World Tamil Blog Aggregator Thendral: சிறந்த மனிதர்கள்
Showing posts with label சிறந்த மனிதர்கள். Show all posts
Showing posts with label சிறந்த மனிதர்கள். Show all posts

Wednesday, 29 July 2015

kalam.1

என்னசெய்தால் மகிழ்வார் கலாம்?
--------------------------------------------------------------

நேற்று வகுப்பில் கலாமின் நினைவுகளைப்பகிர்ந்து கொண்ட போது...

மாணவிகள் உண்மையை உணர்ந்து யோசிக்க ஆரம்பித்தனர்.

          இன்றோடு அவரை மறந்து விடாமல் எத்தனை எளிமையான வாழ்க்கையை வாழ்ந்துள்ளார்.....நாம் ஆடம்பரமான வாழ்க்கைக்கு அடிமையாகிவிட்டோம்..இனியாவது நாம் நம் கடமையை சிறப்பாக முடித்து ..அவருக்காக நாம் வருத்தப்பட்டது உண்மையான ஒன்று என்பது நிரூபிக்கவேண்டும்....

அவரின் கனவை நிறைவேற்ற மாணவர்களை வழிநடத்த வேண்டிய பொறுப்பு ,வருந்தும் ஒவ்வொருவருக்கும் உண்டு...

 நேர்மைக்கும் எளிமைக்கும் ,மனிதநேயத்திற்கும் கிடைத்த மரியாதையைக்கண்டு இனியாவது அரசியவாதிகள் மாற முயற்சிப்பார்களா?அல்லது போலியாக வருந்தி மறந்துவிடுவார்களா?

மதங்களைக்கடந்து உயர்ந்து நிற்கும் மனிதரைக்கண்டு மதத்தலைவர்கள் இனியாவது மனிதநேயத்தோடு நடந்து கொள்வார்களா?

மக்களின் மேல் உண்மையான அக்கறை உள்ள ஆட்சி நடக்குமா இனியாவது?

மக்களின் மனதில் உயர்ந்து நிற்கும் அவருக்கு புகழ் பாடுவது,சிலைவைப்பதை விட மக்களுக்காக  நேர்மையாக வாழ அனைத்துக்கட்சிகளும் உறுதி ஏற்குமா?

எந்த கட்சியிலும் இல்லாமல் இந்தியமக்களின் மனதில் இடம் பிடித்த அவரைப்போல் இனி யார் வருவார்?

மாணவிகளாகிய நீங்கள் தான் இனி பொறுப்புள்ள அரசியல்வாதிகளாக உருவாக வேண்டும்...விவசாயத்தை நோக்கி நம் பார்வை திரும்பவேண்டும்...இதுதான் நீங்கள் அவருக்கு செய்யும் உண்மையான கடமை என்றேன்....யோசிக்க வைத்துள்ளேன்...

ஒவ்வொரு பெற்றோரும் ஆசிரியரும் முயன்றால் முடியாததும் உண்டோ..!

உறுதி ஏற்போம்....அனைவரும்..


முயற்சிக்கிறோம் அய்யா...வளமையான வருங்காலத்தை உருவாக்க..
போய்வாருங்கள்....கனத்த மனதுடன் வழி அனுப்புகின்றோம்...வேறு வழியின்றி..

Thursday, 16 April 2015

விதையானவள்.....துளிர்க்கிறாள்...

விதையானவள்.....துளிர்க்கிறாள்...

