World Tamil Blog Aggregator Thendral: பெண்ணியம்
Showing posts with label பெண்ணியம். Show all posts
Showing posts with label பெண்ணியம். Show all posts

Saturday, 11 March 2017

மகளிர் தின உரை-வழக்கறிஞர்கள் சங்கம் அறந்தாங்கி 8.3.2017

மகளிர் தின உரை-வழக்கறிஞர்கள் சங்கம் அறந்தாங்கி

வாதாடுபவர்கள் முன்
சொல்லாடும் கவி நான்
வார்த்தைகளால் வாழ்கின்றோம்
ஆம் ..வார்த்தைகளால்
வானத்தையும் வில்லாக்கும்
வழக்குறைஞர் நீவிர்
தலைகுனியா நீதி வழங்கி
தலைநிமிர்ந்து நடக்கும் நீதிபதிகள்.

 வானவில் குழந்தைகளை
வளப்படுத்தும் ஆசிரியர் நான்.

சமூகத்தை வழக்குகளால்
சந்திக்கும் உங்களிடத்தில்

சமூகத்தை கவிதையால்
சங்கமிப்பவள் வாழ்த்துகின்றேன்
இனிய மகளிர் தின வாழ்த்துகள்.

” மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக்கொளுத்துவோம்” என்றான் பாரதி..ஆனால் பாரதிக்கே மாதரின் இருப்பை அறிவுறுத்தியவர் சகோதரி நிவேதிதை..அவர்களது சந்திப்பிற்கு பின்னே தான் பாரதியின் பாடல்களில் பெண்ணியச்சிந்தனை அதிகம் கலந்தது என்றால் மறுக்க முடியாது.

Friday, 10 February 2017

என்ன செய்ய போகின்றோம்?

இன்று மாலை 6,7,8 வகுப்பு குழந்தைகளோடு பேசியபோது முதலில் அவர்கள் தயங்கினாலும் பின் இயல்பாக பேசத்துவங்கினர்.

நல்ல தொடுகை ,தீய தொடுகை பற்றி கூறிய போது சில குழந்தைகளின் கண்களில் மிரட்சி தெறிந்தது..அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதை உணர முடிந்தது.

சில குழந்தைகள் கூறியதை சீரணிக்க முடியவில்லை..அவர்களைச்சுற்றியுள்ள ஆண்களின் வக்கிரத்தை குழந்தைத்தன்மையுடன் கூறிய பொழுது எச்சரிக்கத்தான் முடிந்தது.

சில குழந்தைகள் அம்மாகிட்ட சொல்ல மாட்டேன் அம்மா உங்ககிட்ட சொல்றோம்,அவங்க அடிப்பாங்க என்ற போது..வீடு அவர்களை நம்ப மறுப்பது எவ்வளவு கொடுமையானது.

நாம பெண்குழந்தைகளிடம் இன்னும் நெருங்க வேண்டும்..அவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்...எப்போது ?

Wednesday, 14 September 2016

இன்று பலி தான்யா

இன்று பலி தான்யா 15.9.16
---------------------------

சுடச்சுட படிப்போம் குருதி வழியும் நாக்குடன்

இன்னும் எத்தனை பெண்களை பலி கொடுக்க போகிறோம்..காதல் வெறியர்களுக்கு...

ஒருத்தனையாவது நடுத்தெருவில் கல்லால் அடிச்சி கொன்றிருந்தால்...மற்றவன் யோசிப்பானோன்னு கோவம் வருது..

காவல் துறை ....அமைதி காக்கட்டும்

சட்டம் தன் கடமையைச்செய்யாமல் போகட்டும்.

அம்மா ஆட்சியில் பெண்களை அநியாயமாக பலிகொடுத்தோம் என்ற அவப்பெயர் சூழட்டும்...

பெண் அரசு செய்யும் போதே இப்படி எனில் ...தமிழ்நாட்டில் பெண்ணினம் இல்லாது அழிந்தே போகட்டும்...

