World Tamil Blog Aggregator Thendral: பார்வைக் கனல்

Tuesday 12 November 2013

பார்வைக் கனல்



கனிந்த பார்வை
கனலாய் மாற
தன்மான உணர்வு
தனலாய் தகிக்கின்றது...

பறக்க பறக்க
பணி முடித்து
பேருந்து நெரிசலில்
வியர்வை வழிய
வெறுப்புடன் நிற்கையில்
தோலை உரசி
சுகம் காணும்
எருமைகளைக் கண்டபோது

கனிந்த பார்வை
கனலாய் மாறியது...
 
வீட்டில் நுழையும்
ஏன் இவ்வளவு தாமதம்?
எங்க சுத்திட்டு வர
தாக்கும் கேள்விக்கணையால்
கனிந்த பார்வை
கனலாய் மாற
 
தன்மான உணர்வு
தனலாய் தகிக்கின்றது...!

புகைப்படம்: பார்வைக் கனல்


கனிந்த பார்வை
கனலாய் மாற 
தன்மான உணர்வு
தனலாய் தகிக்கின்றது

பறக்க பறக்க 
பணி முடித்து

பேருந்து நெரிசலில்
வியர்வை வழிய 
வெறுப்புடன் நிற்கையில்
தோலை உரசி
சுகம் காணும்
எருமைகளைக் கண்டபோது

கனிந்த பார்வை
கனலாய் மாறியது
வீட்டில் நுழையும் 
ஏன் இவ்வளவு தாமதம்?
எங்க சுத்திட்டு வர
தாக்கும் கேள்விக்கணையால்
கனிந்த பார்வை
கனலாய் மாற
தன்மான உணர்வு
தனலாய் தகிக்கின்றது...!

1 comment :

  1. சகோதரிக்கு வணக்கம்.
    பல நேரங்களில் கனிந்த பார்வை கனலாய் மாறி தான் போகிறது. பெண்மை என்றாலே மென்மை தான். இருப்பினும் அவர்கள் பாரதி கண்ட புதுமை பெண்ணாய் புறப்பட்டால் இவ்வையம் தாங்குமோ! நீங்கள் கூறிய எருமைகளை அடித்து விரட்டி விட்டால் தான் நல்லது. அற்புதமான சிந்தனைக்கு பாராட்டுக்களும் நன்றிகளும்..

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...