World Tamil Blog Aggregator Thendral: நன்றி
Showing posts with label நன்றி. Show all posts
Showing posts with label நன்றி. Show all posts

Monday, 23 February 2015

அனைவருக்கும் நன்றி

நம்ப தான் முடியவில்லை ...501 ஆவது பதிவில்
என் மனம் நிறைந்த நன்றி..

2012  திசம்பரில்  தற்செயலாக வலைப்பூ என்றால் என்னனு முழுசா தெரியாம எனது www.velunatchiyar.blogspot.com ஐ ஆரம்பித்தேன்.

2013இல் 76 பதிவுகள்..நான் தான் எழுதினேனா...நம்பமுடியல..ஆகஸ்ட் வரை 3 பதிவுகள் எழுதியிருந்தேன்..அக்டோபரில் கல்வித்திறை சார்பில் எங்களுக்கு வலைப்பூ பயிற்சி கொடுத்தபின் தான் பதிவுகளின் எண்ணிக்கை அதிகமாகத்துவங்கியது...

2014 இல் 320 பதிவுகள் எழுதியுள்ளேன்..

2015இல் நாற்பது பதிவுகள் ஆகி 500 பதிவுகள் எழுதியுள்ளேன் .குட்டி குட்டியாக என் மனதில் இருப்பவற்றை எழுதிய பதிவுகள் இவை.ஆனால் இன்னும் என் பதிவு அனைவருக்கும் பயன்படும் வகையில் தரமாக எழுத ஆரம்பிக்க வேண்டும் என நினைக்கின்றேன்...

முகநூல் நண்பர்களும் ,வலைப்பூ நண்பர்களும் கொடுத்த உற்சாகமே எனது வலைப்பூ வளர நீரூற்றியது...தொடர்ந்து உங்கள் ஆதரவை வேண்டி எனது நன்றி மலர்களை சமர்ப்பிக்கின்றேன்....