World Tamil Blog Aggregator Thendral: இனி இந்த நேரத்தில போவேன்...?

Tuesday 20 May 2014

இனி இந்த நேரத்தில போவேன்...?




நேற்று தோழி வீட்டுக்கு நீண்ட நாள் கழித்துச் சென்றேன் .வழக்கம் போல் பேசிய சிறிது நேரத்தில் அக்கா டி,வி. பாக்கலாமா என்று விஜய் டி.வி ல மகாபாரதம் பாக்க அழைத்தாள்.

திரௌபதியின் சேலையை உருவும் காட்சியாம்...2 குழந்தைகளும் வைத்த கண் அகலாது பார்த்துக் கொண்டு அதில் கேட்டது ..கர்ணன் .துரியோதனன் ,துச்சாதனன்,மூவரும் மாற்றி மாற்றி திரௌபதியை தாசி,வேசி என சொல்லிக் கொண்ட்டே இருந்ததைப் பார்த்து குழந்தை கேட்டாள்

தாசின்னா என்ன ?
தோழி சங்கடமாய் என்னை பார்த்தாள்
5பேர கல்யாணம் பண்ணதால அவள அப்படி கூப்புடுறாங்க..
2பேர பண்ணாலும் அப்படித்தானா?
ஆம் என்றேன்...

கொஞ்சம் சிந்திக்கும் குழந்தை அடுத்து என்ன கேட்பானோன்னு அச்சத்தில் நான்..
தசரதனுக்கு 60,000 மனைவியாமே....அவனுக்கு என்ன பேர் என்றான்

சக்கரவர்த்தி என்றேன் ....
நல்ல வேளை தாசி என்பது பெண்களை திட்டும் இழிவான சொல் என தெரியவில்லை...
என்ன சொல்வது...?

கடைசில சேலைய உருவலன்னு கவலையுடன் எப்படியும் இந்த வாரத்திற்குள் உருவிடுவான்னு சமாதானம் செய்து கொண்டே எழுந்தாள்

மனதிற்குள்...கொதித்தது..
பெண்களை அரச சபையில் நிர்வானப்படுத்துவது போன்று எழுத ஒரு ஆணால் தான் முடியும்.எந்த பெண்கவிஞரும் இப்படி எழுத மாட்டார்கள்.....

சிலம்பின் கண்ணகியா
இருந்தா  என்ன செய்வான்னு ஏன் எனக்கு தோணுச்சு..தெரியல

1 comment :

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...