பெண்ணைப்பெற்ற ஆண்கள் பயந்து பயந்து சாகட்டும்.

திரைப்படங்கள் இன்னும் ஆண்களை வெறியர்கள் ஆக்கட்டும்..

நாம் முகநூலில் புலம்பியே வெந்து மடிவோம்..

Wednesday, 31 August 2016

எங்கள வாழ விடுங்கடா

எங்கள வாழ விடுங்கடா

இப்பதாண்டா கல்வி கிடைச்சு மேல வர்றோம்

இன்னும் சுதந்திரமா பேச முடியலடா

இன்னும் அண்ணன் தம்பிக்குதாண்டா முன்னுரிமை

இன்னும் வேலை பார்த்தும் அப்பா அம்மாக்கு உதவமுடியலடா

இன்னும் இரவுகளில் மட்டும்ல பகல்ல கூட தனியா நடக்கமுடியலடா

காதலிக்க தெரியாம இல்ல..ஆனா
எங்க அப்பாஅம்மாவ காப்பத்தனும்டா
அதுக்குள்ள கட்டையால அடிச்சு
கத்தியால வெட்டி சாகடிக்குறீங்களே
உங்களுக்கு என்னடா பாவம் செய்தோம்

இதக்காரணம் காட்டி பொம்பளபுள்ளகல மறுபடி வீட்டுக்குள்ள முடக்கி போட்டுடுவாங்க பாவிகளா

உன் காதலுக்கு தீனியா எங்க உயிராடா நாய்களா...நாய் கூட பிடிக்கலன்னா தொட மாட்டேங்குதுடா ..
வெறி புடிச்ச காமாந்தகா...

எப்படிடா உங்கள சமாளிக்கிறது....
அவ ஆடை சரியில்ல அதான்னு சொல்றவங்க இதுக்கெல்லாம் என்ன சப்பை கட்டு கட்டுவாங்க...

Sunday, 3 July 2016

சமத்துவம் வந்தாச்சா?....

சமத்துவம் வந்தாச்சா?....

 எத்தனையோ பெண்களை இழந்துள்ளோம்...ஆண்களின் வக்கிரங்களுக்கு இரையாக்கி.... ”இன்று தி இந்து பேப்பர் நிறைய சுவாதிக்கொலையே நிறைந்திருந்தது..

மனம் சுவாதிக்காக அழுதாலும் இதற்கு முன்
சென்னையில் ஈவ்டீசிங்கால் சரிகாஷா ,
தர்மபுரியில் பேருந்தில் எரிக்கப்பட்ட கோகிலவாணி,ஹேமலதா,காயத்ரி,

ஓமலூரில் கிணற்றில் வீழ்ந்து இறந்ததாக சொல்லப்பட்ட சுகன்யா,

சித்த மருத்துவக்கிணற்றில் கிடந்த சரண்யா,பிரியங்கா,மோனிஷா.

கோவைக்கிணற்றில் திவ்யா,அத்தனையும் இளம் தளிர்களை கொன்று குவித்த வக்கிரங்கள்,

 ஆசிட் வீச்சுக்கு பலியான காரைக்கால் வினோதினி ,சென்னை வித்யா,தூத்துக்குடி புனிதா,

டெல்லி நிர்பயா,உளுந்தூர் பேட்டை பிரியா,சிதம்பரம் சந்தியா, சென்னை உமாமகேஸ்வரி,மதுரை லீலாவதி,கடலூர் விக்டோரியா,ஆதனூர் பொன்னருவி,மேலப்பாளையம் சகுந்தலா,செல்லஞ்சேரி சிவகாமி,திருச்செங்கோடு விஷ்ணுப்ரியா,புதுச்சேரி பார்வதி ஷா,ஏற்காடு விஜயலெட்சுமி...

