World Tamil Blog Aggregator Thendral: September 2018

Monday 10 September 2018

வளரிளம் பெண்கள்


புதுக்கோட்டை ரோட்டரி சங்கக் கூட்டம்.
இன்று மாலை மிகச் சிறப்பாக நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக அழைத்து இருந்தனர்."வளரிளம் பெண்களும் ஊடகங்களும்'என்ற தலைப்பு.என் நோக்கத்தை காட்டிய தலைப்பில் பேசினேன்.
அனைவர் மனதிலும் வருங்காலச்சந்ததிகளை வழி நடத்த வேண்டும் என்று மனதார நினைத்ததால் தங்கள் ஆதங்கத்தை கூறினர். புதுக்கோட்டை மாவட்டம் ரோட்டரி சங்கத்தின் வருங்கால கவர்னர் பெருமைக்குரிய திருமிகு சொக்கலிங்கம் அவர்கள் ரோட்டரி சங்கத்தின் மூலமாக நிச்சயமாக செய்வோம் என்று உறுதி அளித்து உள்ளார்கள்.
பாடத்திட்டக்குழு பேராசிரியர் சங்கீதா அவர்களிடமும் பேசிய போது நிச்சயமாக செய்வோம் என்று உறுதி அளித்து உள்ளார்கள்.
இது மிகப்பெரிய சவால்.அனைவரும் இணைந்து வளரிளம் குழந்தைகளுக்கு வழி காட்ட வேண்டிய கடமை உள்ளது.
இணையும் கரங்கள் என்ற முகநூல் குழுவை உருவாக்கியதன் நோக்கத்தை செயல் படுத்தும் காலம் வந்துவிட்டது.
இணைவோம் ..செயல்பட..
இவ்வாய்ப்பை அளித்த புதுகை செல்வா அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி.
#pc புதுகை செல்வா