World Tamil Blog Aggregator Thendral: வீதி கூட்டம்-16

Sunday 14 June 2015

வீதி கூட்டம்-16

இன்று வீதி கலை இலக்கியக்களத்தின் பதினாறாவது கூட்டம்

புதுகை ஆக்ஸ்போர்டு உணவகக்கலைக்கல்லூரியில் மிகச்சிறப்பாய் நிகழ்ந்தது.
அமைப்பாளர்கள் சிவாவும்,தூயனும்  கூட்டத்தை தொய்வுறாமல் நடத்தினார்கள்.
அனைவரையும் சுரேஷ்மான்யா வரவேற்றார்.
சகோ சிவா “நாய்களுக்கான பிரத்யேக சலுகை,கொலை செய்யும் கலை என்றகவிதைகளை வாசித்தார்..அருமையாக.
நாகநாதன் ஹைக்கூ கவிதைகள் வாசித்தார்.சகுனம் சரியில்லை பூனை திரும்பியது என்ற கவிதை அருமை.
சகோ தூயன் பிறமொழி இலக்கியங்கள் அறிமுக நிகழ்வில் கன்னட எழுத்தாளர் சித்தலிங்காவை அறிமுகம் செய்தவிதம் நன்று

42,பட்லர் , என்ற ஆங்கில திரைப்படங்கள் குறித்த தனது பார்வையை கூறி சிறப்பித்தார்சகோ கஸ்தூரிரங்கன் ...
கிப்டட் ஹேண்ட்ஸ் என்ற ஆங்கிலத்திரைப்படம் குறித்து குருநாதசுந்தரம் அவர்கள் கூறினார்.
சகோ ஜெயா ,எஸ்.ராவின் இலைகளை வியக்கும் மரம் என்ற தொகுப்பில் உள்ள கட்டுரைகளை குறித்து சிறப்புடன் பகிர்ந்தார்...அவருடன் தூயன்,சூர்யாசுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
சகோ மீனாட்சிசுந்தரம் சிகரெட் குறித்த கவிதை வாசித்தார்.
அய்யா முத்து நிலவன் கூட்டத்தை செம்மை படுத்தும் கருத்துகளை கூறி வழி நடத்தினார்.
கூட்டத்தில் இருந்த அனைவரும் பங்கேற்க வீதி கூட்டம் சிறப்புடன் நடந்தது.

4 comments :

  1. வீதிக்கூட்டப் பகிர்வினைக் கண்டேன். தொடர்ந்து நடத்தபபடுவதறிந்து மகிழ்ச்சி. பாராட்டுகள்.

    ReplyDelete
  2. வணக்கம்
    வாழ்த்துக்கள் த.ம 3

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. எமது வாழ்த்துகளும் சகோ

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...