World Tamil Blog Aggregator Thendral: அப்படியா....?உண்மையா?

Wednesday 14 May 2014

அப்படியா....?உண்மையா?



கட்டாயத்தின் பேரிலாவது ஏதாவது தெரிஞ்சுக்கலாமேன்னு மே மாதத்தில் படிப்பது வழக்கம்.அதன் விளைவாக இன்று படித்தது...

நாட்டுப்புறவியல் கல்வியும் களப்பணியும்--அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பாட நூலில்....இருந்து....

”தமிழ்நாட்டில் வாழும் கிறிஸ்தவர்கள்,இஸ்லாமியர்கள் நீங்கலாக ஏனையோர் இந்து சமயத்தவராகக் கருதப்படுவது ஒருபொதுவான மரபாக உள்ளது.ஆனால்,உண்மையில் இந்து சமயமென்ற சொல்லுக்குள் பெரும்பாலான தமிழர்களை அடக்குவது ஒரு வசதியின் பொருட்டே அன்றி உண்மையின் அடிப்படையில் அல்ல.தமிழ்நாட்டின் சமய வரலாற்றில் வேத சமயம்,சைவ சமயம்,வைணவ சமயம் என்ற மூன்று முக்கியச் சமய நெறிகள் வழக்கில் இருந்தமை மறுக்க முடியாத வரலாற்றுண்மையாகும்.”

“காலப்போக்கில் சில அரசியல்.பொருளாதாரச் சூழல்களுக்கேற்ப இச்சமயங்களை இணைத்து,இவையனைத்தும் ஒரே சமயம் என்ற புறத்தோற்றத்தை உருவாக்க முயன்றதன் வெளிப்பாடே இந்து சமயமாகும்”என்பார் ஆ.சிவசுப்பிரமணியன்.

இன்று இந்தியத் துணைக்கண்டத்தில் இந்துக்கள் ,இந்து சமூகத்தினர் என்றழைக்கப்படும் மக்கள் ஆங்கிலேயரின் வருகைக்கு முன் அவ்வாறு தம்மை அழைத்துக்கொள்ளவில்லை.

அவர்கள் பல்வேறு அடையாளங்களுடன் பல்வேறு சமூகங்களாக வாழ்ந்தனர்.அவர்கள் வாழ்ந்த இடங்கள்,பேசிய மொழிகள்,அவர்களது சாதிகள்,தொழில்கள்,சமய நெறிகள் அவர்கள் சார்ந்திருந்த சமயக் குழுக்கள் முதலியவைதான் அவர்களது அடையாளங்களை வரையறுத்தனேவேயன்றி.அவர்கள் அனைவரையும் ஒரே திணைக்குள் கொண்டு வருகிற ‘இந்துக்கள்’ என்ற சொல் அல்ல.பார்ப்பனிய தர்ம சாத்திரத்திலும் கூட இந்து சமூகம் என்பது ஏதும் குறிக்கப்படவில்லை என்பார் தே.லூர்து.

இதிலிருந்து இந்தியாவில் ஆங்கிலேயரின் வருகைக்கு முன்பு இந்து சமயம் என்ற ஒரு மரபு இல்லை என்பதை அறிகின்றோம்.”

மேற்கூறியதனைத்தும் பல்கலைக்கழக பாட நூலில் உள்ள கருத்துக்கள் தான்.

நானா ஏதும் சொல்லலப்பா....

No comments :

Post a Comment

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...