World Tamil Blog Aggregator Thendral: விழா
Showing posts with label விழா. Show all posts
Showing posts with label விழா. Show all posts

Thursday, 12 January 2017

பொங்கல் வாழ்த்து


 
 
அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்..
தமிழர் கொண்டாடிய ஒரே விழா...
உலகுக்கு நன்றி கூறும் விழாவை அறிமுகப்படுத்திய தமிழனின் பெருமையைக்கூறும் பெருவிழா..
 
இன்று எங்கள் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடினோம்..மாணவிகளும் ஆசிரியர்களு
ம் இணைந்து பொங்கல் விழாவை மிகச்சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தது மறக்க முடியாதது.முன்னெடுத்து வைத்த தலைமையாசிரியருக்கு மிக்க நன்றி..
நேற்று மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் முதல் பரிசை பெற்ற கூடுதல் மகிழ்வும்..







Wednesday, 24 August 2016

மறக்க முடியாத நாளாக 24.8.16

மறக்க முடியாத நாளாக 24.8.16

நூற்றாண்டு கடந்த ஆர்.சி மேல்நிலைப்பள்ளியில் பள்ளியில் வீரமாமுனிவர் வளர்தமிழ் மன்ற விழா..
முகநூல் நண்பர் திருமிகு அறிவுடைநம்பி அவர்கள் , தங்கள் பள்ளியின் தமிழ்த்துறை சார்பாக நடக்கும் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள முடியுமா என்று கேட்டார்...அவருக்காக கலந்து கொள்வதென முடிவு செய்து வருகின்றேன் என்றேன்.
விழாவின் பொறுப்பாளர் திருமிகு ஜான்பிரிட்டோ அவர்கள் என்னிடம் விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்கும் படி அழைத்த போது கூட நான் ஏதோ சிறியபள்ளி என்ற எண்ணத்தில் சரி என்று அப்பள்ளியில் பணிபுரியும் வலைப்பூ சகோதரர் திருமிகு மணவை ஜேம்ஸ் அவர்களிடம் கேட்ட போது...

அப்பள்ளியின் சிறப்பையும் பிரமாண்டத்தையும் உணர்ந்தேன்..
1907 இல் ஆசிரிய பயிற்சி பள்ளியாகத்துவங்கப்பட்டு பின் 1945 இல் உயர்நிலைப்பள்ளியாக செயல்படத்துவங்கியப்பள்ளி
1978 முதல் மேல்நிலைப்பள்ளியாகச் சிறப்புடன் செயல்பட்டு கொண்டு வருகின்றது.

5 வருடங்களாக வீரமாமுனிவர் வளர்தமிழ் மன்றம் துவங்கி மாணவர்களுக்கு தனித்திறன் போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்கி வருகின்றனர்.

ஏறக்குறைய 2000 மாணவர்கள் படிக்கின்றனர்.
பள்ளியின் தாளாளரும் தலைமையாசிரியருமான அருட்தந்தை சகாய செல்வராஜ் அவர்களின் எளிமை மிகவும் வியக்க வைக்கின்றது.


நான் வருகின்றேன் என்றவுடனே நண்பர் அறிவுடைநம்பி அவர்கள் உபசரித்து பள்ளிக்கு அழைத்து சென்றார்...ஆசிரியர்கள் அனைவரும் அன்புடன் வரவேற்றனர்.
தமிழாசிரியர்கள் பாரம்பரிய உடையில் விழாவை நடத்தியது மிகவும் சிறப்பு.

முற்றிலும் ஆண்கள் பணிபுரியும் பள்ளி...பெண் ஆசிரியர்கள் யாரும் இல்லையா எனக்கேட்டேன்..இல்லை என்றார்கள்...

துறுதுறுவென ஓடி ஆடிக்கொண்டிருந்த பசங்களைக்கண்டதும் அவர்களின் உற்சாகம் என்னையும் தொற்றிக்கொண்டது எனலாம்...அவர்களின் பணிவு இக்காலத்தில் இப்படி கூட மாணவர்கள் இருக்கின்றனரா...ஆச்சரியப்பட்டேன்..

