World Tamil Blog Aggregator Thendral: சமூகம்
Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Thursday, 1 October 2020

மனிதம்

மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
தோழி தேன்மதுரத்தமிழ் கிரேஸ் பொறியியல் அறிஞர் சங்க இலக்கியம் பாடும் கவிஞர் இவர்... இவருக்கு உற்ற இணையராக சகோதரர் திருமிகு வினோத்.
கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தாலும் இன்னும் இன்னும் என ஓடும் சமூகத்தில் இவர்கள் வித்தியாசமானவர்கள்..
தங்களின் ஊதியத்தில்‌ ஒரு பகுதியை எளிய மாணவர்களின் கல்விக்காக செலவிடும் நல்ல உள்ளங்கள்..
புதுக்கோட்டை மகளாய் எங்கள் சுக துக்கங்களில் பங்கு கொள்ளும் தோழி இருப்பது வாழ்வின் வரம்.
கல்விக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்து 5 கல்லூரி மாணவர்களின் கல்வி கட்டணத்தை தருவதாக பொறுப்பேற்று ரூ 50,000 அனுப்பி உள்ளார்.
திகைப்பில் மனம் நெகிழ்கிறது.இவரது மகன் படிக்கும் பள்ளியில் கல்வியில் ஒரு பகுதியாக சர்வீஸ் செய்து சான்று காட்ட வேண்டும் .
தங்களுக்குள் ஒரு குழுவை உருவாக்கி எப்படி சேவை செய்து பணம் திரட்டி இந்திய மாணவர்களின் கல்வி உதவுவது என்று திட்டமிட்டு உள்ளார்.எப்படி பணம் கிடைக்கும் என்று கேட்டேன்... அங்கு வீட்டு வேலைகளில் பிள்ளைகள் உதவி செய்தால் பணம் தர வேண்டுமாம்.இங்கு பணம் தரேன்னாலும் செய்ய மாட்டார்கள் தானே.மேலும் அருகில் உள்ள வீடுகளில் அவர்களுக்கு உதவிகள் செய்து பணம் திரட்டலாமாம் என்று கூறியதாக தோழி கூறிய போது கண்களில் நீர் நிறைந்தது.
எடுத்துக்காட்டாக வாழும் பெற்றோர்களின் பிள்ளைகள் வேறு எப்படி இருப்பார்கள்..
எங்கள் பள்ளியில் படித்து தற்போது கல்லூரியில் படிக்கும் இருமாணவிகளுக்கு தலா ரூ 5000 என ரூ 10000  நேற்று பள்ளி தலைமையாசிரியர், உதவித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது.. தலைமைஆசிரியர் உள்பட அனைவரும் மகிழ்ந்து பாராட்டிய போது நல்ல தோழமைகளை உறவாகப் பெற்ற நிறைவு.
ஆசிரியர் Antony Pudugai  அவர்கள் மூலமாக‌ வல்லத்திராக்கோட்டையில் படிக்கும் 4 மாணவர்களுக்கு ரூ40,000 கல்விக்கட்டணமாக தர உள்ளோம்.
பணம் எவ்வளவு வரலாம் ஆனால் மனம் ஒரு சிலருக்கே வாய்க்கும்‌...
இதற்கு முன்பும் நிறைய பள்ளிகளுக்கு நண்பர்களுடன் இணைந்து உதவிகள் செய்து உள்ளார்கள்.அவர்களுக்கு‌ நன்றி கூறப்போவதில்லை வாழ்வில் மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.. அவர்கள் உயர்ந்தால் மேலும் பல மாணவர்கள் வாழ்வில் கல்வி ஒளியேற்றுவார்கள்.

Thursday, 29 June 2017

எங்கே கோளாறு?

எங்கே கோளாறு?

அரசுப்பயிற்சி பள்ளியில் படிக்கும் மாணவர்க்கு கல்வி உதவித்தொகை ரூ௨௦௦௦.

தனியார் பயிற்சிப் பள்ளியில் படிக்கும் மாணவர்க்கு
ரூ 23000 கல்வி உதவித்தொகை .

அதிக மதிப்பெண்கள் பெற்று முறையாக அரசுப்பயிற்சி பள்ளி மாணவிகளுக்கு குறைவான தொகை ஏன் ? ,

குறைவான மதிப்பெண்கள் பெற்று ,தேர்வுக்கு வந்தால் மட்டும் போதும் என்று சொல்லி அவர்களது
சேர்க்கையைக்காட்டி அத்தனை மாணவிகளுக்கும் கல்வி உதவித்தொகை அரசாங்கத்திடம் பெற்று ,சீருடை இலவசம் ,எந்த பணமும் கட்ட வேண்டாம் ....உதவித்தொகை முலமே படித்து விடலாம் என ஆசைக்காட்டி பயிற்சிப்பள்ளி நடத்துகின்ற தனியார் பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு ஏன் அதிகத்தொகை ? .

சரி அப்படி படிக்கின்ற மாணவர்களுக்காவது பயன் இருக்கா என்றால் ...அதுவும் இல்லை வெறுமே சான்றிதழ் வாங்கிக்கொண்டு இருக்க வேண்டியது தான் .

tet தேர்வில் மதிப்பெண் வாங்கினாலும் வெயிட்டேஜ் என்று , பத்தாம் வகுப்பு ,பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் குறைந்திருந்தால் வேலை கிடைக்காது ....