என தொடரும் துயரங்களின் பட்டியல் நீண்டுகொண்டே..”நன்றி தி இந்து 

”உணவை செரிப்பதாகவே கொலைகளையும் செரிக்கின்றோம்”

 சமத்துவம் வந்தாச்சுன்னு சொல்றவங்களுக்கு

இப்படி பெண்கள் வெளியே நடமாட முடியாத,வீட்டுக்குள்ளேயும் இருக்க முடியாத ஒரு நாடாகத்தான் நம் பாரதநாடு உள்ளதை உணர்த்த வேண்டியுள்ளது...

 தி இந்து வில் திரு சஞ்சீவிகுமார் அவர்களின் கருத்தை முன் மொழிகிறேன். 

’முதலில் பெண்களுக்காக நம் சமூகம் தயார் செய்து வைத்திருக்கும் பிம்பங்களை மாற்ற முற்படுவதே பிரச்சனைகளுக்கான தீர்வாக அமையும்.தாய் என்பவள் தெய்வமும் அல்ல:காதலி என்பவள் தேவதையும் அல்ல.அவர்களும் உங்களைப்போலவே அழுக்கும் மணமும் ஒருசேரப்பெற்றவர்கள் தான்.உங்களைப்போல நகமும்சதையுமான சகமனிதர்கள் தான். 

 குழந்தைகளுக்கு கற்பிப்போம்

 குடும்பத்தில் மனைவியை கணவன் அடிப்பது,அதிகாரம் செய்வது போன்ற செயல்கள் எல்லாம் பெண் என்பவள் ஆணால் ஆளப்படுவதற்கானவள் என்கிற பிம்பத்தை குழந்தைகளின் மனதில் ஆழப்பதியச்செய்து விடுகிறது.இதன் முற்றிய வடிவம் தான் ஆணால் ஆளப்பட முடியாமல் போகும் பெண்ணை கொலை செய்வதில் முடிகிறது.

 வேலைகளில் ஆண்வேலை,பெண்வேலை என்று எதுவும் இல்லை.சூழலைப்பொறுத்து அனைத்து பணிகளையும் சரிசமமாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்.மனைவியை மட்டுமின்றி அனைத்து பெண்களையும் விளிக்கும் போது மரியாதையாகப்பேசுங்கள்....”
 இப்படி கட்டுரை எழுத பெண்களை உணர்ந்து கொண்டவர்களால் மட்டுமே முடியும் ...நன்றி சஞ்சீவி சார்.

Tuesday, 8 March 2016

மகளிர் தினத்தில் மாணவிகளுடன்

மகளிர் தினத்தில் மாணவிகளுடன்

இன்று என் மாணவிகளிடம் மகளிர்தினம் குறித்த விழிப்புணர்வு பற்றி பேசினேன்...

 விளம்பரங்களில் செண்ட் அடித்த ஆணைச்சுற்றும் பெண்களா நீங்கள்..? அரைகுறை ஆடையணிந்து வலம் வரும் கதாநாயகிகளுக்கு பின் உள்ள வேதனை அளவிட முடியாதது .. அவர்களைப்போல் அலங்கரித்து கொண்டு ஆண்களை பின்னே அலையவைக்க பிறந்தவர்களா நீங்கள்?

Sunday, 15 November 2015

யார் மீது தவறு?

யார் மீது தவறு?

வட மாநிலத்தில் ஒரு இளைஞன்...பெண்ணிடம் பாலியல் வன்முறை செய்ய முயன்றான் என்பதற்காக அவனை பொதுமக்கள் அடித்து துவைத்து செருப்பு மாலைப்போட்டு அரைகுறை ஆடையுடன் நடுத்தெருவில் இழுத்து வரும் செய்தியைப்பார்த்த போது மனம் வலித்தது....

யார் மீது தவறு ?

பெண் என்றாலே போகப்பொருள் என்ற கற்பிதத்தை ஆண்கள் மனதில் பதிய வைத்தது யார்?

பெண்கள் ஆண்களின் உடைமைகள் என்ற எண்ணத்திற்கு வலுவேற்றியது யார்?

பெண்களுக்கு என்று எந்த வித தனிப்பட்ட ஆசைகளும் எண்ணங்களும் சுயமரியாதை இருக்க கூடாதென்ற எண்ணத்தை ஊன்றியவர்கள் யார்?

