிவில் ....நன்றி அண்ணாவிற்கு புஸ்தகா நிறுவனத்தினருக்கும் ...



 எனது முதல் கவிதை புத்தகமும்,வளரி சிற்றிதழ் வழங்கிய கவிப்பேராசான் மீரா விருது பெற்றுள்ள புத்தகமுமாகிய "விழிதூவிய விதைகள்" ...மின்னூலாக உங்களுக்காக...

http://www.pustaka.co.in/home/ebook/tamil/vizhi-thooviya-vidhaigal




 எனது வாழ்வின் திருப்பு முனையாக....இளமுனைவர் பட்ட ஆய்வு நூல் கவிஞர் ஜீவபாரதியின் "வேலு நாச்சியார் நாவலில் பெண்ணியச்சிந்தனைகள்" "...எனது முதல் நூலாக 2007 இல்வெளியிடப்பட்ட நூல்..தற்போது மின்னூலாக...நன்றி புஸ்தகா நிறுவனத்திற்கு...
Velu Nachiyar Novelil Penniya Sinthanagal | Tamil eBook | M. Geetha | Pustaka

http://www.pustaka.co.in/home/ebook/tamil/velu-natchiyar-novelil-penniya-sinthanaigal




எனது "ஒரு கோப்பை மனிதம்" கவிதைப் புத்தகம் மின்னூலாக..

http://www.pustaka.co.in/home/ebook/tamil/oru-koppai-manitham


Monday, 16 January 2017

நூல் அறிமுகம் -தைராய்டு ஏன்? எதற்கு?எப்படி?


நூல் அறிமுகம் –

தைராய்டு.-ஏன்? எதற்கு? எப்படி?
ஆசிரியர்.ஜி.முத்துராமன்.

பதிப்பகம் –ஆரோக்கியம்&நல்வாழ்வு வெளியீடு.

கடந்த 6 வருடங்களாக தைராய்டு குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டு மாத்திரையோடே எழும் எனக்கு அது குறித்த ஒரு விழிப்புணர்வை உண்டாக்கி என்னை நானே சீர் செய்து கொள்ள உதவிய நூல் இது.

இந்நூல் உருவாக காரணமாக இருந்த நல்ல உள்ளங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றியையும் பாராட்டுகளையும் கூறிக்கொள்கின்றேன்.

எத்தனையோ புத்தகங்களைpபடிக்கின்றோம்..
அத்தனையும் ஏதோ ஒரு வகையில் நம் மனதில் இடம் பிடிக்கின்றன…

நமது உடல் ஆரோக்கியம் குறித்து படிக்க வேண்டிய நூல்களில் ஒன்றாக ஆரோக்கியம் &நல்வாழ்வு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் தைராய்டு நோய் குறித்த விழிப்புணர்வு நூல் இது.

Thursday, 8 December 2016

தி இந்து வின் “வீடில்லாத புத்தகங்கள்”-எஸ்.ராமகிருஷ்ணன்

தி இந்து வின் “வீடில்லாத புத்தகங்கள்”-எஸ்.ராமகிருஷ்ணன்

இரண்டுநாள் விடுமுறையில் ”வீடில்லாத புத்தகங்கள் ”என்ற நூலை வாசிக்க முடிந்தது.
எப்போதும் புதிய புத்தகங்களையே வாங்கப்பிடிக்கும் அதன் வாசனையும் தான்.

ஆனால் பழைய புத்தகக்கடைகளில் நாம் காண முடியாத புத்தகங்கள் புதையல்களாய் ஒளிந்திருக்கும் என்பதை எழுத்தாளர் எஸ்.ரா அவர்களின் நூல் கூறிய போது எத்தனை அறிவிலியாக அப்பொக்கிஷங்களைக்காணாது இருந்திருக்கின்றோம் என்பதை உணர்ந்தேன்..

பழைய புத்தகக்கடைகளிலேயே அவர் வாழ்ந்திருக்கிறார்.மிக அரிதான செய்திகளை அந்நூலில் அறிமுகப்படுத்தியுள்ள நூல்களிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது.

அதில் கூறப்பட்டுள்ள நூல்களை எல்லாம் படிக்க வேண்டும் என்ற ஆவல் பிறக்கின்றது..

வாய்ப்பிருந்தால் வாங்கிப்படியுங்கள்.

1]சிறுவயது மரணம்- ஜோனதன் கோசல்.

2] 12 மணிநேரம் -நீலவண்ணன்.

3]Memories of Madras-charless

4]வுதரிங் ஹைட்ஸ்

5] பாரன்ஹீட் 451-ரே பிராட்டரி.