ஒரு மாணவன் படித்துக்கொண்டே சமையல் பணிகளுக்கு போவதாக அறிந்த போது அவனின் பொறுப்பு மனதை நெகிழ வைத்தது.

மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் மிகவும் அருமை..
ஆசிரியர்களின் விருந்தோம்பல் பண்பு பாராட்டுதற்குரியது..என் மேல் அன்பும் நம்பிக்கையும் வைத்து அழைத்து சிறப்பித்த நண்பர் அறிவுடைநம்பி அவர்களுக்கு மிக்கநன்றி...

நூற்றாண்டு பாரம்பரியமான பள்ளியின் விழாவில் மனம் நிறைவாக விழாவில் கலந்து கொண்டு வந்தேன்.






Sunday, 3 April 2016

கவிப்பேராசான் மீரா விருது 2015 விழா

வளரி இதழ் வழங்கிய
 கவிப்பேராசான் மீரா 2015 விருது விழா

மதுரையில் மிகச்சிறப்பாக நிகழ்ந்தது..

 என்னுடன் தாங்களே விருது பெரும் மகிழ்வோடு வீதி இலக்கிய உறவுகள் கவிஞர் முத்துநிலவன் ,கவிஞர் மகாசுந்தர்,கவிஞர் மீரா .செல்வகுமார்,கவிஞர் வைகறை,திரைப்பட பாடலாசிரியர் புதுகைப்புதல்வன்,கவிஞர் நாகநாதன்,கவிஞர் சோலச்சி,கவிஞர் நீலா,அண்ணி மல்லிகா,கவிஞர் அமிர்தாதமிழ்,குட்டி கவிஞர் எழிலோவியா,குட்டீஸ் லாவண்யா,ஆர்யா,ஆதவன்,அக்கா மங்கையர்கரசி ஆகியோர் மகிழ்வோடு கலந்து கொண்டனர்.

 எனது அழைப்பில் வலைப்பூ நண்பர்கள்.திருமிகு செந்தில்குமார்,திருமிகு பகவான் ஜி,திருமிகு மதுரைசரவணன்,திருமிகு சிவா[கலகல வகுப்பறை],வலிபோக்கன்,தமிழ்வாசிப்பிரகாஷ்..கவிஞர் ஞானசூரி சுகன்யா, 

தனது அரிதான நேரத்திலும் கலந்துகொண்டு சிறப்பித்த தோழி ஜெயா,திருமிகு எமர்சன்,. இன்னும் சிலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 விழாவில் தோழி ஆதிரா முல்லை,கவிஞர் பர்வதவர்த்தினி,கவிஞர் கூரா அம்மாசையப்பன்,ஆகியோரை நேரில் சந்தித்தது வாழ்வின் பெருமகிழ்வு.. 

கவிஞர் மீராவின் நினைவலைகளை திருமிகு தி.சு நடராசன் எங்களிடம் கடத்திய விதம் மிகச்சிறப்பு,

தலைமை வகித்த திருமிகு செல்லாவின் பேச்சு அருமையாக இருந்தது.. 

கவிஞர் முத்துநிலவன் அண்ணா தங்கைகளுக்கு கிடைத்த விருது தனக்கே கிடைத்த விருதாக உணர்கின்றேன் எனக்கூறி அகமகிழ்ந்தார்.

 வாழ்த்துரை வழங்கிய அனைவரும் நூல்கள் குறித்து அருமையாக பேசினார்கள்.
எங்கே போவேன்? கவிதையை அரங்கில் வாசித்த கவிஞர் மலர்மகள் அவர்களுக்கு நன்றி..
 கவிஞர் ஆதிரா முல்லை தனது தனித்துவ மிக்க பேச்சால் அனைவரையும் கவர்ந்தார்..
தோழி கிரஸுக்கும் சேர்த்து நான்.ஏற்புரை வழங்கிய தருணம் இனிமையானது வளரி இதழ் ஆசிரியருக்கும்,
எங்களது கவிதைகளை தேர்வு செய்த ஆசிரியர் குழுவினருக்கும்,
தங்களது மதிப்பு மிக்க காலத்தை எனக்காக ஒதுக்கி என்னுடன் வந்து கலந்து கொண்டு நிறைவான மகிழ்வை அளித்து தோழமைகளுக்கும் மனம் நிறைந்த நன்றி..