இப்படி மாணவர்கள் ஏமாந்து போகும் நிலை ஏன்?

இப்படித்தான் பொறியியல் படிக்கும் மாணவர்களின் நிலையும் ..ஏதோ கிடைத்ததைப்படித்து விட்டு வேலையின்றி அலையும் ஒரு சமுதாயத்தை உருவாக்கி கொண்டுள்ளோம் ..என்ன செய்வது இந்நிலை தெளிவாக அனைவருக்கும் தெரிந்தும் ஏதும் செய்ய முடியாத கையறு நிலை ....

Wednesday, 21 June 2017

தமிழர் உரிமை மாநாடு

எது நமது நாகரீகம் ?

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்து சமவெளி நாகரீகமா ?
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட "கீழடி "நாகரீகமா ?

என் மாணவிகளிடம்நான்  அடிக்கடி விவாதிக்கும் கருப்பொருள் ...

 புதுக்கோட்டை 'திடல் 'இலக்கியக்கூடல் இன்று ,புதுக்கோட்டை மாவட்ட  த.மு.எ.க.ச.  "தமிழர் உரிமை மாநாடு" கூட்டத்தை மாலை  தமிழ்நாடு அறிவியல் இயக்கக்கூடத்தில் நடத்தியது .

மாவட்டச்செயலாளர் தோழர் மதியழகன் அவர்கள் ஒருங்கிணைக்க ,மாவட்டப்பொருளாளர்  தோழர்  ஸ்டாலின் அவர்கள் வரவேற்க  ,புதுக்கோட்டை மாவட்ட த.மு.எ.க.ச. தலைவர் தோழர் இரமா ராமநாதன்அவர்கள்  தலைமை ஏற்க ,,மாநிலசெயற்குழு உறுப்பினர் கவிஞர் முத்துநிலவன்  அவர்கள்
முன்னிலையில்,  மாநிலத்துணைச் செயலாளர் கவிஞர்  நீலா அவர்கள் பாடலுடன் துவங்க  ,சிறப்பு விருந்தினராக,   த.மு.எ.க.ச.வின் மாநிலப் பொதுச் செயலாளரும் ,சாகித்ய அகாதமி விருதாளரும் ,தமிழர் வரலாற்றை உலகுக்கு வெளிக்கொணர தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கும் தோழர் சு.வெங்கடேசன் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார் .எழுத்தாளரும் விமர்சகருமான கவிஞர் ராசி பன்னீர் செல்வம் நன்றி கூறினார் .  

Saturday, 29 April 2017

மனதை நிறைத்த காட்சி..

மனதை நிறைத்த காட்சி ..

புதுகை -தஞ்சை நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது...

,கருத்து நீண்டிருந்த தார்ச்சாலையின் இருபக்கங்களிலும் மரப்போத்துகள் பாதுகாப்பாக நடப்பட்டுள்ளதைக் கண்ட போது..மனம் நிறைவாக இருந்தது ....இதுவரை நான் பயணித்துள்ள சாலைகளிலெல்லாம் மரங்களின் மரண ஓசையோடும்,மனம் நிறைய வேதனையோடும் வெறுமை சூழ ...கண்ட நிலையை மறக்கச்செய்தது புதுகை -தஞ்சை பயணச்சாலை ....

இன்னும் சில வருடங்களில் அவை நெடுமரங்களாக வளர்ந்து பசுமைப்பாதையாக நிழல்தரும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.இதற்கு காரணமான நல்ல உள்ளங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்..

இதை ஏன் மற்ற சாலைகளில் பயன் படுத்த கூடாது ..?
சுங்க வரி வசூலிக்கும் நிறுவனங்கள் தான் அழித்த மரங்களுக்கு பதிலாக மரங்களை நட்டு வளர்க்க வேண்டும் என்று யார் உத்தரவிட வேண்டும் ...?

மரங்களுக்காக குரல் எழுப்ப வேண்டியது நம் கடமை அல்லவா?

அருகில் அமர்ந்து இருந்த அம்மா பேருந்தில் இரண்டு டிக்கெட் எடுத்தார் ..ஒருவர் மட்டும் தானே இருக்கின்றார் என்று இன்னொருவர் எங்கே அம்மா ?என்றேன் ...பின்னாடி என்மவ உட்கார்ந்துருக்காம்மான்னு சொன்னார். அப்படியா என்ன பண்றாங்க? ..வல்லம் கல்லூரியில் படிக்கிறாங்கம்மா..என்றார் .இங்கு தான் இடமிருக்கே ஏன் தனியா உட்காருந்துருக்காங்க?


நான் வெள்ளரிக்காய் கூடையோட இப்படி புடவைக்கட்டிக்கிட்டு இருக்கேன்ல அதனால எங்கூட உட்கார வெட்கப்பட்டுக்கிட்டு அங்கன போய் உட்கார்ந்துருக்காமான்னு பாவம் படிக்கிற புள்ளைக்கு சங்கடமா இருக்கும்ல அதான்னு சொன்ன போது...