6]தி.ஜானகிராமன் -ஜப்பானியப்பயணம்

7]சாமிநாதசர்மா- பர்மா பயணம்.

8]யுகாந்தா-ஐராவதி கார்வே.

9] சார்லி மற்றும் சாக்லேட் பேக்டரி-ரோல்தால் விகடம் பதிப்பகம்.

10]இழந்த சொர்க்கம்-மில்டன்

11]அர்ச்சுனன் தபசு-சா.பாலுசாமி

12]நரிக்குறவர் இன வரைவியல்-கரசூர் பத்மபாரதி.தமிழினி பதிப்பகம்.

13]பெரும்புள்ளிகள்-குகன்.

14]அற்புத குற்றங்கள்-பண்டித நடேச சாஸ்திரி.

15]பிளாச்சியோ-கொலாடியோ.பாவை பதிப்பகம்.

16] ஆங்கிலேயர்கள் இல்லாத இந்தியா-பியர்லோட்டி.சந்தியா பதிப்பகம் .

இன்னும் நிறைய ஆங்கில நூல்கள் குறித்தும் அவர் எழுதியுள்ளார்..

என்னை போன்று புதிதாய், தரமாய் வாசிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டவர்களுக்கு நல்ல நூல்களை அறிமுகம் செய்துள்ளது ..இந்நூல்.

இனி பழைய புத்தகங்களையும் பார்க்க வேண்டும்

நன்றி புத்தகத்திருவிழாவிற்கு...



Sunday, 4 December 2016

புத்தகதிருவிழா 4.12.16

புதுகை புத்த்கத்திருவிழா இனிதே நிறைவுற்றது..

எதிர்பார்த்ததை விட அதிக அளவு மக்கள்..குடும்பத்துடன் குழந்தைகளுடன் கலந்து கொண்டதைப்பார்க்கையில் மனதிற்கு மகிழ்வாக நிறைவாக இருந்தது..

திருமிகு பஷீர் அலி சகோவின் நாணயங்கள் கண்காட்சி விழாவிற்கு மேலும் மெருகூட்டியது..

எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமாரின் உரை அத்துணை சிறப்பு.தேவையான ,மனதை விழிக்க வைக்கும் பேச்சு.
”குரங்கிலிருந்து மனிதனை பிரித்து காட்டுவது புத்தகங்களே அதை படிப்பவர்களே உயிருள்ளவர்கள்.”.என்ற அவரின் பேச்சு அனைவரும் கேட்க வேண்டிய ஒன்று.

விழாவில் மாணவர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு புத்தகங்களை வாங்கியுள்ளனர்.
குலபதி பாலையா பள்ளி மாணவர்கள் எனது ஒரு கோப்பை மனிதம் நூலை வாங்கிக்கொண்டு இருந்தனர்...என்னை பார்த்ததும்  ,படிச்சு பார்த்தோம்மா நல்லா எழுதியிருக்கீங்கன்னு சொன்ன போது ...மனம் சொல்ல முடியாத உணர்வில்..

முகநூல் தோழமைகள்,பயிற்சிக்கு வந்திருந்த பிற மாவட்ட ஆசிரியர்கள்..என நிறைய தோழமைகளைக்காண முடிந்ததில் பெருமகிழ்வு..

காரைக்குடி Thendral Saai Nandavanam Chandrasekaran இன்னும் பலர் மகிழ்வாக இருந்தது...தோழமைகளைக்காணும் போது..கரந்தை அண்ணா வந்தது தெரிந்தால் பார்த்திருக்கலாம்..

பத்துநாட்கள் போனதே தெரியவில்லை..

புத்தகத்திருவிழாவை வெற்றிகரமாக ,நேர்த்தியாக,திட்டமிடலுடன்,மிகச்சிறப்பாக நடத்தி முடித்த [இவரால் மட்டும் தான் இத்தனை சிறப்பாக நடத்தமுடியும்] கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களுக்கும்,தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகளும் ,பாராட்டுகளும்..






















Wednesday, 30 November 2016

நீங்க வந்துட்டீங்களா புதுகை புத்தகத்திருவிழாவிற்கு..


நீங்க கிளம்பிட்டீங்களா புதுகை புத்தகத்திருவிழாவிற்கு..
 
இன்று கவிஞர் முத்துநிலவன் அவர்கள் பேசுகின்றார்.

மனம் மீள முடியாத துன்பத்தில் மூழ்கும் போதெல்லாம் எனை மீட்க புத்தகக்கடைக்குச் சென்று விடுவேன்..
புன்னகையால் என்னை வரவேற்று என்னை மீட்டு அவை எனக்கே என்னை தரும்...