பெண்களுக்கு சமூகச்சிந்தனைகள் தேவையில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்தது யார்?

பெண் என்பவள் தாழ்த்தப்பட்ட குலத்தினும் தாழ்ந்தவள் எனத்தாழ்த்தியது யார்?

பெண்களை அலங்காரப்பொருளாக்கி மகிழ்வது யார்?

பெண்களே தங்களை அழகு பொம்மைகள் என எண்ண வைத்தது யார்?
ஆண்களின் ஆசை தனிக்கும் கருவியாகப்பெண்களைப்பயன் படுத்திக்கொள்ளலாம் என்ற உரிமையை யார் கொடுத்தது?

கல்வி கற்ற பெண்கள் கூடத்தெளிவின்றி வாழக்கற்றுக் கொடுத்தது யார்?

பெண்களைப்பொதுப்பொருளாக்கி மகிழ்வது யார்?

எந்த பெண்ணாயினும் உடல்ரீதியான பேச்சால் வீழ்த்தலாம் என நினைத்து வெற்றி பெற்றது யார்?

அந்த இளைஞன் ஒரு அம்பு மட்டுமே...இவனை அடித்தால் வேறு ஒருவன் எழுவான் பெண்களை பாலியல் வென்முறை செய்ய...அவனை என்ன செய்வது...

சமூகப்புரட்சி நடந்தால் ஒழிய பெண் என்பவள் ஒரு போகப்பொருளாகவே தானும் எண்ணி வீழ்வாள்...

பெண் என்பவள் சகமனுஷி என்ற எண்ணத்தை விதைத்தால் ஒழிய பெண்களின் மீதான வன்முறை அழிய வாய்ப்பே இல்லை...குடும்பமும் சமூகமும் இந்த எண்ணத்தில் இணைந்து பயணித்தால் மட்டுமே பெண்ணும் ஆணும் தெளிவாக வாய்ப்புண்டு..




Sunday, 15 March 2015

இணையும் கரங்களின் கண்டனமாக...

இணையும் கரங்களின் கண்டனமாக...

கொல்கத்தாவில் 72 வயது கன்னியாஸ்திரி 8 மிருகங்களால் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.தி இந்து[16.3.15 தமிழ்ச் செய்தி

ஆடைக்குறைப்பு தான் பெண்களின் பாலியல் வன்முறைக்கு காரணம் என கூறும் ஆண்கள் இக்கொடூரத்திற்கு என்ன காரணம் சொல்லப்போகிறார்கள்.

பிணத்தைக்கூட புணரத்துடிக்கும் மிருகங்களுக்கிடையேத்தான் பெண்கள் வாழ வேண்டிய நிலை...

பெண் உடல் மட்டுமே பிரதானமாகக்கருதும் ஆண்கள் எப்போது மிருக நிலையிலிருந்து மனித நிலைக்கு வரப்போகிறார்கள்..மன்னிக்கவும் எந்த மிருகங்களும் இப்படியொரு கொடூரத்தைச்செய்யாது....அதனின் கீழானவர்கள்...
இந்தியாவின் மகள் படத்தை தடை செய்தால் மட்டும் போதுமா...?

Tuesday, 7 October 2014

இன்னும் எத்தனைக்காலம் தான் கேட்க வேணும்...?

இன்னும் எத்தனைக்காலம் தான் கேட்க வேணும்...?

மதிப்பிற்குரிய ஜேசுதாஸ் அவர்களுக்குள் உள்ள ஆணாதிக்கச் சிந்தனைகள் வெளிப்படும் நேரங்களாய் ..தற்பொதைய கூற்று..

”அணியும் ஆடையினால் மற்றவர்களுக்குத் தொல்லை தரக்கூடாது”
அதற்கு பதிலடியாய் கவிஞர் வெண்ணிலா....