இப்படிப்பட்ட அம்மாக்களால் தான் உலகம் உய்கிறது ..என்று தோன்றியது ..நாசமா போன கல்வி அம்மாவையும் அவமானப்பொருளாக்கியக் கொடுமை... ..

Tuesday, 11 April 2017

கக்கூஸ்

கக்கூஸ்-ஆவணப்படம் திரையிடல்

நாள் :15.4.17

இடம் :கந்தர்வன் அரங்கம்

8,அய்யனார்புரம் மூன்றாம் வீதி
புதுக்கோட்டை

குழந்தையின் மலத்தை தாய் கூட சற்று முகம் சுழித்தே அள்ளுவாள் ...

ஆனால் தினமும் ஆயிரக்கணக்கான மனிதர்களின் நரகலை தனது கைகளால் அள்ளி சுத்தம் செய்பவர்களை எண்ணி பார்க்க நமக்கு எங்கே நேரம் இருக்கின்றது ..

எண்ணிப்பார்க்க கூட தகுதியற்றவர்களாக வாழ்பவர்கள். நமது கழிவுகளைச் சுத்தம் செய்பவர்களை கடவுளுக்கு சமமாக வைத்து பார்க்க வேண்டுமல்லவா ...வராக அவதாரத்தை அவர்களுக்கு முக்கியத்துவம்...கொடுக்கவே எடுத்தாரோ உண்மையாக இருந்தால் ...கடவுள்

Monday, 10 April 2017

போர்க்குரல் ஒலிக்கின்றது ..

போர்க்குரல் ஒலிக்கின்றது ..

தெருவில் இறங்கி வருமுன் காக்க போர்க்குரல்
எழுப்புகின்றனர் ..குழந்தைகளும் ,பெண்களும் ...அவர்களோடு சில ஆண்கள் மட்டும் ...

மதுக்கடைகளை குடியிருப்பு பகுதியில் திறக்காதே
என்று ...?

எல்லாவற்றிற்கும் கூடும் ஆண்கள் கூட்டம் இதற்கு மட்டும் ஒதுங்குவது ஏன்?

கடையைத் திறந்தால் அடித்து நொறுக்குவோம் என்று அந்தப்பெண் கூறுவது உங்கள் குடும்பத்திற்காகவும் தான் ...

அதிகமான விபத்துகளும்,,அதிகமாக பென்குழந்தைகள் முதல் மூதாட்டிவரை பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படுவதற்கும்  காரணமாக இருப்பது மதுதான் என்பது அனைவரும் அறிந்த உண்மையல்லவா ?

மதுக்கடை வருமானத்தில் மக்களின் உயிரைப்பறித்து இலவசங்கள் கொடுக்க நினைக்கும் அரசா மக்களைக்காக்கும் ...?

நம்மை நாமே தான் காத்துக்கொள்ள வேண்டும்..

நெடுஞ்சாலை மதுக்கடைகள் குடியிருப்புகளில் நுழைவது இன்னும் மோசமான நிலையே உண்டாக்கும் ......

மக்கள் நினைத்தால் மட்டுமே முதலாளித்துவ,சுயநல அரசை ஒழிக்க முடியும் ...

அன்று குழந்தை திருமணத்தால் பெண்குழந்தைகள் லட்சக்கணக்கில் விதவைகளாக இருந்தனர் என்பது வரலாறு ..
 
இன்று மதுவால் பெண்கள் லட்சக்கணக்கில் விதவைகளாக ஆக்கப்படுகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை

பெண்களுக்கு துணை நில்லுங்கள் ..அவர்கள் உங்கள்
சகோதரிகள் தான் ....

Friday, 7 April 2017

ஆணும் பெண்ணும் சமமா ?


 
ஆணும் பெண்ணும் சமமா ?

ஒன்பதாம் வகுப்பு மாணவி இன்று என்னிடம் வந்து மிக ரகசியமாக அம்மா ஒருத்தன் என் பின்னாடியே வந்து அவனை காதலிக்கச்சொல்லி கட்டாயப்படுத்துகின்றான் ...இல்லைனா விசம் குடிச்சி நீதான் காரணம்னு சொல்லிட்டு செத்து போய்டுவேன் ...உன் பள்ளியில் உன்னை அவமானப்படுத்துவேன்னு மிரட்டுகின்றான்மா. அப்பா அம்மா கிட்ட சொன்னேன் அவங்க அவன் ரவுடி நீ தான் கவனமா போனும்னு பயப்படுறாங்கம்மா...

என்னம்மா செய்வதுன்னு கலங்கியபடி கேட்ட பொழுது..மனம் வெடிக்கும் நிலை..ஒரு பெண் குழந்தை எதெற்கெல்லாம் போராடி வளர வேண்டியுள்ளது ..

துணிச்சலா இருடா இதற்கெல்லாம் பயப்படக் கூடாதுன்னு தைரியம் கொடுத்தாலும் ..இனி உன் அப்பா கூடவே வந்துட்டு போண்ணு தான் சொல்ல முடிந்தது ...