எனக்கு மட்டும் இல்லை இது என்பதை புத்தகத்திருவிழா எனக்கு உணர்த்தியுள்ளது..

முதல் நாள் பேசிய எழுத்தாளர் எஸ் .ராமக்கிருஷ்ணன் அவர்களும்,
நேற்று பேசிய பேச்சாளர் மதுக்கூர் ராமலிங்கம் அவர்களும் தங்களை மீட்க புத்தகங்களேயே நாடுகின்றனர் என்று கேட்ட பொழுது..
மேலும் புத்தகங்களில் கரைந்து போகின்றேன்.

என்னை வழி நடத்திய புத்தகங்களை எனது மாணவிகளுக்கும் அறிமுகம் செய்ய புதுகை புத்தகத்திருவிழா உதவுகின்றது...

அம்மா உங்க கவிதைகள் ரொம்ப நல்லாருக்கும்மான்னு குழந்தைகள் சொல்லும் போது விருது கிடைத்த மகிழ்வு.

ஒவ்வொரு நாளும் முடியும் போது இன்னும் 4 நாள் தானே இருக்கும் என்ற கவலையும் வருகின்றது.


 புத்தகங்களை குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யுங்கள்..

இன்றைய சமூக சீர்கேட்டிலிருந்து உங்கள் குழந்தைகள்
மீள புத்தகங்களே கை கொடுக்கும்..

ஓடி ஓடி மேடையில் மற்றவர்களை ஏற்றி அழகு பார்த்து ,ஒவ்வொன்றையும் திட்டமிட்டு செய்யும் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் வியக்க வைக்கின்றார்...கற்றுக்கொள்ள வேண்டும் அவரிடமிருந்து நிறைய அனைவரும்..எந்த செயலையும் முழு முயற்சியுடன்...இறங்கி பணி செய்வதால் தான் இத்தனை உயரத்திற்கு வர முடியும் என்பதற்கு அவரே உதாரணம்..நன்றி அவருக்கு..

Monday, 28 November 2016

புதுக்கோட்டை கலக்குகின்றது..

புதுக்கோட்டை கலக்குகின்றது..

புத்தகத்திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஆளுமையான பேச்சாளர்கள் செவிக்கு விருந்து படைத்து வருகின்றனர்..
மாணவர்கள் கலை நிகழ்ச்சிகளால் கண்களுக்கு விருந்து படைக்கின்றன்ர்.
முதல்நாளில் எழுத்தாளர் எஸ்.ராமக்கிருஷ்ணன் அவர்கள் தனது நிதானமான...பேச்சால் கதைகள் பிறந்த கதையைக்கூறி மக்களை தனது பேச்சால் கட்டிப்போட்டார்.

இரண்டாம் நாளான நேற்று பேராசிரியர் ஞானசம்பந்தன் அவர்கள் தனது குழுவினரான சொல்லின் செல்வர் சம்பத்குமார்,பேராசிரியர் விஜயசுந்தரி,முனைவர் மகாசுந்தர்,கவிஞர் நதியா ஆகியோருடன் மிகச்சிறப்பாக நகைச்சுவையான பட்டிமன்றம் நடத்தி மக்களை மகிழவைத்தார்.








மூன்றாம் நாளான இன்று புதுகை பூபாலன் குழுவினர்..நமது மூடநம்பிக்கைகளை,முட்டாள் தனங்களை நகைச்சுவையாக சிந்திக்கும் படி நமது அறிவீனத்தை சுட்டிக்காட்டியது மிக அருமை..

பெரியாரை போற்றி,பெண்களை நகைச்சுவை என்ற பெயரில் கிண்டலடிக்காமல்,..அவர்களுக்கு படிக்க நேரம் கொடுங்கன்னு பேசி அவர்களுக்கு மதிப்பளித்தது பாரட்டுதற்குரியது..

பெண்கள் போகப்பொருளாக ,மட்டம் தட்டக்கூடிய பொருளாக,மதிப்பிழந்தவளாக சமூகம் அடையாளப்படுத்திக்கொண்டிருக்கும் காலத்தில் இப்படியும் பேச்சாளர்கள் இருப்பது கொஞ்சம் ஆறுதலாக உள்ளது..வாழ்த்துகள் பூபாலன் சார்.

ஆயிரக்கணக்கான மக்கள் விழாவில் கலந்து கொண்டு புத்தகங்களை அள்ளிச்செல்கின்றனர்...