மயங்கிய நிலையில் பல நாட்கள் இருந்த அந்த குழந்தை விழித்தபோது வயிற்றில் வலியும் சுமையுடன் இருப்பது போன்ற உணர்வும் ஏற்பட கலங்கிய குரலில் கேட்டவளை அவளை கவனித்துக்கொண்ட பெண் கவலைப்படாதேம்மா  உன் மூளை பாதிக்கப்பட்டு வீங்கியதால் அதற்கான இடம் தேவைப்பட உன் மண்டை ஓட்டின் சிறு பகுதியை அறுத்து உன் வயிற்றுச்சதையோடு பொறுத்தியுள்ளார்கள் மீண்டும் அதை மண்டை ஓட்டில் பொறுத்தி விடுவார்கள் என்ற போது அந்த 13 வயது குழந்தை தன் கோணிய வாயால் புன்னகைக்க முயன்று ஏற்றுக்கொண்டாள்.எத்தனை மனத்துணிவு இருந்தால் சாதாரணமானவர் அச்சப்படும் நிலையை ஏற்கும் துணிவுடையவளாக இருக்கிறாள் என வியந்தாள் அவள்.கடைசியில் அந்த மண்டை ஓட்டை வைத்தால் தொற்று ஏற்படுமோ என்ற அச்சத்தில் பிளாட்டினம் வைத்து அவளின் தலைப்பகுதியை மூடியுள்ளார்கள் மருத்துவர்கள்.

அய்யோ என் குழந்தையின் புன்னகையைப் பறித்துக்கொண்டார்களே எனக்கதறி துடித்தார் அவளின் தந்தை...எப்படியும் அவள் பிழைத்துக்கொள்வாள் என நம்பிக்கையுடன் துவா செய்து கொண்டே இருந்தாள் அவள் தாய்....

உலகிலேயே அழகான பள்ளத்தாக்கு என கருதப்படும் சுவாட் பள்ளத்தாக்கில் பிறந்த அந்தக் குழந்தைதான் ...பெண்குழந்தைகளின் கல்விக்காக போராடிக்கொண்டிருக்கும் மலாலா யூசுப்சாய்.....பள்ளியிலிருந்து திரும்பும் போது தாலிபான் களால் தலையில் சுடப்பட்ட குண்டு அவளின் மூளையை உரசி தோளைத்துளைத்து...உலகே அந்தக்குழந்தைக்காக கண்ணீர் விட்டது.மருத்துவமனையில் மயங்கிய நிலையிலும் புத்தகப்பையை விரும்பியவள்...

                                 ”நான் மலாலா”

என்ற நூல் அவளது வரலாறை கண்முன் கொண்டுவந்து நிறுத்துகின்றது .கடந்த சில நாட்களாக அவளோடு வாழ்ந்த என்னுள் உறைந்து விட்டாள் ..பாகிஸ்தானின் நிலையை அவள் பிறந்த சுவாட் பள்ளத்தாக்கின் வரலாறை...மறைந்து வாழ வந்து அப்பகுதியையே பிடித்துக்கொண்டு மக்களை அழிப்பதையே அச்சுறுத்துவதையே இலட்சியமாகக் கொண்டு வாழும் தாலிபான்களின் உண்மை முகத்தை காட்டுகிறது... இந்நூல்.

பெரியோர்களுக்காக அனைவரும் போராட, குழந்தைகளுக்காக இன்று கூட நைஜீரியாவில் கடத்தப்பட்ட குழந்தைகள் அவர்களின் பெற்றோரை அடையும் வரைப்போராடுவேன் என தான் மிகவும் நேசித்த தன் நாட்டை இழந்து அயல் நாட்டில் வாழ்ந்து கொண்டு போராட்டத்தை தொடரும் அச்சிறுமிக்கு சென்ற ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்திருப்பதில் வியப்பில்லை....

அவளைப்போல் குழந்தைகளை உருவாக்க வேண்டும் என்ற உறுதி மனதில் பிறக்கின்றது .அவளது தந்தைக்குத்தான் அந்த பாராட்டைக்கூற வேண்டும்....அனைவரும் படிக்க வேண்டிய நூல்.

Friday, 2 January 2015

Raman Vijayan---மனித நேயமுள்ள விளையாட்டு வீரர் இராமன் விஜயன்


பாராட்டப்பட வேண்டிய மனிதராக...