அதையும் மீறி தொல்லை செய்தால் காவல் துறையில் சொல்லிடுவோம்னு சொல்லி அனுப்பினாலும் மனதில் ஒரு அச்சம் படுபாவி ஆசிட்டை ஊத்திடுவனோன்னு..
 
தனக்கு தானே குழி தோண்டும் மாணவிகள் ....

ஆண்பிள்ளைகள் மட்டும் குறை கூறினால் உண்மையை மறைப்பதாக ...ஆகும் ..

இன்று பெண் குழந்தைகள் பெற்றோர்களைப்படுத்தும் பாடு..சொல்லி மாளாது...

பருவத்தின் வாயில் நின்று அவர்கள் இக்காலக்கட்டத்தில் மனதை வழிப்படுத்தும் முறையை கூறினாலும் புறந்தள்ளி வீழவே துணியும் நிலை.

பெண்குழந்தைகள் படும் பாடுகளை தினமும் அறிவுறுத்தி நீங்கள் தான் உங்களுக்கு முதல் பாதுகாப்பு ...எதையும் மறைக்காமல் பெற்றோரிடம் கூறுங்கள் ...என்று எவ்வளவு முறை சொன்னாலும் விழலுக்கு இறைத்த நீராக ஆகின்றது ...

திரைப்பட கதாநாயகிகள் போல் காதல் மட்டுமே வாழ்க்கை எண்ணி வலையில் வீழ்கின்றனர் ..

முன்பெல்லாம் சில மாணவிகள் மட்டுமே இப்படி இருப்பார்கள்..ஆனால் இன்று அதற்கு எதிராக பல மாணவிகள் விட்டில் பூச்சிகளாக ...

பெண்ணை பெற்ற பெற்றோர்கள் அவர்களை வழி நடத்த முடியாமல் இரத்த கண்ணீர் வடிக்கின்றனர் ...

பல பெண்களை சுற்றும் ஒருவன் எனத்தெரிந்தும் அவன் தான் வேண்டும் என முட்டாள் தனமாக கூறும் மாணவிகளின் வாழ்க்கை என்ன ஆவது .....

திரைப்படங்கள் ரவுடிகளின் பின்னே அலைய வைத்து வருங்கால சந்ததிகளை வீணாக்கியது தான்  மிச்சம் ..

Thursday, 23 March 2017

காவு கொடுக்கவா வளர்த்தோம் ..

காவு கொடுக்கவா வளர்த்தோம் ..

எத்தனையோ வலிகளில் ஆறுதலாய் இருப்பது குழந்தைகளே ....

என் தோழியின் கவலைக்கு மருந்தாக அவர்களின் குழந்தைகளே இருந்தனர் .வேதனைகளை அவர்களின் வளர்ச்சி கண்டு துடைத்து வாழ்ந்தார் ....

சில மாதங்களுக்கு முன் கடைவீதியில் மகிழ்வாய் ஓடி வந்து கீதா நல்லாருக்கீங்களான்னு கேட்டு கையை பிடித்த போது , நீண்ட நாள் கழித்து அவர் முகத்தில் சிரிப்பை பார்த்தேன் . மனம் நிம்மதியாய் இருந்தது ...

நலமான்னு கேட்டேன் ..நல்லாருக்கேன்..உங்களுக்கு தெரியுமா ரமேஷுக்கு வங்கில வேலைக்கிடைச்சிருக்கு..கரூரில் எஸ்.பி.ஐ.வங்கில பணி செய்கின்றான் என்ற போது அப்பாடான்னு இருந்துச்சு ..

நல்லா படிக்கிற பையன் ...பொறியாளர் படிப்பு முடித்த உடன் வங்கித்தேர்வு எழுதி தேர்வாகியிருந்தான் .இனியாவது மகிழ்வா இருங்கம்மா கஷ்டப்பட்டதுக்கு விடிவு காலம் வந்துடுச்சுன்னு ..மனம் நிறைய சொன்னேன் ..

நல்லவங்க நல்லாருக்க கூடாதுன்னு இருக்கும் போல ...

இன்று அவன் இல்லை.

என்ன சொல்வது திங்களன்று காலை பணிக்கு சென்றவன்..ஏன் செவ்வாய் கிழமை காலை அதிகாலையில் நண்பனிடம் வண்டியை வாங்கிக்கொண்டு புதுக்கோட்டைக்கு வரணும்?. நண்பனிடமும் கூறாமல் ,அம்மாக்கிட்டயும் வரேன்னு சொல்லாமல்....வந்து புதுகை எல்லையில் விபத்துக்குள்ளாகி ஏன் கிடக்கணும் ..?.

தன்  ஆசை மகனின் மரணத்திற்கு காரணம் தெரியாமல் வாழ்வதென்பது ஒரு பெற்றோருக்கு எவ்வளவு வலியைத்தரும் ..

மரணத்திற்கு பலி தரவா குழந்தைகள் ...

அவர்கள் பாதுகாப்பை யோசிக்காமல் ..இப்படி அகலமாக போவதற்கா பிறக்கின்றனர் ..

அதே இடத்தில் இன்று மாலை ஒரு இருபத்து நான்கு வயது வாலிபன் விபத்துக்குள்ளாகி அடையாளம் தெரியாமல் புதுகை மருத்துவமனையில் உள்ளதாக முகநூலில் செய்தி வருகின்றது..