 தமிழ்” தி இந்து” வில்
”எங்கள் ஆடைகளை உரித்து தான் நீங்கள் எல்லோரும் மீசையை முறுக்கிக் கொண்டு எகத்தாளமாக உலா வருகிறீர்கள் என்ற ரகசியம் அறிந்தவர்கள் நாங்கள்.எங்கள் பிரியத்துக்குரிய ஆண்களை நிர்வானமாக்கிவிட்டு நாங்கள் எப்படி வெளியேறுவோம் ஆண்களே”என சாடியுள்ளார்.

உடையணியாத விலங்குகள்,பறவைகளுக்கு இந்த பிரச்சனைகள் ஏதும் வருவதில்லை .பெண்ணாய் பிறந்த பாவத்திற்கு இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இப்படி கேட்க வேண்டி வருமோ.?

நேற்று கூட ராமநாத புரத்தில் ஏழு வயது சிறுமிக்கு பாலியல் பலாத்காரம் நிகழ்ந்துள்ளது.ஜேசுதாஸ் அவர்களே இதற்கு என்ன பதில் சொல்லப் போகின்றீர்கள்.ஆண்களின் வக்கிர குணங்கள் மாறவேண்டும் என நினைத்தால் அது சரியான தீர்வு....அதைவிட்டு இப்படியெல்லாம் பேசுவது உங்களை நீங்களே தரம் தாழ்த்திக்கொள்வது போலாகாதா....

பெண்கள் எப்போதும் ஆண்களின் கைலி தெரியுது ,உள்ளாடை தெரியுது என புலம்பிக்கொண்டிருக்க மாட்டார்கள் .அவர்களுக்கு சமாளிக்க வேண்டிய பிரச்சனைகள் ஏராளம் உள்ளது.பார்வை சரியில்லாதவர்களின் பேச்சுக்களை புறந்தள்ளி வாழ எங்கள் குழந்தைகட்கு கற்று தருகின்றோம்...அரைகுறை ஆடையில் திரையில் பெண்களை ஆடவிட்டு ரசிக்கும் ஆண்கள் தான் உடைகளைப் பற்றி பேசுகின்றார்கள்...என்பதை புரிந்து கொள்ளுங்கள்..ஆண் குழந்தைகட்கு   பெண்களை மதிக்கும் தன்மையை கற்றுக்கொடுங்கள்...

இன்னும் தொடரும் சிறுமிகளின் பிரச்சனைகளுக்கு என்ன காரணம் என்பதை உணருங்கள் தோழர்களே.

Thursday, 11 September 2014

என்ன தப்பு?



இன்று வகுப்பில் சமூகத்தில் பெண் குழந்தைகட்கு வரும் பாதிப்புகளைக்கூறி ஆபத்திற்கு உதவ,உன்னைத் தற்காத்துக் கொள்ள என்னன்ன செய்யலாம் என்ற கலந்துரையாடலில் குழந்தைகளின் பதிலாய்..ஒரு குரல்.மிளகாய்த்தூள் வச்சுக்கலாம்மா...இல்லம்மா..கத்தி வச்சுக்கலாம்மா..என்றது வேறு ஒரு குரல்...1098க்கு போன் பண்ணலாம்மா என்றது ஒரு குரல்...வேண்டாம்மான்னு ஓங்கி ஒலித்தது...ஒரு குரல் அனைவரும் நோக்க, ஆசிட் வச்சுக்கலாம்மா...அதிர்ந்து போனேன்....அன்பான குழந்தைகளின் உலகம் ..இப்படியா மாறுவது...தப்பும்மா என்றேன்...ஏம்மா தப்பு ஆண்கள் மட்டும் தன் சுயநலத்துக்காக முகத்துல ஊத்தி எத்தன பெண்கள வீணாக்குனாங்க ...நாங்க எங்க தற்காப்புக்கு வச்சுக்கிட்டா என்ன தப்பு..?
வன்முறைக்கு வன்முறைத் தீர்வல்லம்மா என.....
அப்போதைக்கு குழந்தைகளை மடை மாற்றி விட்டேன் ..ஆனால்.....?!

