World Tamil Blog Aggregator Thendral: December 2017

Sunday 10 December 2017

மாணவன் பாலா

10.12.17.
சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்.
19 வருடங்கள் கழித்து பார்க்கிறான் கறாரான ஊபர் டிரைவராக Osthi Bala என்கிற பாலு.
1990முதல் 2002 வரை அரியலூர் மாவட்டம் மேலப்பழுவூரில் பணிபுரிந்த போது ... என்னிடம் படித்த பாலு என்கிற வாலு.
இவன் அண்ணன்  என்மீது அதிக பிரியமாக இருக்கும் Selva Kumar  .
அதே சேட்டை, அதிகாரம் , எப்போதும் வாய் ஓயாமல் பேசும் பேச்சு.
சின்ன வண்டில லக்கேஜ் ஏத்த கூடாதுன்னு சண்டை போட்டுக்கொண்டு வண்டியை எடுத்தவன்.என்னை பார்த்ததும் நீங்கள் கீதா டீச்சர் தானேன்னு ஆச்சரியமாக கேட்டான் .
நான் யாருப்பா நீ என்றேன் . என்ன டீச்சர் என்னை தெரியவில்லையா நான் தான் பாலு என்றான்.
அப்பா மாதிரியே  நீயும் கார் வாங்கிட்டியா என்றேன்.
நான் தான் அப்பவே டிரைவராக தான் ஆவேன்னு சொன்னேன்ல என்றான்.
பாருங்கள் உங்களப்போல வலதுகை ல வாட்ச் கட்டிருக்கேன் என்கிறான்.என்னா அடி அடிப்பீங்க டீச்சர் அதனால் தான் நல்லா இருக்கேன் என்கிறான்.
சென்னை ட்ராஃபிக் ல அட்டகாசமாக வண்டி ஓட்டியவனை பார்த்து ரசித்து கொண்டே வந்தேன்.
சொந்த காரில் ஜம்முன்னு என்னை இறக்கி விட்டு பணம் வாங்கவே மாட்டேன்னு கண்கலங்க மறுத்தவனின் அன்பிற்கு என்ன கைம்மாறு செய்வது.
மாணவர்கள் மனதில் நிற்கும் ஆசிரியராக வாழ்கிறேன் என்பதை விட வேறு என்ன வேண்டும்?.