எப்படி பாதுகாப்பாக வண்டி ஓட்டுவதென்பதை இன்னும் கற்று கொடுக்கவில்லையா அல்லது அவர்களின் அலட்சியமே காரணமா ?

தலைக்கவசம் அணிந்திருந்தால் அவர்கள் இருவரும் இன்று உயிருடன் இருந்திருப்பார்கள் ....

பெற்றோர்களை வேதனைக்கடலில் ஆழ்த்தவா பிள்ளைகள் .

...நடைப்பிணமாக இனி அவர்களது வாழ்க்கை ....

Saturday, 18 March 2017

எந்த மரம் குடை பிடிச்சிட்டுருக்கு?

எந்த மரம் குடை பிடிச்சிட்டுருக்கு?

 இப்படி உரிமையாய் பேசும் உறவுகளைத் தந்த முகநூலிற்கு எனது மனம் நிறைந்த நன்றி...

 பேலியோ டயட்டிற்காக....நமது உள் உறுப்புகளின் காயத்தை சரி செய்ய பசுமஞ்சள் கொழுப்பு உணவுக்குபின் சாப்பிட வேண்டும்...அதனுடன் ஒரு சின்ன வெங்காயம்,எட்டு மிளகு,மூன்று துளசி இலை சேர்த்து சாப்பிடுவதற்கு பசு மஞ்சள் வைத்தியம் என்று பெயர்.. 

இதற்காக சேலத்தில் இயற்கை விவசாயத்திற்காகவே வாழ்கின்ற முகநூல் சகோதரியான @ Aaranya Alliஅவர்களிடம் பேசிய பொழுது ஒரு விவசாயி மகளாக,பூமியின் மீது அவர் கொண்டுள்ள அக்கறை மனதை நெகிழ வைத்தது.. இயற்கையாக வேளாண்மை செய்யும் எண்ணம் வந்த தருணத்தை அவர்கள் கூறிய போழுது எத்தனை பொறுப்பற்று வாழ்கின்றோம் எனத் தோன்றியது.. 

Monday, 23 January 2017

இப்படியொரு போராட்டம் இனி வருமா?

இப்படியொரு போராட்டம் இனி வருமா?

எத்தனையோ ஆசிரிய சங்கப்போராட்டங்களில் கலந்துகொண்டிருக்கின்றேன்...

கைது செய்கிறோம் என்ற பெயரில் பயணியர் மாளிகையில் அல்லது திருமணமண்டபங்களில் தங்க வைத்து பின் விடுதலை செய்து விடுவார்கள்..

அப்போது அடையாத ஒரு உணர்வை கடந்த ஒரு வார கால போராட்டத்தில் உணர்கின்றேன்..

மாணவர்களின் மாண்பை உணர வைத்த போராட்டம்..
தலைவனின்றி ,எந்த வித தகராறுமின்றி ஒன்றுபட்டு அமைதியாக அறவழியில்,அகிம்சையில் போராடிய போராட்டம்...
சல்லிக்கட்டு குறித்த மாற்றுகருத்து இருந்தாலும் மாணவர்களோடு துணை நிற்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் முழு மனதோடு உறுதுணையாய் நின்ற காட்சி..

Sunday, 22 January 2017

ஒன்றிணைந்து விடுங்கள் மாணவர்களே...

ஒன்றிணைந்து விடுங்கள் மாணவர்களே...

போராட்ட உணர்வு நீர்க்காமல் இருக்க...

அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்கள் தங்களை ஒன்றிணைத்து ஒரு அமைப்பு உருவாக்க வேண்டும்...உடனடியாக..

அதற்கு தலைமை தேவையில்லை பொறுப்பாளர்களே போதும்....

தமிழ்நாட்டின் உரிமைக்காக போராடும் உண்மையான அமைப்பாக சாதி,இன,மத,வேறுபாடில்லாத அமைப்பாக அது செயல்படவேண்டும்...

கட்சி,அரசியல்,நடிகர்கள் கலக்காத அமைப்பாக அது அமைவதே சிறப்பு..

எண்ணிக்கை முக்கியமல்ல..
நேர்மையானவர்களைக்கொண்டதாக அது உருவாகவேண்டும்...

கலைக்கும் சூழ்ச்சி துவங்கி விட்டது...

ஒன்றிணைந்து விடுங்கள் மாணவர்களே...

இனி உங்களை ஒன்றிணைய துரோகிகள் விடமாட்டார்கள்...

தமிழ்நாட்டையும்,தமிழனையும்,தமிழையும் காப்பாற்ற இனி யாரையும் நம்ப முடியாது..

மாணவர்களாகிய நீங்களே..காப்பாற்றுவீர்கள் என்ற நம்பிக்கை உருவாக்கிவிட்டீர்கள்...

ஐ.ஏ.எஸ் சகாயம் அவர்களிடம் ஆலோசனை கேளுங்கள்...அவர்களைப்போன்ற நல்ல உள்ளங்கள் உங்களை வழிநடத்துவார்கள்...

