World Tamil Blog Aggregator Thendral: 2026

Thursday, 23 July 2026

மாமன்னர் கல்லூரி

"தமிழ் நாட்டின் சிற்பி காமராசர் " 
என்ற தலைப்பில் புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் நேற்று பேச வாய்ப்பு கிடைத்தது.
மதிப்பிற்குரிய முதல்வர் முனைவர் சேதுராமன், முனைவர் கணேசன் முனைவர் ஆதவன் பேராசிரியர் பாலமுருகன் முனைவர் இரவிச்சந்திரன் ஆகியோர் நிகழ்வை மிகச் சிறப்பாக நடத்தினர்.

முதலாண்டு அறிவியல் கணினிப்பிரிவு மாணவர்கள் கலந்து கொண்டனர்.

எனது உரையில் உங்களில் எத்தனை மாணவர்களின் தாத்தா பாட்டி படித்துள்ளனர் என்று கேட்டேன் ஒருவரும் கை தூக்கவில்லை . உங்கள் பெற்றோரில் எத்தனை பேர் கல்லூரியில் படித்து உள்ளனர் என்று கேட்டேன்.ஏழு பேர் மட்டுமே கை உயர்த்தினார்கள்.சங்க காலத்தில் அத்தனை பேர் பாட்டு எழுதும் அறிவு பெற்றிருக்க இரண்டாயிரம் ஆண்டுகளாக நம் தாத்தா பாட்டிகள் படிக்காததன் காரணம் என்ன என்று யோசியுங்கள்.

Zee tamil தொலைக்காட்சியில் சுமன் என்ற மாணவன் தனக்கு கிடைத்த எதுவும் என் தந்தைக்கு கிடைக்கவில்லை .பண்டிகை நாளன்று நிம்மதியாக வயிறு நிறைய சோறு சாப்பிட்டதில்லை என்று கூறி தனது தாத்தாவையும் தந்தையையும் மேடைக்கு அழைத்தார்.

கை கட்டிக்கொண்டுகூனிக்குறுகி நின்ற  தாத்தாவிடம் இனி யார் முன்னாலும் கை காட்டாதீர்கள் என்று கையை விலக்கி விட்டார்.தாத்தா கண்கலங்க தமுக்கடித்து வாழ்ந்தவன் நான் என் பிள்ளையை கல்லூரியில் சேர்க்க காசில்லாமல் அத்தனை கஷ்டப்பட்டேன்.ஆனால் இன்று என் பேரன் கொண்டு தாத்தா என்ற எனது பெயரை பாடகரின் தாத்தா என் மாற்றி விட்டேன் என கண்கலங்கி கூறினார்...

ஏன் அவர்கள் இப்படி கூனிக்குறுகி வாழ வேண்டும்...

இவர்களின் மேன்மைக்காக பாடுபட்ட எளிய மனிதர் கர்ம வீரர் காமராஜர்..

தமிழ் நாட்டின் முதலமைச்சர் ஆனதும் உடனே கல்வியில் முன்னேற பள்ளிகளைக் திறந்து கல்லூரி மருத்துவக்கல்லூரி தொழிற்கல்லூரி என ஒருபக்கமும் மறுபக்கம் அவர்கள் வெளியே வந்தால் வேலை கொடுக்க மத்திய மாநில உதவியுடன் மாவட்டந்தோறும் தொடங்கப்பட்ட தொழிற்சாலைகள்,தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் கிடைக்க நீர் மின் நிலையம், அனல் மின் நிலையம், கல்பாக்கம் அணு மின் நிலையம் என மின்துறை வளர்ச்சி மேலும் நீர்ப்பாசனத்திற்காக ஒவ்வொரு நதி தோறும் கட்டப்பட்ட அணைகள் வியக்க வைக்கும் அரசியல் அறிவு...

என் மாமனிதர் காமராஜர் பற்றி உரையாற்றினேன். 

காமராஜரைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள நல்வாய்ப்பு.

மன நிறைவான நாளாக 22.7.26 அமைந்தது.

Wednesday, 18 March 2026

பெயர்

தமிழில் குழந்தைகளுக்கு பெயர் சூட்ட தேவையான இணையத்தளம்.

தற்போது பள்ளிகளில் 1000 மாணவர்கள் படிக்கிறார்கள் என்றால் 10% மாணவர்கள் பெயர் மட்டுமே தமிழில் உள்ளது.

ஸ்ரீ ஜ ஷா ஸ ஹ க்ஷ இல்லாத பெயர்களே இல்லை எனும் அளவிற்கு புரியாத பெயர்களில் குழந்தைகளுக்கு பெயர் வைப்பது என்பது இக்காலத்தில் நடைமுறை வழக்கமாக உள்ளது.

உனது பெயரின் பொருள் என்ன என்று கேட்டால் குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் தெரியாத நிலை.