Saturday, 21 June 2014

பூங்கொடி

பூங்கொடி
------------------
சின்னக்கொடி நான்
சீராக வளரும் முன்னே
சீரழிச்ச கொடுமைய..
பார்த்துகிட்டு இருக்குமோ
தமிழினம்..

தூ..தூ...நீங்களும் உங்க
பண்பாடும்..

இலங்கையிலதானேன்னு
கண்டுக்காம விட்டீங்க..

சென்றாயன் பாளையம்னு
வேடிக்கை பார்க்குறீங்களே

பிள்ளையும் இழந்து
ஊர்கொடுமையும் தாங்குற
அப்பாவ தனியா போராட
விடுறீங்களே

 சீச்சீ நீங்கள்லாம்
மனுசங்கத்தானா

கொடுமைய கேட்காத பாவிகளே
உங்க வீட்லயும்
பெண்பிள்ளைக்கு வாராதோ
என் நிலைமை...

குடிசை ஓட்டையில்
நிலவைப்பார்க்க
தங்கையோட போட்டியிட்டு

கிழிந்த போர்வைக்குள்ள
அண்ணணோட தங்கையும்
சேர்ந்து தூங்கிய என்னை

கதவு இல்லாக் குடிசையில
காலன் போல வந்து
காமவெறி பிடித்த கும்பலொன்று

கதற கதற தூக்கிப் போய்
இருவர் கை பிடிக்க
இருவர் கால் பிடிக்க
அரக்கன் போல மேல் விழுந்தொருவன்
வளராதநெஞ்சுல
வாய வைத்துக் கடித்தான்
வலியோட கத்துனேனே
கொடூரன் விட்டானில்லையே

காலிடுக்கில்
ரத்தம் வர ரத்தம் வர
மாறி மாறி
ராட்சன்களாய் குதறி வச்சானுங்களே

அழக்கூடத்திராணியின்றி
மயங்கிவிழுந்தவளை
மிருகம் போல கடிச்சு
தூக்குல தொங்கவிட்டானுங்க...

இதுதான் தமிழன் பண்பாடா
சிறுகுழந்தை வாழத்தகுதியில்லா
தமிழ்நாட்டி பெருமையைப்
பேசாதீர் வாய் திறந்தினி...

ஊர்கூடித் துரத்திட
என் தந்தை பயந்தோட
துணைவந்தீரோ
தமிழர்களே
ஈழத்தேசமோ இது..?

அரக்கர் கூட்டமோ
அங்குமிங்கும் அலைகின்றது
அடுத்த சிறுமியைத் தேடி
காவலர்களுக்கும் பெண் குழந்தையுண்டு
காசு வாங்கி காமுகர்களை
சுதந்திரமாய்அலையவிடும்
 துரோகிகளைக் கொண்ட

தமிழ்நாடு தீக்கிரையாகி
அழிந்து போகட்டும்
மதுரை போல...
எரிந்து மடியட்டும்
இலங்கை போல..

 சேலம் அருகே சென்றாயன் பாளையத்தில் கதவு
இல்லாக் குடிசையில்தூங்கிக் கொண்டிருந்த சிறுமியைத் தூக்கிச் சென்று பாலியல் வன்முறை செய்து தூக்கில்
தொங்கவிட்டுள்ளனர்.காமவெறிப் பிடித்த மிருகங்கள்.

Wednesday, 30 April 2014

பெண்களும் அரசியலும்

20.04.14 அன்று விஜய் டி.வி. நீயா ?நானா? விவாதம் .

பெண்களுக்கு அரசியல் அறிவு தேவையா ?இல்லையா?என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

சிறப்பு விருந்தினர்களாக கவிஞர்.குட்டி ரேவதியும்,வழக்குரைஞர் அஜிதா அவர்களும் கலந்து கொண்டனர்.

பெண்மையின் இரு பக்கமும் அன்று உணரப்பட்டது.

