World Tamil Blog Aggregator Thendral: வலையெழுத்து
Showing posts with label வலையெழுத்து. Show all posts
Showing posts with label வலையெழுத்து. Show all posts

Saturday, 14 November 2015

நந்தலாலா இணைய இதழ்-வலையெழுத்து

நந்தலாலா இணைய இதழ்-வலையெழுத்து

வலையில் வீழ்வோமா?
                    எனது வலையில் வீழும் அன்பு இதயங்களுக்கு மனம் நிறைந்த வணக்கம்….
             உங்களுடன் சிலநாள் அகமும் புறமும் மகிழ …மண்ணில்  கலந்த மழையாய்….வசப்படும் வார்த்தைகளால்…வலைப்பூக்களின் வாசத்தில் மகிழப்போகின்றேன்…இவ்வரிய வாய்ப்பைத் தந்த நந்தலாலா இணைய இதழாசிரியருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்….

             வலைப்பூக்களை அறிமுகம் செய்யும் இவ்வரிசையில் யாரை அறிமுகம் செய்யப்போகின்றீர்கள் எனக்கேட்டதும்…வலைப்பதிவர் விழா 2015 இல் நடந்த போட்டிகளில் கலந்து கொண்டு கட்டுரைப்போட்டியில் சுற்றுச்சூழல் குறித்த
 ”கான் ஊடுருவும் கயமை”
என்ற தலைப்பில் எழுதி பரிசை வென்ற அன்புக்குரிய சகோதரி கீதமஞ்சரிவலைத்தள ஆசிரியர் ,

கீதாமதிவாணன் சட்டென்று நினைவிற்கு வந்தார்.ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து கொண்டு நமது இதயங்களை எல்லாம் வார்த்தை வலையில் வீழ்த்தி அங்குள்ள பறவைகளை, விலங்குகளை,பூக்களை நமக்கு அறிமுகம் செய்யும் ,இயற்கையை நேசிக்கின்ற இவரின் பதிவுகள் ஒவ்வொன்றும் நம்மை வியப்பின் எல்லையைத்தொடவைக்கும்…ஆழ்ந்த, விரிவான,அறிவுப்புதையல்களை தன்னுள் கொண்டிருப்பவை… இவரை இன்று அனைவருக்கும் அறிமுகம் செய்வதில் மட்டில்லா மகிழ்வடைகின்றேன்…
மேலும் தொடர....
http://www.nanthalaalaa.com/search/label/வலையெழுத்து