போராட்ட உணர்வை தேக்கி வையுங்கள்..

அது அடிக்கடி தேவைப்படும் நிலை தான் இன்று..

உங்கள் பகுதியில் நடக்கும் அநியாயங்களை பார்த்துக்கொண்டு சும்மா இருக்காதீர்கள்..

நியாயத்திற்காக உங்கள் குரல் எங்கும் ஒலிக்கட்டும்..

இனியாவது தமிழன் தமிழனாக வாழட்டும்..

பெரியாரின் விதைகள் முளைத்து விட்டதைக்காண்கிறேன்...

பெரியாரின் விதைகள் முளைத்து விட்டதைக்காண்கிறேன்...

தமிழன் உணர்வுள்ளவனாக,சுயமரியாதை உள்ளவனாக,தன்மானச்சிங்கமாக,சாதி ,இன,மத பேதமற்று ஒன்றிணைய ஆசைப்பட்ட தொண்டுக்கிழவனின் கனவுகள் இன்று தமிழகமெங்கும் நனவாகத்தொடங்கியுள்ளன...

ஆங்காங்கே சில துரோகிகள் முளைக்கலாம்..ஆனால் அவர்கள் இன்னும் ஒற்றுமையையே ,ஆவேசத்தையே,வளர்க்கின்றார்கள்.

தங்களைத்தாங்களே அடையாளப்படுத்தி தமிழினத்துரோகிகள் நாங்கள் என உலகிற்கு வெளிச்சமிட்டுக்காட்டுகின்றனர்.

இதற்கெல்லாம் அச்சப்பட..அவர்கள் முனைமழுங்கி வேடிக்கைப்பார்க்கும் இலவசத்திற்கு மயங்கிய பிச்சைக்காரர் கூட்டமல்ல..

அக்னிக்குஞ்சுகள்..அமைதியாய் போரிடுகின்றன...

ஏமாற்றமுடியாத தெளிவில் உள்ளதைப்பார்த்து அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்...


வெல்க...வெல்க மாணவர்கள் ஒற்றுமை..

Friday, 20 January 2017

வெற்றி அவர்களுக்கே..


தங்களுக்கு தாங்களே கட்டுப்பாடு விதித்துக்கொண்டு....உலகத்திற்கே எடுத்துக்காட்டான ஒரு போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு ஒரு வீர வணக்கம்..

அலைஅலையாக மக்கள் கூட்டம் அவர்கள் பின்னே ஒன்றிணைய...பொறுமையாக இருங்கள் என வழிநடத்திக்கொண்டிருக்கும் மாணவர்களை எண்ணி பெருமையாக உள்ளது...

தங்களது குறிக்கோளை நோக்கி நிதானமாக போராட்டத்தை வடிவமைத்து..அரசையே உலுக்கிக்கொண்டிருக்கிறார்கள்..

தமிழர் உரிமைக்கு போராடுகிறோம் என அரசியல் செய்யும் போலிகளுக்கு மத்தியில் உண்மையான உணர்வோடு போராடும் தமிழ் இளைஞர்கள்...

புதுக்கோட்டையில் 3 வது நாளாக போராட்டம் மிகச்சிறப்பாக நடந்துகொண்டுள்ளது...
கொஞ்சநேரமாவது அவர்களோடு அமர்ந்து விட்டு போகனும் என்ற ஆவலோடு மக்கள் வந்து கலந்துகொண்டு அவர்கள் வெற்றியடைய வாழ்த்து சொல்லி செல்கின்றனர்..

அவர்களின் ஒற்றுமை மேலும் சிறக்கட்டும் ...

வெற்றி அவர்களுக்கின்றி வேறு யாருக்கு வரும்...?!

Wednesday, 18 January 2017

அமைதிகாக்கும் அக்னிக்குஞ்சுகள்

அமைதிகாக்கும் அக்னிக்குஞ்சுகள்
----------------------------------------------------------

வெட்கமாக உள்ளது....

பிள்ளைகளை பனியில் வாடவிட்டு கொடுமை படுத்தும் அரசு...

மக்களால் மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தான் மக்களின் நியாயமான கோரிக்கையை புறக்கணித்து அதிகாரத்திமிரில், ஆணவத்தோடு ,அமைதியாய் போராடும் பிள்ளைகளை அடித்து நொறுக்குகின்றது..

வீட்டில் உறங்கவும்,உண்ணவும் முடியவில்லை...இது தமிழனுக்கு நடக்கும் போராட்டமா?அல்லது இந்தியாவிற்கும் பீட்டாவிற்கும் நடக்கும் போராட்டமா?

யாருக்கு பயந்து அமைதிகாக்கிறது...அரசு...

அக்னிக்குஞ்சுகள் தெருவில் இறங்கியுள்ளது என்பதை இன்னும் உணராமல் அலட்சியப்படுத்துவது அநீதியானது...

இப்போது பணிந்தால் பின் தமிழகத்திற்கு இழைக்கும் கொடுமைகளுக்கெல்லாம் போராட ஆரம்பித்துவிடுவார்கள், ஆட்சி செய்ய முடியாதே என்ற அச்சமும் ,இதற்கு பணியக்கூடாதென்ற வீம்பும் நம் பிள்ளைகளை போராட விட்டு வேடிக்கை பார்க்கிறது..

