World Tamil Blog Aggregator Thendral: இணையும் கரங்கள்
Showing posts with label இணையும் கரங்கள். Show all posts
Showing posts with label இணையும் கரங்கள். Show all posts

Monday, 18 July 2016

ஏன்மா நேத்து வரல?

ஏன்மா நேத்து வரல?

ஆறாம்வகுப்பில்  சேர்ந்துள்ள.,பள்ளியிலேயே குட்டிச்சிறுமி அவள்....
எல்லோருக்கும் பிடிக்கும் அமைதியான முகம்.

எங்க அம்மா மேல சுடுதண்ணி ஊத்திடுச்சு அம்மா ..நான் தான் வீட்டுவேலை பார்த்தேன் அதனால வரலம்மா. இப்ப எப்படிடா இருக்காங்க...பரவால்லமா நடக்க முடியுதா காலில் ஊத்திடுச்சுன்னு சொல்றியேம்மா என்றேன். 

அவங்களால நடக்கவே முடியாதும்மா தவழ்ந்து தான் செல்லமுடியும் போலியோ அட்டாக்ன்னு சொன்னா அதிர்ந்து போனேன்.

 ஏன்னா அவ அப்பாவாலும் நிமிர்ந்து நடக்க முடியாது.அவரும் மாற்றுத்திறனாளி.தனியார் மருத்துவமனையில் சலவைத்தொழிலாளியாகப்பணிபுரிகின்றார். இருவரும் .பத்திரிக்கை மூலம் வந்த விளம்பரத்தில் பார்த்து திருமணம் செய்துள்ளனர் என்றாள்.

 இரண்டு பெண் குழந்தைகளை கஷ்டப்பட்டு படிக்க வைக்கின்றனர்.இவள் என்னிடம் ஆறாம்வகுப்பு படித்தாள்...

கஷ்டப்படுகிறார்களே என்று நாம் உதவி செய்ய கேட்டால் வேணாம்மா இன்னும் கஷ்டப்படுற குழந்தைக்கு செய்யுங்கன்னு தன்மானத்தோடு கூறுபவளை அதிசயமாகப்பார்ப்பேன்.

 ஒழுக்கத்திலும் ,மரியாதையிலும் சிறந்த குணமுள்ளவள்...எங்க அப்பா அம்மாவ காப்பாத்தனும் டீச்சர்னு அடிக்கடி சொல்வாள்...அவள் அப்பாவும் எது என்றாலும் உடனே அலைபேசியில் சொல்வது வழக்கம். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 485     /500 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்று பெருமை சேர்த்தாள்.

 இவ்வாண்டு[2016] பன்னிரெண்டாம் வகுப்பில் 1116/1200 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் மாணவியாகவும் .ஆங்கிலத்தில் 190/200 மதிப்பெண்கள் பெற்று அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளாள்.

சென்னை அகரம் பவுண்டேசன் இவளுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது. சென்னையில் உள்ள ராஜேஸ்வரி பொறியியல் கல்லூரியில் சீட் கிடைத்துள்ளது.கல்லூரிச்செலவும் விடுதிச்செலவும் அகரம் பவுண்டேசன் செய்யும் போலம்மா.

மற்ற போகவர செலவு,அவளுக்குத்தேவையானவற்றை வாங்குற செலவு நம்முடையதும்மா என அவ அப்பா கூறிய போது..

 நம்மால் என்ன செய்ய முடியும்னு தோன்றியது.நன்கு படிக்கும் அக்குழந்தைக்கு உங்களாலும் முடியுமெனில் உதவலாம்.

 மாற்றுத்திறனாளி பெற்றோரின் போராட்ட வாழ்க்கையில் நாமும் சற்று கை கொடுத்து தூக்கிவிடலாமே.....

 தனது ஆங்கில ஆசிரியரிடமிருந்து ஆங்கிலத்தில் முதல் மதிப்பெண் பெற்றமைக்கு பரிசு வாங்கும் எங்களின் நந்தினி அன்னாள்......

உதரவும் கரங்கள் பேச 9659247363

Thursday, 18 December 2014

குழந்தைகளுக்கான நாடில்லையா இது.?..யார் பொறுப்பு இதற்கெல்லாம்.?.

இணையும் கரங்களின் குரலாய்..


குழந்தைகளுக்கான நாடில்லையா இது.?..யார் பொறுப்பு இதற்கெல்லாம்.?.

கேட்க முடியவில்லை...ஆறாம் வகுப்பும்,பத்தாம் வகுப்பும் ...?!

ஆசிரியர்களின் கைகளைக்கட்டிப்போட்டு அவர்கள் மாணவர்களின் வன்முறையை பார்வையாளராய்ப் பார்க்கும் நிலை தொடர்ந்தால் இன்னும் சீரழியும் சமுகம்...

பாலுணர்வு போதையாய் வளரும் சந்ததிகளை  அழிப்பதை யார் கேட்பது?

