World Tamil Blog Aggregator Thendral

Monday, 3 July 2017

வீதி கலை இலக்கியக்களம் -40

வீதி கலை இலக்கியக்களம் -40

நாள்: 25.6.17
இடம் :ஆக்ஸ்போர்ட் சமையர்கலைக்கல்லூரி புதுக்கோட்டை .
காலம் :10.00 காலை

வரவேற்புரை :கவிஞர்  கீதா .

தலைமை :திருமிகு இரா .ஜெயா
உதவி தொடக்கக்கல்வி அலுவலர் .திருச்சி .

சிறப்பு விருந்தினர் :கவிஞர்  முருக தீட்சண்யா. மயிலாடுதுறை



கவிதை :கவிஞர்  மீரா .செல்வகுமார்,கவிஞர் செந்தில்குமார்.

நூல் அறிமுகம் :செல்வி எழில் ஓவியா "உயிராயுதம் "

பாடல் :கவிஞர் பவல்ராஜ் .

நன்றியுரை :கவிஞர் சிவகுமார் .

வீதி குறித்து விமர்சனங்கள்

செல்வி எழில் ஓவியா

எழில் ஓவியா added 7 new photos — feeling happy with இரா.ஜெயா and 3 others.
கப்படுத்தினேன்.மது ஒழிப்பிற்காக உயிரைக் கொடுத்த அய்யா சசி பெருமாள் அவர்களின் போராட்ட வாழ்க்கையை அவருடனே 10 வருடங்களுக்கு மேலாகப் பயணித்து இப்புத்தகத்தில் ஆவணப்படுத்தியுள்ளார் அருள்தாஸ் .
இப்புத்தகத்தை அறிமுகப்படுத்த வாய்ப்பளித்தமைக்கு நன்றிகள். 😀🙏🙏🙏😀



சிறப்பு விருந்தினர் கவிஞர் முருகதீட்சன்யா அவர்கள்
முருக தீட்சண்யா added 5 new photos.
,வீதி இலக்கிய களத்தின் அழைப்பாளனாக.
39 நிகழ்வுகளை ஒரு இலக்கிய அமைப்பு சத்தமில்லாமல் கடந்திருப்பது பெரும் வியப்பை தந்தது,40 வது நிகழ்வு சோலச்சியின் பாடலோடு தொடங்கியது, தொடர்ந்தது கவிதை வாசிப்பு, படித்ததை பகிரும் தோழர்கள் என்று ஒரு கலை இலக்கியத்திற்கான முழு தேடலாக வீதி இருந்தது,
#எழில்_ஓவியாவின்
நூல் விமர்சனத்தை விடவும் அவர் மேடையை கையாளும் விதம் என்னை கவர்ந்தது
அதை விடவும்
அவருக்குள்ள கோபமும் அதில் உள்ள நியாயமும் அவருக்கு இருக்கும் தெளிவான புரிதலும் வியக்க வைத்தது,தன் இயல்பில் தன்னெழுச்சியாக துடிப்பாக வளரும் இப்படியான குழந்தைகளை பார்க்கிற போது ஒரு மகிழ்ச்சி தோன்றும் ஒரு மகளின் தகப்பனாக.
Devatha Tamil அவர்கள் மிகச் சிறப்பாக நிகழ்வை ஒருங்கினைத்திருந்தார்,தலைமை ஏற்ற இரா.ஜெயா அவர்கள் தன் இயல்பான மொழியால் பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்,ஒரு தேர்ந்த கதை சொல்லியைப் போல. இவர் எங்கள் மயிலாடுதுறைக்காரர் என்பது கூடுதல் மகிழ்ச்சி.
ஒரு நல்ல அவையில் என் மனம் கவர்ந்த ஆளுமைகள் குறித்து பேசும் வாய்ப்பு Stalin Saravanan வழியாக கிடைத்தது
அவருக்கும் என் அன்பு.
வீதிக்கு என் வாழ்த்துகள்.
நண்பர் Andanoor Sura
தோழர் Neela Alangudi இவர்களின் சந்திப்பும் மகிழ்வை தந்தது.