இவ்விழாவைச்சிறப்பாக நடத்திக்கொண்டிருக்கும் கவிஞர் தங்கம்மூர்த்தி அவர்களுக்கும்,தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்

Monday, 6 June 2016

காற்றை அழைத்துச் செல்லும் இலைகள்-நூல்

நன்றி கவிஞர் வைகறைக்கும் கவிஞர் அம்சப்ரியா அவர்களுக்கும்.....

 கவிஞர் வைகறையின் தனித்தன்மையாகத் தான் படித்த நல்ல நூல்களைத் தந்து அதன் சிறப்பைக்கூறி, வாசிக்கச்சொல்லி பின் வாசித்துவிட்டீர்களா?என அக்கறையுடன் கேட்டு ,
இல்லையென நான் சொல்லும் போது பரவால்லமா நேரம் கிடைக்கும் போது அவசியம் படிங்கன்னு சொல்வது வழக்கம்... 

அப்படி தந்த நூல்களில் ஒன்று கவிஞர் அம்சப்ரியா அவர்களின்

 ”காற்றை அழைத்துச்செல்லும் இலைகள்”,

 நான் எழுதுவது கவிதையா என்ற சந்தேகம் முளைத்தெழுந்த ஒரு மாலைப்பொழுதில் தான், வைகறை இந்நூலைப் படிங்கம்மா,.. கவிதைக்குறித்த ஒரு புரிதல் உண்டாகும் என்றார்.

படிக்க வேண்டும் என்று எண்ணி எடுக்கும் போதெல்லாம் வேறு வேலைகளிலேயே கவனம் செல்லும்...

 நீண்ட நாட்களாக வாசிக்காமல் என் கைப்பையிலேயே இருந்த இக்கவிதை நூலை , இன்று கனத்த மழைபெய்து கொண்டிருந்த கணத்தில் கையிலெடுத்து வாசிக்கத்தூண்டியது , கவிஞர் அம்சப்ரியாவின் மற்றொரு நூல்.

பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் சிறு நூல் வரிசை வெளியீடான “கவிதைக்குள் அலையும் மனச்சிறகு..’” 

அதைப்படித்ததும் ஏற்பட்ட ஆவலில் “காற்றை அழைத்துச் செல்லும் இலைகள்”நூலைப்படிக்காமல் விட்டோமே என்ற ஆதங்கத்தில் படித்த போது....

 காற்றை மட்டுமல்ல கவிதையின் பயணத்தில் என்னையும் அழைத்துச் சென்று ஒரு நல்ல நூலுடன் பயணித்த நிறைவைத் தந்துள்ளது.

 கவிதை தனது பயணத்தில் புதுக்கவிதையிலிருந்து ,நவீனக்கவிதைக்கு செல்லத்துவங்கியதன் அவசியத்தை உணர்த்தியது.... ”கவிதையைக் கண்டறிந்து,கவிதையைப் புரிந்து கொண்டுஅதன் மைய ப்பொருளை உணர்ந்து,கவிதைக்கான ரசனையை உணரவைத்து,நவீனக்கவிதையின் அடையாளத்தை வரையறுத்து,கவிதை எவ்வாறு அணுகுதல் என்பதைக் கற்பித்து....நவீனக்கவிஞர்களின் சிறந்த கவிதைகளை அறிமுகப்படுத்துவதுடன் அவர்களை ஊக்குவித்தலுமாக 13 கட்டுரைகளில் கவிதையோடு கவிதையாக வாழ்ந்து நம்மையும் வாழவைக்கின்ற கவிஞர் அம்சப்ரியா அவர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.


 கவிதை எழுதும் அனைவரும் வாசிக்க வேண்டிய நூலாக

 கவிஞர் அம்சப்ரியா அவர்களின் ”காற்றை அழைத்துச் செல்லும் இலைகள்” விலை ரூ 80/
அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
41,கல்யாணசுந்தரம் தெரு,
பெரம்பூர், சென்னை-600011
044-255582552

Thursday, 31 March 2016

கவிஞர் நீலாவின் “அலையும் குரல்கள்”கவிதைநூல்

கவிஞர் நீலாவின் “அலையும் குரல்கள்”கவிதைநூல் ---------------------------------------------------------------

படித்து முடித்ததும் குடியும் ,குடித்தவனும் கண்முன் ஆக்ரோஷமாய் தலைவிரித்தாடும் காட்சி மனதில் நிழலாய்...

 போதையின் மயக்கத்தில் அவனும் அறியா அவனது நிலையை ,உணர்ந்தும் உணராதது போன்ற மாய நிலையை, மூளையை பிறழச்செய்யும் மதுவை ஆறென வீதியெங்கும் ஓடவிட்டு ,தனது அக்ரமங்களை அவனறியாமல் மூட நினைக்கும் அரசின் துரோகம் கண்முன் விரிகின்றது..

