World Tamil Blog Aggregator Thendral: இன்று என் வகுப்பில் எத்தனை பூக்கள் பூக்க போகின்றதோ....

Monday 1 June 2015

இன்று என் வகுப்பில் எத்தனை பூக்கள் பூக்க போகின்றதோ....

இன்று என் வகுப்பில் எத்தனை பூக்கள் பூக்க போகின்றதோ....

முன்பெல்லாம் வகுப்பில் 10 குழந்தைகள் நன்கு படிப்பவர்களாகவும்,20 குழந்தைகள் சுமாராக படிப்பவர்களாகவும் 10 குழந்தைகள் எழுத்தே தெரியாதவர்களாகவும் 6 ஆம் வகுப்பில் சேர்வார்கள் ..ஆனால் இப்பொழுது படிக்கின்ற குழந்தைகள் எல்லாம் தனியார் ஆங்கிலப்பள்ளியிலும்,சுமாராக படிப்பவர்கள் அரசுப்பள்ளியில் உள்ள ஆங்கில வழியிலும்,மிகவும் வறுமை சூழப்பட்ட ,பெற்றோர் இல்லாத,பாதிக்கப்பட்ட குழந்தைகளே தமிழ்வழியில் சேர்கின்றனர்....

5 ஆம் வகுப்பு வரை வார்த்தைகள் படித்தால் போதும் என்ற நிலையில்,தரையில் ஆசிரியர்கள் சூழ அமர்ந்து படித்த நினைவில் வரும் குழந்தைகளை பெஞ்சில் உட்கார வைப்பதற்கே ஒரு வாரம் ஆகும் ...ம் என்றால் உடனே என்னை சூழ்ந்து கொண்டு விடுவார்கள்...கடந்த இரண்டு வருடங்களாக எழுத்தே தெரியாத குழந்தைகள் அதிகம் வகுப்பிற்கு வருகின்றனர்...அவர்களை என் வழிக்கு இழுத்து மெல்ல படிக்கவும் எழுதவும் வைக்கும் முயற்சியில் துவக்கத்தில் கொஞ்சம் கடினமாயிருந்தாலும் இரண்டாம் பருவத்தில் தயாராகி விடுவார்கள்...
அச்சத்துடன் அம்மாவின் பின்னால் ஒடுங்கிக்கொண்டு,ஓவென அழுது கொண்டு வரும் குழந்தைகள்....வருட முடிவில் நீகளும் எங்க கூட வாங்கன்னு புலம்ப ஆரம்பித்து விடுவார்கள்....

இன்று என் வகுப்பில் எத்தனை பூக்கள் பூக்கப்போகின்றன என்பது தெரியாமல் ஆவலுடன் செல்கின்றேன்...குழந்தைகளை பார்ப்பதே மகிழ்வு தானே. 

4 comments :

  1. வணக்கம்
    தன்நம்பிகை முக்கியம்.. தொடருங்கள் வெற்றி நிச்சயம்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. மலர்களோடு மகிழுங்கள் அக்கா! வாழ்த்துகள்:)

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...