சோலச்சி புதுக்கோட்டை பாடலுடன் தொடங்கி கவிதை விமர்சனம் கதை என கலை கட்டியது வீதிக்கு வந்த தோழர்கள். இது 40வது கூட்டம். வைகறை நினைவு படுத்திக் கொண்டோம். அவரது மனைவியை சந்தித்தேன். என்னால் முழுமையாக அவர் பற்றிய நினைவை பகிர முடியவில்லை. தாழம்பூ என்ற சிற்றிதழை 39ஆண்டுகளாக நடத்தி வரும் கோவிந்தராசன் அய்யாவை சந்தித்தேன் கிரியா ஊக்கியாக இருந்தார். உள் மனம் அவரை உதாரண புருசராக எடுத்துக்கொண்டு வலுப்பெற்றது. எல்லாவற்றுக்கும் நன்றிகளை கீதா Devatha Tamil தோழருக்கே சொல்ல வேண்டும். நல்ல சைவ சாப்பாட்டுடன் ஊர்த்திரும்பினோம். துண்டு போர்த்தி கௌரவித்தார்கள் பெருசா இருந்திச்சு. நன்றி முருக தீட்சண்யாவுக்கு.

நேற்று தோழர் Neela Alangudi வை சந்தித்ததில் ஒரு மகிழ்ச்சி ஒரு மிகச் சுவாரஸ்யமான புத்தக சேஸிங் அனுபவத்தை சொன்னார். அது கதையாக மாறினால் நன்றாக இருக்குமென தோனியது. கவிஞர் பவுல்ராஜ் மக்களிசை பாடலாக காலம் மாறிப்போச்சு என்று தானே எழுதி இசையுடன் பாடினார் மிக அருமையான தொடக்கம். Devatha Tamil தோழரின் தொடக்கம் அருமை இரா.ஜெயா தோழர் ஆசிரிய பணியில் இருந்து கொண்டு நல்ல தேர்ந்த வாசிப்பாளாராக இருப்பதும் மிக்க மகிழ்ச்சி. அவர்களின் மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.




துவாரகா சாமிநாதன் added 2 new photos.
 சூழலில் மிகத் திடமாக பேசினாள். என் செல்லப் பெண் துவாரகாவை இப்படித்தான் வளர்க்க வேண்டுமென நினைக்கச் செய்தாள். மக்களிசை பாடலை பாடியதும் தன் விமர்சனமாக பெண்ணின் உடைகளை மட்டுமே விமர்சித்து பாடும் போக்கு தவறெனவும் தனக்கு தாவணி கம்பெர்டா இருந்தா போட்டுகிறேன் அப்படியில்லை ஏதாவது திருநாளில் வீட்டில் மட்டும் தாவணியும் மற்ற நாளில் ஜீன்ஸ் போடுவதில் என்ன குற்றம் கண்டீர் பாப் கட்டிங்கும் குட்டை பாவாடை போட்டால் உங்களுக்கேன் கோபம் வருகிறது அது போல ஆணுக்கான உடையை ஏதும் சொல்கிறீர்களா என பொரிந்து தள்ளினாள். பதில் சொல்லும் வரை பாடிய அய்யாவை விடவில்லை. சபாஷ் போட வைத்தாள். வளர்ப்பும் வாசிப்பும் சரியான பாதையில் சென்றால் அவள் பெரிய ஆளா வருவா..நாமும் அவளை வாழ்த்துவோம். அவளாண்ட போன் நம்பர் வாங்காது வந்துட்டேன். நாமும் அவளோடு உரையாடி உரமேற்ற வேண்டுமே. சமூகத்திற்கு ஒரு போராளி கிடைத்து விட்டாள்.
நம்பிக்கை ஊற்று நீ
வீதிக்கு வா மனிதியே
உலகம் உன் பின்னால் வரும்
கனல்மதிக்கு பிறகு அடுத்ததாக இவளை காண்கிறேன்.
வளர்த்தெடுத்த அன்னை அமிர்தா தமிழ் நன்றியும் அன்பும்.