Wednesday, 24 February 2016

கூழாங்கற்கள்-கனவுப்பிரியன்

கூழாங்கற்கள்-கனவுப்பிரியன் -----------------------------------------------

நான் மிகவும் நேசிக்கும் ரத்தினவேல் அய்யாவிடமிருந்து எனக்கு எழுத்தாளர் கனவுப் பிரியன் அவர்களின் கூழாங்கற்கள் புத்தகம், வந்து 15 நாட்கள் இருக்கும் .சில காரணங்களால் அந்நூலை வாசிக்கும் காலம் இன்று தான் கிடைத்தது...

கனவுப்பிரியன் என்ற பெயருக்கு பொருத்தமான நூல் -கூழாங்கற்கள் நான் இப்ப எந்த நாட்டில் இருக்கேன்னு தெரியல...எந்த நாட்டினரோடு இருக்கேன்னும் தெரியல..செலவின்றி உலகம் சுற்றிய உணர்வைக்கொடுத்த நூலாசிரியருக்கு மிக்க நன்றி.

அழகிய வண்ண அட்டையுடன் 21 கதைகளை ,256 பக்கங்களில் ,விலை ரூ200 ,கவிஞர் வதிலைப்பிரபா தனது ஓவியா பதிப்பகம் மூலம் தரமான தாள்களைக்கொண்டு மிகச்சிறப்பாக இந்நூலை அச்சிட்டு உள்ளார். முகநூல் நண்பர்கள் திருமிகு நாறும்பூ நாதன்,திருமிகு ஷாஜகான் உள்படநால்வர் இந்நூலுக்கு அணி செய்துள்ளனர்.
 இனி கதைகளுக்கு வருவோம். ________________________________________

 யதார்த்தமான,நேர்மையான,சமூக அக்கறை நிறைந்த,வெளிநாட்டில் வாழும் இந்தியரின் மனதை காட்சிப்படுத்துகின்ற.... அரபு நாடுகளில் வாழும் பன்னாட்டு மனிதர்களின் வாழ்க்கையை அடையாளம் காட்டுகின்ற கதைகளாக அனைத்தும் உள்ளதை அறிய முடிகின்றது.

 1]இந்தமடம் இல்லன்னா சந்த மடம் - கதையில் வரும் ஐயப்பன் கதாபாத்திரத்தின் திறமைகளை யாரும் கண்டுகொள்ளாததன் விளைவே நம் நாட்டுக்கலைகளை நாம் இழந்து நிற்கிறோம்...என்ற உணர்வைத்தந்தது ...இக்கதை.
 2]கூழாங்கற்கள்- இக்கதையில் உறவுகளுக்குள் திருமணம் செய்யும் ஒருவன் தனது குழந்தை திக்குவாய் பிரச்சனை இருப்பதை தீர்க்கவே ...வெளிநாட்டில் ஒரு தீவில் பணிக்குச்செல்லும் ஒருவன் படும் வேதனைகள்,நேர்மையாக இருப்பதால் வரும் பாதிப்பை,குழந்தைக்காக சேர்த்து வைத்த கூழாங்கற்களால் அவன் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை அழகாக கூறுகிறது.
 3]களிமண் வீடு சிறுவயதில் பெற்றோருடன் நாம் இணைந்து வாழ்ந்த வாழ்க்கையை நாம் நம்குழந்தைகட்கு தந்திருக்கோமா என சிந்திக்க வைக்கும் கதையாக.....கதைமாந்தர்களுடன் நம்மையும் வாழ வைத்துள்ளார்.

 4]குண்டு பாகிஸ்தானி பாகிஸ்தானி என்றாலே எதிரி மனப்பான்மையை நம் ஆழ்மனதில் புதைத்து வைத்துள்ளோம் என்பது மறுக்கவியலா ஒன்று...சுத்தமற்ற குண்டு பாகிஸ்தானியைக்கண்டு அருவருத்து...அவர் செய்யும் செய்யும் உதவிகளை எல்லாம் சந்தேகக்கண் கொண்டே பார்த்து முடிவில் தெளிவடைவதாகக் கதையை எழுதியுள்ள பாங்கு மிக அருமை. 