என்ன செய்ய முடியும் இவர்களால் என்ற அலட்சியம்..

வியப்பாக உள்ளது அவர்களின் அமைதி....போராட்ட குறிக்கோளை தெளிவாக தெரிவித்து எந்தவித வன்முறையும் இன்றி...போராடும் தன்மையை எங்கிருந்து கற்றார்கள்...

தமிழனுக்காக தானே அரசு...அவர்களின் உரிமையை மீட்டெடுக்க முடியாமல் எதற்கு ஆட்சியில் அமர வேண்டும்..

அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ள வேண்டும்...இந்த பண்பை...

பிள்ளைகளிடமிருந்து கற்றுக்கொள்வோம் இந்த அரிய பண்பை...

நள்ளிரவில் பெண்கள் இத்தனை ஆண்களுக்கு மத்தியில் பாதுகாப்பாக இருக்க முடியும் என்பது கனவிலும் நினைத்து பார்க்க முடியவில்லை...

இங்கு சாதி இல்லை,மதம் இல்லை,ஆண் பெண் பால் பாகுபாடு இல்லை..

எல்லோருக்கும் ஒரே குறிக்கோள்...
தமிழரின் உரிமை...ஒன்றே

வேடிக்கை பார்க்கும் நாமும் இணைய வேண்டும்...

சல்லிக்கட்டு...

உங்களை சிரம் தாழ்ந்து வணங்குகின்றோம்...இளைஞர்களே..

அத்தனை பெண்களும் உங்களுக்கு மத்தியில் பாதுகாப்பாய் இருக்கும் போது மனம் நெகிழ்வாய் ,பெருமையாய் இருக்கின்றது என் பிள்ளைகளே..

இத்தனை பண்பாடும் ஊறிய குருதியில் ...பெண்ணினம் அச்சமின்றி போராடுவதை நினைக்கையில் ...பெருமிதப்படுகின்றேன்...

உங்களின் நோக்கம் தெளிவாய்...குறிக்கோளை நோக்கி பயணிக்கும் உங்களை பார்த்து விஷமிகள் அச்சத்தோடு அமைதி காப்பதை எண்ணி உள்ளம் மகிழ்கின்றது..

கலாமின் குழந்தைகளே உங்களை இனி யாரும் ஏமாற்றி பிழைப்பு நடத்த முடியாது என நிரூபித்து விட்டீர்கள்..

சூடு சுரணையற்ற மாக்களின் மத்தியில் சுடர் விளக்காய் காண்கையில் எதிர்காலம் நம்பிக்கை ஒளியை பாய்ச்சுகின்றது..

எதையும் எதிர்பார்க்காது...யாருக்கும் அடிபணியாது ...
எதிர்த்து போராடும் வல்லமையாளர்களே உங்கள் போராட்டம் வெல்லட்டும்...

இத்தனை ஆண்டுகளாய் சுரண்டி வாழ்ந்த கூட்டம் ...திரும்பி பார்க்காது ஓடட்டும்...

பெண்கள் சுயநலமானவர்கள் என்ற கருத்தை உடைத்து போராட்டக்களத்தில் நிற்கும் வீராங்கனைகளே..
நாளை உங்களோடு உங்களின் பெற்றோர்களும் களமிறங்குவார்கள்....

வேஷதாரிகளின் வேடம் கலையும் நாள் வந்து விட்டது..
உங்களை குறை சொல்லியே வாழும் கூட்டம் தலைகவிழ்ந்து நிற்கின்றது..

வாழ்த்துகள் குழந்தைகளே...

Sunday, 18 December 2016

உணவு முறையில் சிறிய மாற்றம்.

உணவு முறையில் சிறிய மாற்றம்.

ஆதாயம் இல்லை
அக்கறையால் கூறுகின்றேன்.

இருமாதங்களில்

உடல் எடை 82 இருந்து 75க்கு -,

நீரிழிவு-துவங்கும் நிலையில் இருந்த நீரிழிவு மிக நார்மலுக்கு,அதிகமா இருந்தாலும் நார்மலுக்கு திரும்பி மாத்திரை எடுப்பதை நிறுத்தியவர்கள் பலர்.

தைராய்டு-7 வருடங்களாக இருக்கும் தைராய்டு நார்மலுக்கு திரும்பிக்கொண்டு...

மெனோபாஸ்,தைராய்டு காரணமாக எப்போதும் சோர்வாகவே இருக்கும் நான் சுறுசுறுப்பாக பணி செய்ய முடிகின்றது.அதனால் எல்லோர் மேலும் இயலாமையினால் வரும் கோவமும் குறைந்துள்ளது.

எங்கள் குடும்பத்தினர் அனைவரும் இந்தப்பலனை அனுபவிக்கின்றோம்.
.
நீங்களும் பலன் பெறவே விழைகின்றேன்.

பாருங்கள்,இணையுங்கள் முகநூலில் @ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு குழுவில்..