இன்றைய தினத்தை முருக தீட்சண்யா வோடு வீதியில் களித்தேன். மனப்பாரம் கொஞ்சம் குறைந்திருந்தது. ஒரு மக்களிசை. புத்தக விமர்சனம். கவிதை வாசிப்பு என கலந்து பட்ட விருந்தாக அமைந்தது புதிய அன்பர்கள் நிறைய பேரை சந்தித்த மகிழ்ச்சி. தீட்சண்யாவின் அழகான மென்மையான கதை சொல்லல் முறையில் மூழ்கி திளைத்தேன். எழுத்தும் கலையும் வாழ்வும் ஒரே நேர்கோட்டில் பயணிக்க வேண்டுமென ஊடு இலை பாவாக பேசினார் பாரதியில் தொடங்கி புதுமை பித்தன். கு.அழகிரிசாமி. பிரபஞ்சன் என அவர்களின் கதையை மட்டும் சொல்லாமல் அவர்களைப் பற்றிய நெகிழ்வான செய்திகளை சொல்லி நெகிழச் செய்தார். வைக்கம் பசீரைப் பற்றி அவர் பேசி முடித்த போது அனைவரும் அஞ்சு நிமிசம் அமைதியாய் நெகிழ்ந்திருந்தனர். இதற்கெல்லாம் நன்றிகள் தோழர்களுக்கு Devatha Tamilஅமிர்தா தமிழ்சோலச்சி புதுக்கோட்டைமிடறு முருகதாஸ்Andanoor Sura
கவிஞர் Andanoor Sura
கவிஞர் முருகதீட்சண்யாவின் இன்றைய உரை முக்கியமானது. கவிஞரான அவர் சிறுகதைகள் குறித்து பேசிய விதமும் அவர் எடுத்துகொண்ட கதைகளும் அவரொரு தேர்ந்த வாசிப்பாளர் எனக் காட்டியது. நன்றி கவிஞரே

சிறப்பு விருந்தினர்களை கௌரவித்தல்

கவிஞர் துவாரகா அவர்களுக்கு கவிஞர் அந்தோணி அவர்கள் சிறப்பு செய்கின்றார் .
 கவிஞர் முருகதீட்சன்யா அவர்களுக்கு தமிழாசிரியர் திருப்பதி அவர்கள் சிறப்பு செய்கின்றார
 தலைமை வகித்த திருமிகு இரா .ஜெயா அவர்களுக்கு கவிஞர் நீலா அவர்கள்  சிறப்பு செய்கிறார் .
 சென்ற மாதம் சிறுகதை நூல் வெளியிட்ட கவிஞர்  சொலச்சிக்கு கவிஞர்  பவல்ராஜ் சிறப்பு செய்கிறார் .
 சிறுகதைக்காக விருது வாங்கிக்கொண்டே இருக்கும் எழுத்தாளர் சுராவிற்கு தாழம்பூ ஆசிரியர் சிறப்பு செய்கின்றார் .


Thursday, 29 June 2017

எங்கே கோளாறு?

எங்கே கோளாறு?

அரசுப்பயிற்சி பள்ளியில் படிக்கும் மாணவர்க்கு கல்வி உதவித்தொகை ரூ௨௦௦௦.

தனியார் பயிற்சிப் பள்ளியில் படிக்கும் மாணவர்க்கு
ரூ 23000 கல்வி உதவித்தொகை .

அதிக மதிப்பெண்கள் பெற்று முறையாக அரசுப்பயிற்சி பள்ளி மாணவிகளுக்கு குறைவான தொகை ஏன் ? ,

குறைவான மதிப்பெண்கள் பெற்று ,தேர்வுக்கு வந்தால் மட்டும் போதும் என்று சொல்லி அவர்களது
சேர்க்கையைக்காட்டி அத்தனை மாணவிகளுக்கும் கல்வி உதவித்தொகை அரசாங்கத்திடம் பெற்று ,சீருடை இலவசம் ,எந்த பணமும் கட்ட வேண்டாம் ....உதவித்தொகை முலமே படித்து விடலாம் என ஆசைக்காட்டி பயிற்சிப்பள்ளி நடத்துகின்ற தனியார் பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு ஏன் அதிகத்தொகை ? .

சரி அப்படி படிக்கின்ற மாணவர்களுக்காவது பயன் இருக்கா என்றால் ...அதுவும் இல்லை வெறுமே சான்றிதழ் வாங்கிக்கொண்டு இருக்க வேண்டியது தான் .

tet தேர்வில் மதிப்பெண் வாங்கினாலும் வெயிட்டேஜ் என்று , பத்தாம் வகுப்பு ,பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் குறைந்திருந்தால் வேலை கிடைக்காது ....