5]வடிவு- இக்கதையில் வடிவை நேரில் பார்க்கும் உணர்வு...உண்டாக்கிவிடுகின்றார்...ஆசிரியர். ஒவ்வொரு கதையும் தனக்கென ஒரு பாணியில், ஒரு நாட்டில்,அறிவியல் செய்திகளை உள்ளடக்கியதாக,பணி செய்பவர்களின் மனநிலையைப்படம் பிடித்துக்காட்டுவதாக நேர்த்தியுடன் எழுதியுள்ளார்...வர்ணனைகள் குறைவு என்றாலும் காட்சிப்படுத்துவது இவருக்கு வசமாகியுள்ளது...
 காட்சிப்பிழை -கதை மனதைத்தொடுவதாக ...உயிரோட்டத்துடன் .அமைந்துள்ளது.
 உப்புக்காற்று -கதை கிராமத்து மக்களின் அன்பையும்,பாசத்தையும் காட்டுவதாக அமைந்துள்ளது.அப்பெண்களின் உணர்வுகளை அழகாக கடத்துகின்றார் நம்மிடையே..
 பனங்கொட்டை சாமியார் -கதை மிக அருமையாக முதியோர் இல்லங்களை ஒளிவீசச்செய்யும் தன்மையுடையதாக அமைந்துள்ளது...
 அவரு அணில்கும்ப்ளே மாதிரி-ஆஹா நல்ல நகைச்சுவை படித்து விட்டு நீண்ட நேரம் சிரித்துக்கொண்டே இருந்தேன்...தன்னைத்தானே கிண்டலடித்துக்கொள்ளும் வடிவேலுவைக்காண்பது போல் இருந்தது... மொத்தத்தில் பெரும்பாலானக் கதைகள் வெளிநாட்டில் பணிபுரிபவர்களின் உளவியலை.சிக்கல்களை, அவர்கள் தனக்கு பிடித்த உணவைக்கூட ஒதுக்கி வைத்து சூழ்நிலைக்கைதிகளாகக் பரிணமிப்பதைக்காட்டுகின்றன...
 தொடர்ந்து எழுதினால் நல்ல நாவலைப்படைக்கும் நாவலாசிரியராக கனவுப்பிரியன் ஆகக்கூடும் என்பதில் ஐயமில்லை... மனம் நிறைந்த வாழ்த்துகள் கனவுப்பிரியன் அவர்களுக்கு.இந்நூலை அன்புடன் அனுப்பி வைத்த ரத்தினவேல் அப்பாவிற்கு மனம் நிறைந்த நன்றி..அனைவரும் படிக்க வேண்டிய நூலாகக் கூழாங்கற்கள்...

Tuesday, 20 October 2015

kavithaikal thirakkum vanam-கவிதைகள் திறக்கும் வானம் -கவிதை நூல்

கதவுகள் திறக்கும் வானம்-
நந்தலாலா இணைய இதழில் இம்மாதம் வந்துள்ள எனது விமர்சனம்..



இந்தியப்பெண்கவிஞர்களின் கவிதைகள் -தொகுப்பு புதிய மாதவி.
விலை ரூ110/-
காவ்யா பதிப்பகம்.
----------------------------------------
விமர்சனம்

இந்தியப்பெண்ணியம் என்ற கட்டுரைக்காக திரட்டப்பட்ட கவிதைகளின் மொழியாக்கம் .

”பெண் மொழிக்குத் தேசங்கள் இல்லை, மொழிகள் இல்லை,இனங்கள் இல்லை”என்கிறார் புதிய மாதவி.பெண்கள் தங்களுக்குள் உரையாட மொழி ஒரு தடையில்லை என்பதை உணர முடிகின்றது.
“இந்தியாவில் பெண்ணியம் பேசுவதென்பது மிகவும் குழப்பமான ஒன்று.இந்தியப்பெண் பல நேரங்களில் பராசக்தியாக வழிபடப்படுகிறாள்,அதே நேரத்தில் பல சந்தர்ப்பங்களில் அவள் மிக கேவலமான அடிமையாக இழிவு செய்யப்படுகின்றாள்.ஒரு பெண் கவிஞர் என்ற வகையில் நான் அதுவா இதுவா என்கிற ஊஞ்சலாட்டத்தில் சிக்கிக்கொள்கிறேன் என்ற கவிஞர் கமலாதாஸின் கூற்றை எடுத்தாளுகின்றார்.