தமிழ்நாட்டின் மிகச்சிறந்த கால்பந்தாட்ட வீரர் இராமன் விஜயன்...

தமிழ் நாட்டில் காரைக்குடிக்கு அருகில் உள்ள கண்ட்ரமாணிக்கம் என்ற கிராமத்தில் இருந்து இந்திய அணியின் மிகச்சிறந்த கால்பந்தாட்ட வீரர்...தோழர் இராமன் விஜயன்....

இவர் உருவாக்கியுள்ள கிராமத்து குழந்தைகளைக்கொண்ட கால்பந்து அணியினர் தற்பொழுது சிங்கப்பூரில் போட்டிகளில் வாகை சூடி வந்துள்ளனர்.இந்த அணி உருவாக்க அவர் பட்ட சிரமங்கள் எண்ணிலடங்கா...

விளையாட்டில் பிரகாசிக்கும் வீரர்கள் அனைவரும் பணி கிடைத்தவுடன் ....விளையாட்டை மறந்து விடுவது தான் தமிழகத்தில் சிறந்த அணி உருவாகாததற்கு காரணம்.மேலும் தமிழ்நாட்டில் புரொபசனல் கிளப் கால்பந்தாட்டத்திற்கு என இல்லை.எனக்கூறும் இவர்..1993இல்.இந்தியன் வங்கியில் பணி கிடைத்து 3 வருடங்கள் பணி புரிந்து ...தனது குறிக்கோளை நோக்கி செல்வதற்காக பணியைத்துறந்து ..கால்பந்தாட்ட வீரர்களை உருவாக்கும் பயிற்சியாளராக மற்ற வீரர்களுக்கு முன் உதாரணமாகத்திகழ்கின்றார்.

சமீபத்தில் நடைபெற்ற இந்திய சூப்பர் லீக் குழுவைத்தேர்வு செய்யும் உறுப்பினராகக் கலந்து கொண்டு அணி வீரர்களைத்தேர்வு செய்துள்ளார்..

தான் பிறந்த கிராமத்தைச்சுற்றியுள்ள குழந்தைகளைத்தேர்வு செய்து பயிற்சி அளித்து தற்பொழுது தன் முயற்சியால் சிதம்பரத்தில் கல்வி கற்றுக்கொடுக்கின்றார்....நல்ல மனங்கள் கொண்ட நண்பர்கள் இவரது முயற்சிக்கு தோள் கொடுக்கின்றனர்....இவரால் உருவாக்கப்பட்ட இந்த அணிதான் தற்போது சிங்கப்பூரில் போட்டிகளில் கலந்து கொண்டு அரை இறுதி வரை வந்துள்ளது....பேரூந்தில் செல்வதையே பெருமையாக நினைக்கும் குழந்தைகளை விமானத்தில் அமரவைத்து வெளிநாட்டிற்கு அழைத்து சென்று வியப்பில் ஆழ்ந்த குழந்தைகளை பார்த்து ரசிக்கும் மனித நேயமுள்ள சிந்தனையாளர்....

என் பள்ளிக்கு வந்திருந்த அந்தியூர் மலைப்பகுதிக் குழந்தைகளைப்பற்றி அறிந்த போது ..அவர்களில் நன்கு விளையாடக்கூடிய குழந்தைகளுக்கு பயிற்சி அளித்து கொண்டுவரலாம் எனக்கூறியுள்ளார்...

தான் தனது என்று வாழும் மக்களின் நடுவில் ..தமிழ்நாட்டில் கால்பந்திற்கென ஒரு குழுவை உருவாக்கி உலகப்புகழ் பெற வைக்க வேண்டும் என்ற குறிக்கோளை நோக்கி போராடிக்கொண்டிருக்கும் அவரது கனவு பலிக்க வாழ்த்துகள்...

 இன்று நியூஸ் 7 தொலைக்காட்சி அவரது நேர்காணலை காலை 8.00 அளிவில் ஒளிப்பரப்பியது..