இப்படி மாணவர்கள் ஏமாந்து போகும் நிலை ஏன்?

இப்படித்தான் பொறியியல் படிக்கும் மாணவர்களின் நிலையும் ..ஏதோ கிடைத்ததைப்படித்து விட்டு வேலையின்றி அலையும் ஒரு சமுதாயத்தை உருவாக்கி கொண்டுள்ளோம் ..என்ன செய்வது இந்நிலை தெளிவாக அனைவருக்கும் தெரிந்தும் ஏதும் செய்ய முடியாத கையறு நிலை ....

Wednesday, 21 June 2017

தமிழர் உரிமை மாநாடு

எது நமது நாகரீகம் ?

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்து சமவெளி நாகரீகமா ?
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட "கீழடி "நாகரீகமா ?

என் மாணவிகளிடம்நான்  அடிக்கடி விவாதிக்கும் கருப்பொருள் ...

 புதுக்கோட்டை 'திடல் 'இலக்கியக்கூடல் இன்று ,புதுக்கோட்டை மாவட்ட  த.மு.எ.க.ச.  "தமிழர் உரிமை மாநாடு" கூட்டத்தை மாலை  தமிழ்நாடு அறிவியல் இயக்கக்கூடத்தில் நடத்தியது .

மாவட்டச்செயலாளர் தோழர் மதியழகன் அவர்கள் ஒருங்கிணைக்க ,மாவட்டப்பொருளாளர்  தோழர்  ஸ்டாலின் அவர்கள் வரவேற்க  ,புதுக்கோட்டை மாவட்ட த.மு.எ.க.ச. தலைவர் தோழர் இரமா ராமநாதன்அவர்கள்  தலைமை ஏற்க ,,மாநிலசெயற்குழு உறுப்பினர் கவிஞர் முத்துநிலவன்  அவர்கள்
முன்னிலையில்,  மாநிலத்துணைச் செயலாளர் கவிஞர்  நீலா அவர்கள் பாடலுடன் துவங்க  ,சிறப்பு விருந்தினராக,   த.மு.எ.க.ச.வின் மாநிலப் பொதுச் செயலாளரும் ,சாகித்ய அகாதமி விருதாளரும் ,தமிழர் வரலாற்றை உலகுக்கு வெளிக்கொணர தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கும் தோழர் சு.வெங்கடேசன் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார் .எழுத்தாளரும் விமர்சகருமான கவிஞர் ராசி பன்னீர் செல்வம் நன்றி கூறினார் .  

Tuesday, 6 June 2017

நாளை

நாளை
 மிரண்டு மருளும் கண்களுடன்
 பூக்கள் சேர்ந்து சோலையாகும் ....
 மௌனம் கலைத்து
 பூக்களை ரசிக்கும் ...

அமைதி ஆரவாரமாகும்
 சலசலவென ஆர்ப்பரிக்கும்

 விழிவிரிய பூக்கள்
விழியால்  கேட்க
 வரம் கொடுக்கும் ..
 அள்ளித்தழுவும்
 அன்பால் வசிகரிக்கும்
 கோபத்தில் உர்ரென்று
 கடைக்கண் காட்டும்
 அழுதழுத கண்கள்
 நான் உன் அம்மாடா என்கையில்
 என்விரல் கோர்க்கத்துடிக்கும் .
 சேட்டைகளை ரசிக்கும் ஆவலுடன் ....
விடியலுக்காக ...

Saturday, 29 April 2017

மனதை நிறைத்த காட்சி..

மனதை நிறைத்த காட்சி ..

புதுகை -தஞ்சை நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது...

,கருத்து நீண்டிருந்த தார்ச்சாலையின் இருபக்கங்களிலும் மரப்போத்துகள் பாதுகாப்பாக நடப்பட்டுள்ளதைக் கண்ட போது..மனம் நிறைவாக இருந்தது ....இதுவரை நான் பயணித்துள்ள சாலைகளிலெல்லாம் மரங்களின் மரண ஓசையோடும்,மனம் நிறைய வேதனையோடும் வெறுமை சூழ ...கண்ட நிலையை மறக்கச்செய்தது புதுகை -தஞ்சை பயணச்சாலை ....