இந்நூல் 11 மொழிகளில்,19 கவிஞர்கள் எழுதிய 45 கவிதைகளைக்கொண்டுள்ளது.
சிந்தி  -3
தெலுங்கு -1
கன்னடம்-1
உருது-1
இந்தி -2
ஒடியா-3
மராத்தி-2
பஞ்சாபி-3
சந்தாலி-1
மைதிலி-1
சிரியா-1
சில மொழிகளின் பெயர் கூட நாம் அறியாத ஒன்றாக உள்ளது...
இக்கவிதைகளில் உள்ள எல்லா மொழிகளிலும் பெண்களின் மொழி கேட்கப்படாத ஒன்றாக சமையலறையிலும்,துணி அடுக்கும் அலமாரிகளிலும் ,அவள் புழங்கக்கூடிய பொருட்களிலும் ,இடங்களிலும் அலைமோதி தவிப்பதை உணரலாம்.
சிந்தி மொழிக்கவிஞர் -மேனகா சிவ்தஷ்ஷானியின் கவிதை பெண் தன் முகத்தைத்தேடும் நேரத்தை உணர ஆரம்பித்த தருணத்தைக்கூறுகின்றது.
             “அலங்கார மேசையில்
                ஜாடிகள் கவிழ்ந்து கிடக்கின்றன
               துண்டுகளாய் நொறுங்கிப்போய் பல வடிவங்களில்
               இவை எல்லாவற்றையும் 
              எப்படி ஒன்றாக சேர்க்கப்போகிறேன்
             இதன் கீறல்கள் வெளியில் தெரியாமல்”
உடைந்து போன பெண்ணின் மனதிற்கு உவமையாக ஜாடி கூறப்பட்டுள்ளது அருமை.

கொள்ளி வைத்தால் தான் சொர்க்கம் போகலாம்..மின்சார மயானம் வந்துவிட்ட நிலையில் நான் எப்படி சொர்க்கம் போவது என்ற கவலையை இந்திரா பூனா வாலாவின் கவிதை எடுத்துரைக்கின்றது.
            தனக்கென ஒரு வீடு,சொத்து எதுவுமற்ற நிலையில் நிறுவப்படாத கல்லறையில் உயிருடன் புதைக்கப்பட்டுளதாக கூறுகிறார்...பூபதி ஹரானந்தானி.

தெலுங்கு மொழிக்கவிதையான மந்தரப்புஹேமவதியின் கவிதைகளில் காதலிக்கும் போது காதலியின் சொற்களனைத்தும் கவிதையாகவும்,மனைவியான பின் வெற்று உரையாடலாக விருப்பமற்ற சொற்களாக மாறிவிடும் யதார்த்தத்தைச்சுட்டுகின்றது.


மனைவி தயாரித்த உணவை உண்டு கொண்டே அவளை குறைகூறும் கணவனை அடையாளம் காட்டுகின்றது ஒரு கவிதை.

கவிதைகளைப் பற்றிய பொதுவான பார்வையாக 

பெண்களின் அடிமைத்தனம்,வெளியே சொல்ல முடியாமல் மனதிற்குள்ளேயே  புழுங்கி புழுங்கி மனநோயாளியாக வீட்டிலிருக்கும் பொருட்களுடன் பேசி வாழ்தல்,பழைய புத்தகத்தில் ஏறிய கரையானாய் பெண்களின் வாழ்க்கை..பெண்களின் வேதனைகளையே பெரும்பாலான கவிதைகள் கூறுகின்றன..மொழி வேறுபாடின்றி பெண்களின் சுதந்திரமற்ற நிலையை கவிதைகள் பறை சாற்றுகின்றன...

பெண் “கரடுமுரடான
           கலாச்சார நூலேணியில்
           கஷ்டப்பட்டு தொங்கிக்கொண்டிருக்கிறாள்”
என மராத்திக்கவிஞர் மல்லிக அமர்ஷேக் கூறுகின்றார்.

சில கவிதைகள் சமூகச்சிந்தனையை மையமாக கொண்டிருக்கின்றன...ஆகச்சிறந்த கவிதைகளாக அவற்றை நான் உணர்கின்றேன்...

சந்தாலி மொழிக்கவிஞர் நிர்மலா புடுல்

“இனி ஒரு போது வேண்டாம் என சொல் “சஜோனி கிஷ்கு
என சமூகத்திற்காக பாடுபட்ட பெண்கள் அடைந்த துன்பங்களை கவிதைகளாக வடிக்கின்றார்.


                  ”கூரைகள் ஒழுகினால் ஒழுகிவிட்டு போகட்டும்
                   அதன் மேலேறி மராமத்து செய்யாதே
                   பகர்பூரின் பியாரி கெம்ப்ரொம் போல
                   நீயும் வல்லாங்கு  செய்யப்படுவாய்
                   உன்மனிதர்களால்
                   உன்னை அவர்கள் 
                    விட்டை விட்டு
                    வெளியேற்றி விடுவார்கள்

என்பதன் மூலம் சமூகத்திற்காகப்பாடுபடும் பெண்களைசமூக விரோதியைப்போல பார்ப்பதும்,வல்லாகு செய்வது,சூனியக்காரியாக சித்தரிப்பதும்,நிர்வானப்படுத்துவதும் ஆண்களால் சர்வசாதாரணமாக நடைபெறுகின்றதை சாட்டையால் அடித்து கூறுகின்றது..