கிரேஸிடமிருந்து போட்டோக்களை சுட்டுட்டேன் நன்றிமா...







Wednesday, 22 April 2015

வாழ்த்துவோம்


வாழ்த்துவோம்

விந்தைகளின் உலகமது
வியப்பின் எல்லையைக்காட்டி
வியக்கவைத்து மகிழுமது

வரவேற்பு முதல் நன்றி
வரை வித்தியாசங்களின்
வகுப்பாய் அமையுமது..

மழலைகள் குதூகலிக்கும்
மகிழ்விடமது..

புத்தகமில்லா நாளை
பூக்களுக்கு காட்டி மனம்
பூப்பதை ரசிக்குமது
புதுகையின் திருவிழாவாய் ஆண்டுதோறும்
பூரித்து மகிழவவைக்குமது

கலைகளின் பிறப்பிடமாக
களிப்பூட்டி மகிழுமது
மனிதநேயம் வாழுமிடமாய்
மனங்களை நேசிக்குமதில்
மகிழ்ந்தே கூடுவோம்
வெங்கடேஸ்வரா பள்ளியில்

 எழுத்தாளர் எஸ்.ராவின் பேச்சால்
எழுச்சி பெற்று மகிழ்ந்தது....நேற்று


கவிஞராய்,  நல்லாசிரியராய்,
காந்தக்குரலுக்குச் சொந்தக்காரராய்
மனிதநேய மாண்பாளராய்
கவிஞர் பாலாவின் வித்தாய்
வாழும் தங்கம் மூர்த்தி அவர்களுக்கும்
வாழ்வின் துணையாய்
ஊன்றுகோலாய் திகழும்
சகோதரி அஞ்சலிமூர்த்தி அவர்களுக்கும்
மனம்நிறைந்த வாழ்த்துகள்

Thursday, 29 January 2015

பட்டுக்கோட்டையார் மக்கள் இயக்கம்

”பட்டுக்கோட்டையார் மக்கள் இயக்கம் ”புதுக்கோட்டை 14ஆம் ஆண்டு இலக்கியத்திருவிழா

நாள்:31.01.15
நேரம் :மாலை 4.00மணி
இடம் :நகர்மன்றம்.புதுகை

இவ்விழாவில் நமது அய்யா கவிஞர்.கி .பாரதிதாசன்.நிறுவனர்,கம்பன் கழகம் பிரான்சு .அவர்கள் எழுதியுள்ள ஏக்கம் நூறு,கனி விருத்தம் ஆகிய இரு நூல்கள் இயக்குநர் திலகம் கே.பாக்கியராஜ் அவர்கள் தலைமையில் வெளியிடப்பட உள்ளன.அனைவரையும் வருக வருக என மகிழ்வுடன் அழைக்கின்றோம்.நன்றி.




Monday, 10 November 2014

.9.11.14 ஒரு கோப்பை மனிதம் -நூல் அறிமுக விழா

 ஒரு கோப்பை மனிதம் -நூல் அறிமுக விழா

புதுக்கோட்டையில் உள்ள நில அளவையர் அரங்கில்  09.11.14 அன்று
  இனிய பனி சூழ்ந்த மாலைப்பொழுதில் ஒரு கோப்பை மனிதம் அறிமுக விழா துவங்கியது .

தமிழ்த்தாய் வாழ்த்து

 கவிஞர் மகா.சுந்தர் அவர்களின் மகள் சுபாஷிணி இசைக்குயிலாய் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார்.

வரவேற்பு

தமிழாசிரியர்.கிருஷ்ணவேணி தனது இனிய தமிழால் அனைவரையும் வரவேற்றார்.

அடுத்து விருந்தினர்களை சிறப்பிக்கும் முகத்தான் அவர்களுக்கு நூல்கள் பரிசளிக்கப்பட்டன.