இன்னும் சில வருடங்களில் அவை நெடுமரங்களாக வளர்ந்து பசுமைப்பாதையாக நிழல்தரும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.இதற்கு காரணமான நல்ல உள்ளங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்..

இதை ஏன் மற்ற சாலைகளில் பயன் படுத்த கூடாது ..?
சுங்க வரி வசூலிக்கும் நிறுவனங்கள் தான் அழித்த மரங்களுக்கு பதிலாக மரங்களை நட்டு வளர்க்க வேண்டும் என்று யார் உத்தரவிட வேண்டும் ...?

மரங்களுக்காக குரல் எழுப்ப வேண்டியது நம் கடமை அல்லவா?

அருகில் அமர்ந்து இருந்த அம்மா பேருந்தில் இரண்டு டிக்கெட் எடுத்தார் ..ஒருவர் மட்டும் தானே இருக்கின்றார் என்று இன்னொருவர் எங்கே அம்மா ?என்றேன் ...பின்னாடி என்மவ உட்கார்ந்துருக்காம்மான்னு சொன்னார். அப்படியா என்ன பண்றாங்க? ..வல்லம் கல்லூரியில் படிக்கிறாங்கம்மா..என்றார் .இங்கு தான் இடமிருக்கே ஏன் தனியா உட்காருந்துருக்காங்க?


நான் வெள்ளரிக்காய் கூடையோட இப்படி புடவைக்கட்டிக்கிட்டு இருக்கேன்ல அதனால எங்கூட உட்கார வெட்கப்பட்டுக்கிட்டு அங்கன போய் உட்கார்ந்துருக்காமான்னு பாவம் படிக்கிற புள்ளைக்கு சங்கடமா இருக்கும்ல அதான்னு சொன்ன போது...

இப்படிப்பட்ட அம்மாக்களால் தான் உலகம் உய்கிறது ..என்று தோன்றியது ..நாசமா போன கல்வி அம்மாவையும் அவமானப்பொருளாக்கியக் கொடுமை... ..

Monday, 24 April 2017

என் கதை


இரை தேடும் மலைப்பாம்பென
மெல்ல ஊர்ந்தது ..

வயிற்றுக்குள் சலனமுறும்
இரை போதாமல் ..

வழியெங்கும் இரை விழுங்கி
மறுபடி உயிருடனே இரையை
துப்பிச்செல்கிறது ...

இரவு பகலை விழுங்கி செரிக்கும்
அக்கணத்தில், கமலாதாசின்
"என்கதை "
என்னை செரித்துக்கொண்டது ...

தமிழ் தெரியாது ..


எனது இருக்கை இது ...கொஞ்சம் நகர்ந்து அமருங்களேன் ...இல்ல... ஒரு ஆண் இங்க உக்கார்ந்திருந்தாரு ..அவருகிட்ட கேட்டுட்டு தான் இங்க உக்கார்ந்திருக்கேன்னு வாதம் செய்யவும் எரிச்சலாகி இங்க பாருங்கன்னு மின்னஞ்சல் ஐ காட்டியதும் விழித்த பெண் மறுபடி எழாமல் பிடிவாதம் செய்ய ..

இல்லம்மா நான் முன்பதிவு செய்துள்ளே ன்னு...நிரூபித்தபின் ...அப்படின்னா அந்த ஆள் இங்க இருந்தரேன்னு தயங்க...அருகில் இருந்த பெண் அவர் தவறா உக்கார்ந்திருந்தார் அடுத்த கம்பார்ட்மென்ட் ..அவருக்கு ..என்ற பின்னும் , சற்றும் நகராமல் ...இருக்க மெல்ல எரிச்சலுடன் அமர்ந்தேன் ...