சிரியா-பெண்கவிஞர் மரமல்மஷ்ரியின் ”குழந்தைகளின் விரல் நுனியில் சாக்பீசுகள்”கவிதை
                
சிரியா புரட்சியைப்பற்றி 

      ”பாடசாலையின் விளையாட்டு மைதானத்தின்
     சுவர்களில் எழுதப்பட்டிருந்தது
      விடுதலை என்ற சொல்
      சரித்திரத்தின் சுவர்களில் விடுதலை
      குருதியால் எழுதியது
     அவர்களின்  பெயர்களை”

“சிரியாவின் குழந்தைகள்
சவப்பெட்டியில் மூடப்பட்டுருக்கிறார்கள்
சர்க்கரை மிட்டாய்களைப்போல”

என்ற கவிதை சிரியாவில் நடைபெறும் வன்முறைகளால் குழந்தைகள் அழிக்கப்படுவதை கண்முன் கொண்டுவந்து நிறுத்துகின்றது...

                           “சிரியாவின் சிறைக்கூடத்தில் 
                          பிறந்த மகன்
                        கற்பழிக்கப்பட்ட தன் தாயிடம் கேட்கிறான்
                        அம்மா” ஒரு கதை சொல்லு”


அவள் கூறும் கதையில் வரும் சன்னலைப்பற்றியும், சன்னலில் உட்காரும் பறவைகளைப்பற்றியும் கேட்க ,

                    ” சுவரில் ஒரு சன்னலையும் குட்டிப்பையனையும் 
                    வரைந்தாள்
                     கட்டிப்பயனுக்கு இரு சிறகுகளுடன்”
சிறையில் வீழ்ந்து மடியும் சிரியா நாட்டு மக்களின் நிலையை உலகிற்கு காட்சிப்படுத்துகின்றார்.

சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகள் கடந்த பின்னரும் பெண்களின்  சுதந்திரம் பேச்சளவில் தான் உள்ளதென்பதை கவிதைகள் எடுத்துக்காட்டுகின்றது...மீறி சமூகத்திற்காக போராடும் பெண்களை உடல் அரசியலால் அவளை வீழ்த்தி வீட்டுக்குள் முடக்கி வைக்க சமூகம் முயல்வதை கூறுகின்றன சில கவிதைகள்...

இந்தியப்பெண்களின் கவிதைகளைத்தொகுத்து ஒரு உலகளாவியப்பார்வையில் பெண் இனத்தின் நிலைமையை உணர்த்திய கவிஞர் புதிய மாதவிக்கு அன்பு நிறைந்த வாழ்த்துகளும் ...,பாராட்டுகளும்...

Wednesday, 22 April 2015

இன்று உலக புத்தக தினம்-23.4.15


இன்று உலக புத்தக தினம்-23.4.15

சிறு வயதில் பாலமித்ரா, அம்புலி மாமா,விக்கிரமாதித்யன் கதைகளைச்சுமந்து என் கற்பனையை வளர்த்து மகிழ்ந்தது.





பதின் வயதில் பட்டுகோட்டை பிரபாகர்,இராஜேஷ்குமார்,சுபா கதைகளைச்சுமந்து வாழ்வை பிரமிக்க வைத்தது.

பருவத்தில் இரமணிச்சந்திரன் ,பாலக்குமாரன் கதைகளைச்சுமந்து வாழ்வை அடையாளம் காட்டியது...

பொன்னியின் செல்வன் ,அலையோசை,கடல்புறாவென கல்கி சாண்டில்யனின் கதைகளால் வரலாறை கண்முன் நிறுத்தியது

ஆனந்தவிகடனாய் இளவயது முதல் என்னுடனே வாழ்கிறது...

கதைகளை கன்னாபின்னா வென சென்றவளை சிறந்த நூல்கள் வலையிட்டு இழுத்து தனக்குள் புதைத்துக்கொண்டது...

என்னில் கலந்த நூல்கள் என் கல்லறையிலும் துணையாய் வருவேனெ உறுதியளித்து என்னுடனே வாழ்கின்ற புத்தகத்தை இன்று கொண்டாடும் தினமாம்...

வாழ்த்துவோமே..