தேவை இல்லை என்பவர்களின் கருத்துக்களாய்
-----------------------------------------------------------------------------
*என் குடும்பம் நல்லாருக்கு எனக்கு ஏன் அரசியல்  தெரியனும் ?தேவையில்லை என்பதே பெரும்பாலோரின் கருத்தானது.எனக்கு அழுத்தும் வேலைச்சுமையில் இது தேவையில்லை,அரசியல் ஆர்வமூட்டுவதாக இல்லை,அழகு முக்கியமாகக் கருதுவதால் தேவையில்லை என பெண்களின் அறியாமையை வெட்டவெளிச்சமாக்கின.
*ஆசிரியரின் கூற்றாய்  அரசியியலைப் பற்றி மாணவிகளுக்கும் சொல்லித்தரமாட்டேன் என்றது அதிர்ச்சியைத் தந்தது.நாட்டின் அரசியியலையும் ,பொருளாதாரத்தையும் உணராத மாணவர்கள் எப்படி வருங்காலத் தூண்கள் ஆவார்கள்.

தேவை என்பவர்களின் கூற்று மகிழ்வைத் தந்தது.-
-----------------------------------------------------------------------------

*எனக்குத் தேவையான,நான் விரும்பும்  கல்வி எனக்கு கிடைக்கவில்லை எனில்காரணமென்ன என விளக்கி.கல்விக்கொள்கையை உருவாக்கும் அரசியியல் அறிவு கொஞ்சமாவது தெரிந்திருக்க வேண்டும் .அரசியியல் பற்றி பெண்கள் தெரிந்திருக்கூடாது என்பதிலும் ஒரு அரசியியல் உள்ளதென ஒரு கல்லூரிப்பெண் அழக்காக பொறுமையுடன் எடுத்துக்கூறியது சிறப்பாக அமைந்தது.
தன் மகளுக்கு அண்மையில் உள்ள பள்ளியில் ஆர்.டி.இ.ஆக்ட்டின் படி கல்வி கேட்டுப் போராடியப்பெண் அழகாக அரசியியல் அறிவு ஏன்  தேவை என்பதைப் பற்றி விளக்கினார்.

வழக்குரைஞர் அஜிதா
---------------------------------------
தரமற்ற பொருளை வாங்க வேண்டிய கட்டாயத்தை அரசியியல்
 உருவாக்கியுள்ளது.

தாய்ப்பாலில் கூட 17%விசம் கலந்துள்ளதென ஆய்வு கூறுகின்றது.

டி.வி.க்கள் எந்த பென்ணும் ஒல்லியாக அழகாக ,வெள்ளையாக இருக்க வேண்டுமென தூண்டுகின்றது.இதை பார்க்கும் பெண்கள் அழகு நிலையம்,அழகு சாதனப்பொருட்களுக்காக அதிகம் செலவு  செய்ய வேண்டிய
கட்டாயத்திற்கு தள்ளப்படுவதும் ஒரு அரசியியல் தான்.நாம் நாமாக இருப்பதை தவறு எனக் கற்பிக்கப்படுகின்றது.நமக்கு நடக்கும் வன்முறைகளை தட்டிக் கேட்க அரசியியல் அறிவு தேவையாக உள்ளதென கூறினார்கள்.

கவிஞர் குட்டி ரேவதி
--------------------------------
தற்பொழுது உள்ளாட்சி அரசியியலில் 44,000 பெண்கள் பதவியில் உள்ளனர்.
கொஞ்சம் அரசியியல் அறிவுள்ள பெண்கள் உள்ளனர்.ஆனால் பிரதிநிதித்துவம் எடுப்பதில்லை என்பதே குறை.
பிறருக்குத் தெரியாமல் வீட்டிற்குள் நடக்கும் வன்முறைகளை ஏற்றுக்கொள்ள பழக்கப்பட்டுள்ளனர்.
தன் உரிமை எதுவென அறியாத நிலையில் பென்கள் உள்ளனர்.
150வருடங்களுக்கு முன் சாவித்திரி பாய் என்ற பெண்மணி தெருவில் இறங்கிப் போராடியதன் விளைவே இன்று நாம் கற்கும் கல்விக்கு அடிப்படை என்பதை உணரவில்லை.எதுவும் போராடியே பெண்கள் இந்த நிலையை அடைந்துள்ளனர்.
பெண்களின் சுயநலம் அடியோடு அழிக்கப்பட வேண்டும்.
சமூகம் பெண்களை ஒதுக்கி வைத்துள்ளதை அறியாத நிலையிலே இன்று பெண்கள் உள்ளனர்.
என விவாத களம் பெண்களுக்கு அரசியியல் அறிவு தேவை என்பதை அவர்கள் வாயிலாகவே சொல்லவைத்த விதம் அழகு.
----------------------
 என் கருத்தாய்