Wednesday, 23 November 2016

புத்தகத்திருவிழா உங்களுக்காகவே

புத்தகத்திருவிழா உங்களுக்காகவே

இப்படியொரு இடம் கிடைத்தால் வாழ்நாள் முழுதும் அப்படியே கரைந்து விடலாம்..

அமைதியான,காற்றோட்டமான,வெளிச்சத்துடன் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களின் வெங்கடேஸ்வரா பள்ளியின் நூலகத்தில்...

ஒரு இனிமையான காலைப்பொழுதில் வலைப்பதிவர் சந்திப்பு குறித்த கூட்டத்திற்காகச் சென்றோம்...நூலகம் ஆரம்பித்தது முதல் வந்து பாருங்கன்னு சகோதரி அஞ்சலி அவர்கள் அழைத்திருந்தபோதும் அன்று தான் வாய்ப்பு கிடைத்தது.

எப்போது கூட்டம் தாமதமாகத்துவங்கினாலும் கொஞ்சம் சலிப்பும்,கோவமும் வரும்...ஆனால் அன்று கூட்டமே நடக்கலன்னாலும் பரவால்ல அமைதியா அமர்ந்து படிக்கலாம்னு சொல்லிட்டே இருந்தேன்...

எந்த புத்தகத்தை விடுவது எந்த புத்தகத்தை எடுப்பது எனத்தெரியாமல் ஜெயா தடுமாற...
தேவதச்சனின் கவிதை நூலை வாசிக்க ஆரம்பித்தேன்..இரண்டு கவிதைகள் தான் வாசிக்க முடிந்தது...

எஸ்.ராவின் இரண்டு நூல்களை ஜெயா எடுத்துக்கொண்டார்..எங்களின் ஆர்வத்தை ப்பர்த்து நூலகப்பொறுப்பாளர் காசாவயல்கண்ணன் சிரித்தப்படியே கண்காணித்தார்..

கனவு இல்லம் கட்டும் அனைவரும் நூல்களுக்கென ஒரு அறை தங்கள் வீட்டில் அமையுங்கள்..






புத்தகத்திருவிழா உங்களுக்காகவே

Monday, 3 October 2016

உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்....

உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்....

நான் பிறந்தது பக்கத்து மாநிலம் ஆனால் வளர்ந்தது ...என்னை வாழவைத்தது....தமிழ்நாட்டின் தலைநகரம் தான்.நான் வாழ்ந்த வீட்டுக்கு அருகில் ஒரு குளம் உண்டு அதில் மழைக்காலத்தில் நீர்நிரம்பி அருகில் உள்ள குட்டையில் நிறையும்..நாங்கள் எங்கள் வீட்டின் வழியாகச்செல்லும் நீரில் குதித்து விளையாடுவோம். என்னை வாழவைத்த சென்னையை மிகவும் நேசிக்கிறேன்...
இன்று என் வீட்டின் அருகே உள்ள குளத்தின் மீது உயர்ந்து நிற்கிறது ஒரு குடியிருப்பு பகுதி ...சென்ற வருட வெள்ளத்தில் நீர் தனது பகுதியை ஆக்ரமித்ததைக்கண்டேன்...


Tuesday, 6 September 2016

வடக்கிருந்து உயிர்விட்ட தமிழ்மன்னன் வழித்தோன்றல்களா நாம்?

வடக்கிருந்து உயிர்விட்ட தமிழ்மன்னன் வழித்தோன்றல்களா நாம்?
 
தண்ணீர் தர காவலாளி தாமதப்படுத்தினான் என உயிர்விட்ட பரம்பரையில் வந்தவர்கள் நாமா?

இன்று தண்ணீருக்காக கையேந்தி அடுத்த மாநிலத்தில் கேட்கிறோம்.

ஒரு பக்கம் தடுப்பணை மறுபக்கம் தண்ணீர் விடக்கூடாதென்ற போராட்டத்தில் தமிழர்கள் எல்லையில் தவிக்கின்றனர்...

நம் குடும்பம் பாதுகாப்பாக இருக்கு யார் தவித்தால் நமக்கென்ன...

நம் மாநில விவசாயி தானே சாகின்றான் நமக்கென்ன...

வெட்கம் கெட்டு கர்நாடகா பொன்னி அரிசி வாங்கி தின்போம்..

ஆனால் ஒவ்வொரு அரிசியும் நம் விவசாயியின் குருதி என்பதை உணர்த்திக்கொண்டே இருக்கும்...

சுய உணர்வின்றி ஆட்டம் பாட்டம் என அலட்சியமாக வாழ்வோம்..
 
உணவிற்காக நம் சந்ததிகள் அடுத்த மாநிலத்திடம் பிச்சை கேட்க போகும் நாள் நம் கண்முன்னே விரைவில்

விவசாயிகளுக்காக கர்நாடக மக்கள் ஒன்றிணைந்து ,தமிழ்நாட்டு மக்களுக்கு குடிக்க கூட நீர் தர மறுத்தால் நமக்கென்ன...

நம் நாட்டு கரண்ட் அங்கு போகக்கூடாதென போராடவா போகின்றோம்...

கொஞ்சம் கூட எதிர்ப்பை காட்டாது கடிதம் எழுதி எழுதி...

விதியென நினைத்து வீழ்வோம்....