மதிப்பெண்களை நோக்கி ஆசிரியர்களை ஓடவைப்பதை விட மாணவர்களின் மனதை நோக்கி ஓடவைத்து அவர்களை மடைமாற்றம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்..

மாணவர்களுக்கு சமூகத்தில் பொறுப்பை அளித்து,சமூகக்கடமையை உணரவைக்கும் பாடத்திட்டம் எப்போது வரும்?

சமூக வலைத்தளங்கள் குழந்தைகள் மனதில் விடத்தை விதைக்கின்றன.சீன நாட்டில் இத்தகைய விடக்கிருமிகளை அனுமதிப்பதில்லை..நமக்கு தானா தெரியலன்னாலும் பார்த்தாவது...கத்துக்க எப்போது முயலுவோம்?


Sunday, 2 November 2014

இணையும் கரங்களின் நோக்கம் மற்றும் கொள்கைகளாக...

இணையும் கரங்களின் நோக்கம் மற்றும் கொள்கைகளாக...
--------------------------------------------------------------------------------------
1]பாதிக்கப்பட்ட குழந்தைகள் பட்டியல் சேகரித்தல்.தேவையான உதவிகளைச் செய்தல்.

2]குழந்தைகளுக்கான சட்டங்கள் என்னென்ன என்ற விவரப்பட்டியல் தயாரித்தல்.

3]பள்ளிகளில் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு பயிற்சிகள்,கல்வித்துறையுடன் இணைந்து அளித்தல்.

4]கல்லூரி மாணவர்கள் கொண்ட அமைப்பு உருவாக்கல்.

5]ஆண் குழந்தைகட்கும் பெண் குழந்தைகட்கும் உள்ள சமூகக்கடமையை உணர்த்தும் பாடத்திட்டம் ,செயல் திட்டங்கள் கல்வியில் சேர்க்க வலியுறுத்தல்.

6]பாதிக்கப்பட்ட குழந்தைகட்கு உளவியல் வழிகாட்டல்கள்.

7]அவரவர் பகுதியில் உள்ள இளைஞர்களோடு இணைந்து பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்ட வகை செய்தல்.

8]யதார்த்த வாழ்வை உணர்த்த முயற்சி எடுத்தல்.

9]மாணவ வழிகாட்டிகளை உருவாக்கல்.வளரும் சமுதாயம் உணர்ந்தால் மாற்றம் நிச்சயம் வரும்.

10]குழு உறுப்பினர்கள் பொறுப்புணர்வுடன் செயல் படுதல்.

11]இது குழந்தைகட்கான சேவையை அடிப்படையாகக் கொண்டு துவங்கப்பட்டுள்ளது.இதை தவறான  வழிகளுக்கு பயன்படுத்தாமல் கண்ணியம் காத்தல்.

12]வன்முறையால் எப்போதும் தீர்வு கிடைக்காது என்பதை உணர்ந்து நமக்கான பாதையில் தீர்வு நோக்கி நடத்தல்.

இது என்னில் தோன்றியுள்ள கருத்துகள்...நீங்களும் கூறலாம்.மேலும் தொடர்வோம்..

இணையும் கரங்கள்-செயல் பாடுகள்

இணையும் கரங்கள்

கீழ் உள்ள செயல் பாடுகளில் உள்ள விவரங்களை திரட்டும் வேலையைத்துவங்குவோம்.

நமது குழுவில்

1]வழக்கறிஞர்கள் இருப்பின் சட்டம் தொடர்பான செய்திகளைத்திரட்டி தர வேண்டுகின்றேன்.

2]ஆசிரியர்கள்  குழந்தைகட்கு தேவையான கல்விமுறை பற்றிய மாற்றங்கள் குறித்து  கருத்துகள் வழங்கினால் உரிய வழியில் கொண்டு சேர்ப்போம்.

3]மருத்துவர்கள் இருப்பின் பாதிக்கப்பட்ட குழந்தைகட்கு எவ்வாறு மருத்துவ மற்றும் மனநல உதவி வழங்கலாம் என்பதை கூறும்படி கேட்டுக்கொள்கின்றேன்.

4]வாய்ப்பு உள்ள இளைஞர்கள் பள்ளி மாணவ குழு உருவாக்கலாம்..அவர்கள் வசிக்கும் பகுதிகளில்...
இது பொழுது போக்க அல்ல என்பதை குழு உறுப்பினர்கள் மாணவர்களுக்கு உணர்த்த வேண்டும்.

5]கல்லூரி மாணவர்களில் பொறுப்புள்ள மாணவர்களை இணைக்க வேண்டுகின்றேன்.குறைவான மாணவர்கள் போதும்.நற்சிந்தனை உள்ளவர்களாக இருப்பது முக்கியம்.

6]பாதிக்கப்பட்ட குழந்தைகள் விவரங்கள் சேகரிப்போம்.

.நிதானமாக செயல்படுவோம் .ஒவ்வொரு அடியும் வளர்ச்சியை நோக்கி செல்லும் வகையில்.