மனித இனத்தில் சரிபாதி உள்ள பெண்கள் ஈடுபடாத எதுவும் சிறக்காது

உரிமையோடு வாங்கண்ணே.வாங்கக்கா என அழைத்து வியாபாரம் செய்யும் அண்ணாச்சி கடைகள் தொலைந்து போய்க்கொண்டுள்ளது.பேரம் பேசி ,உறவை வளர்க்கும் நம் சிறு வணிகர்கள் பன்னாட்டு வணிகத்தின் பளபளப்பின் முன்னால் நிற்கமுடியாமல் அழிந்து கொண்டுள்ளனர்.

ஒரே இடத்தில் எளிதாக வாங்கலாம் அவன் என்ன விலை விற்றாலும் பரவாயில்லை என ஓடும் நாம் நம் நாட்டு வணிகர்கள் அழிவது பற்றி சற்றும் யோசித்தோமில்லை.

கல்விக்கு விலை கொடுக்க பணத்தை நோக்கி பறக்கும் நாம்  ,தவறவிடுவது நம் உறவுகளை என்பதை உணர்ந்தோமில்லை.

இவ்விவாதத்தில் கலந்து கொண்டு அரசியியல் அறிவு வேண்டும் என கூறிய பெண்கள் எளிமையாக இருந்தது அழகு.மகிழ்வாகவும் இருந்தது.அறிவை நாடும் பெண் ஆடம்பரத்தை நாடமாட்டாள் என்பதைக்காட்டியது.

தெளிவாக கருத்துக்களை பொறுமையாக எடுத்துக்கூறிய விதமும் அருமை.

அவர்களின் விரிந்த விசாலமான பார்வை பெண்மையின் சிறப்பை மேலும் கூட்டுவதாக அமைந்தது.வாழ்த்துக்கள் கூறவைத்தது.

தேவையில்லை என வாதிட்டவர்களின் ஆடம்பரமும்,தெளிவில்லாத பதட்டமான பேச்சும்,தான் பிடித்த முயலுக்கு மூணுகால் தான் என பிடிவாதமாக இருந்ததும்,சுயநலமான தன்மையும்  பெண் வளர வேண்டிய பாதை நெடுந்தூரம் என்பதை சுட்டிக்காட்டியது

.நாம் வாழும் வாழ்க்கையில் அரசியியல் கலந்துள்ளது .இதை அறிந்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் பெண்ணினம் உள்ளது என உலகுக்கு உணர்த்தும்  விதமாய்

 விஜய் டி.வி.யின் நீயா?நானா?
அமைந்தது நிகழ்ச்சி தயாரித்த அனைவருக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்களும் நன்றியும்.


 
 

Thursday, 27 February 2014

பெண்

இன்று தினமணி 28.2.2014 செய்தித்தாளில்ஆம்பூர் அருகே 12.7.2012 இல் பகலில் வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த 10 வயது சிறுமியை தனது பேத்தியை விட்டு அழைத்து வரச் சொல்லி 60 வயது மிருகம் ஒன்று பாலியல் வன்முறை செய்து, வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியும் உள்ளது .இவ்வழக்கின்  தீர்ப்பாய் வேலூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை தீர்ப்பளித்துள்ளது .