தமிழரின் பண்பாட்டில் பெயர்கள் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளன.அவர்கள் எங்கு சென்றாலும் தனது ஊர் பெயர்களையே சுமந்து செல்லும் வழக்கம் என்பது ஆய்வின் முடிவு.

படித்த பெற்றோர்கள் அதிலும் 90%ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழ்ப்பெயர்களின் அருமை தெரிவதில்லை.

உங்கள் குழந்தைக்கு தமிழ்ப் பெயர்களைச் சூட்டி இதோ தமிழ் நாடு அரசு வழிசெய்துள்ளது.

பகிர்வு
குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுவதற்கான பெயர்கள் மற்றும் அவற்றுக்கான விளக்கங்கள் - தமிழக அரசின் அசத்தல் முயற்சி

குழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்ட வசதியாக தமிழ்நாடு அரசின் சார்பாக பிரத்யேக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

முதலமைச்சரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த 2021ம் ஆண்டு பொறுப்பேற்றது முதல் பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதேசமயம் தமிழ் மொழியின் பெருமையை உலகறியும் வண்ணம் பல வகைகளில் திட்டங்களை வகுத்து வருகிறது. இப்படியான நிலையில் கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி திமுக பிரமுகர் மயிலை வேலு இல்ல திருமண நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர் சூட்ட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து அவரின் பேச்சை சுட்டிக்காட்டி நிதின் சிற்றரசு என்ற இணைய பயனாளர் ஒருவர், "குழந்தைகளுக்கு தமிழ் பெயர்கள் வைக்க நினைத்தாலும், குழந்தை பெயர்கள் மற்றும் அதற்கான பொருளை தெரிந்துகொள்ள சரியான சமூக வலைதளங்கள் தமிழ்நாட்டில் இல்லை. எனவே, இதற்காக தமிழ் வளர்ச்சித்துறை அல்லது தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் வலைத்தளம் உருவாக்கினால் சிறப்பாக இருக்கும் தலைவரே!” என தெரிவித்திருந்தார்.

அவரது ட்வீட்டை மேற்கோள் காட்டிய முதலமைச்சர் ஸ்டாலின், “குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப் பெயர்களும் - அதற்கான பொருளும் அடங்கிய இணையப்பக்கம் தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் தொடங்கப்படும்!” என தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.

தமிழ் பெயர்களுக்கு பிரத்யேக இணையதளம்
இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த வாக்குறுதியின்படி, குழந்தைகளுக்கு தமிழ் பெயர்களை தேர்வு செய்யும் வகையில் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியான அறிவிப்பில், “அன்புக் குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப் பெயர்கள் மற்றும் அவற்றின் பொருள் அடங்கிய பிரத்யேக இணையப் பக்கத்தைத் தமிழ் இணையக் கல்விக் கழகம் உருவாக்கியுள்ளது. நமது மழலைச் செல்வங்களுக்குச் சூட்டி மகிழ, தனித்துவமான தமிழ்ப் பெயர்களைத் தேடுபவர்கள் https://tamildigitallibrary.in/tamilnames இந்தத் தளத்தைப் பயன்படுத்தி பயன்பெறுவோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வலைத்தளத்தில் ஆண், பெண் ஆகிய பாலினம் அடிப்படையிலும், அகர வரிசையில் இரண்டு பாலினமும் இணைந்த பெயர்களும் அதன் அர்த்தங்களுடன் இடம் பெற்றுள்ளது. இந்த இணைய தளத்தை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்.

மேலும் 2 வலைத்தளங்கள்
அதோடு மட்டுமல்லாமல் அதிக எண்ணிக்கையிலான தமிழறிஞர்கள், எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு வருகின்றன. இந்நூல்களைப் பெருமளவில் வாசகர்களிடம் கொண்டுசேர்க்க தமிழ் வளர்ச்சித் துறை நிதிநல்கையுடன் 'நாட்டுடைமை நூல்கள்' சிறப்பு இணையப் பக்கம் (https://tamildigitallibrary.in/nationalisedbooks) உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு பண்பாட்டு மின் நிலவரை ஏடு (https://tamilculturalatlas.in) திட்டத்தில், முதல் கட்டமாக மதுரை, விருதுநகர், திண்டுக்கல், சிவகங்கை, தேனி ஆகிய மாவட்டங்களில் உள்ள கோவில்கள், தொல்லியல் தளங்கள், வரலாற்று நினைவுச் சின்னங்கள், கைவினைக் கலைகள் முதலியவற்றின் விவரங்கள், புகைப்படங்கள், காணொலிகள் ஆகியவை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. சுற்றுலாப் பயணிகளுக்கும் பண்பாட்டு ஆர்வலர்களுக்கும் பயன்படும் வகையில் இத்தளம் தொடர்ந்து மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.