அந்த பெண்ணின் அம்மாவின் இடத்தில் வேறு ஒரு வடநாட்டு பெண் அமர்ந்து இருந்ததால், அவர் அந்த பெண்ணை எழுந்திருக்க சொல்ல சட்டாம்பிள்ளை கணக்கா அது கியா கியான்னு இந்தியில் ஏன் இடம் இதுன்னு வாதம் செய்ய ...இதுகிட்ட பேச முடியாதுன்னு அவர்கள் சோர்ந்த நிலையில் உங்க இடம் என்றால் நீங்க தானே உட்காரனும் எழுந்திருக்க சொல்லுங்க என்றேன்...இல்லம்மா இந்தி தெரியாது அதுகிட்ட தமிழ்ல புரிய வைக்க முடியல என்றார்கள் ..

அப்பதான் இரயிலின் முகப்பில் இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டும் பெயர் எழுதியிருப்பதைப்பார்த்து எரிச்சலுடன் ஏறி அமர்ந்த வெறுப்பில் ..அந்த வடநாட்டு பெண்ணின் அடாவடித்தனம் .....மேலும் கோபத்தைத் தூண்ட ...உங்க இடம் இது உரிமையுடேன் விரட்டுங்கள் என எல்லோரும் சேர்ந்து சத்தமிட்ட உடன் அந்த பெண்ணை அழைத்து வந்த ஆள் ...இருங்க ஏன் சத்தம் போடுறிங்க அவங்களுக்கு தமிழ் தெரியாது ...நீங்க சொன்னா எப்படி புரியும்னு சொன்ன போது.தமிழ் தெரியலன்னு அவங்க தான் வருத்தப்படனும் ..தமிழின் இடத்தில், தமிழனின் உட்கார்ந்தால் இப்படிதான் விரட்டுவோம்னு சொன்ன போது.கொஞ்சம் குரல் ஏன் உயர்ந்ததுன்னு தெரியல .

Tuesday, 11 April 2017

கக்கூஸ்

கக்கூஸ்-ஆவணப்படம் திரையிடல்

நாள் :15.4.17

இடம் :கந்தர்வன் அரங்கம்

8,அய்யனார்புரம் மூன்றாம் வீதி
புதுக்கோட்டை

குழந்தையின் மலத்தை தாய் கூட சற்று முகம் சுழித்தே அள்ளுவாள் ...

ஆனால் தினமும் ஆயிரக்கணக்கான மனிதர்களின் நரகலை தனது கைகளால் அள்ளி சுத்தம் செய்பவர்களை எண்ணி பார்க்க நமக்கு எங்கே நேரம் இருக்கின்றது ..

எண்ணிப்பார்க்க கூட தகுதியற்றவர்களாக வாழ்பவர்கள். நமது கழிவுகளைச் சுத்தம் செய்பவர்களை கடவுளுக்கு சமமாக வைத்து பார்க்க வேண்டுமல்லவா ...வராக அவதாரத்தை அவர்களுக்கு முக்கியத்துவம்...கொடுக்கவே எடுத்தாரோ உண்மையாக இருந்தால் ...கடவுள்

Monday, 10 April 2017

போர்க்குரல் ஒலிக்கின்றது ..

போர்க்குரல் ஒலிக்கின்றது ..

தெருவில் இறங்கி வருமுன் காக்க போர்க்குரல்
எழுப்புகின்றனர் ..குழந்தைகளும் ,பெண்களும் ...அவர்களோடு சில ஆண்கள் மட்டும் ...

மதுக்கடைகளை குடியிருப்பு பகுதியில் திறக்காதே
என்று ...?

எல்லாவற்றிற்கும் கூடும் ஆண்கள் கூட்டம் இதற்கு மட்டும் ஒதுங்குவது ஏன்?

கடையைத் திறந்தால் அடித்து நொறுக்குவோம் என்று அந்தப்பெண் கூறுவது உங்கள் குடும்பத்திற்காகவும் தான் ...

அதிகமான விபத்துகளும்,,அதிகமாக பென்குழந்தைகள் முதல் மூதாட்டிவரை பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படுவதற்கும்  காரணமாக இருப்பது மதுதான் என்பது அனைவரும் அறிந்த உண்மையல்லவா ?

மதுக்கடை வருமானத்தில் மக்களின் உயிரைப்பறித்து இலவசங்கள் கொடுக்க நினைக்கும் அரசா மக்களைக்காக்கும் ...?

நம்மை நாமே தான் காத்துக்கொள்ள வேண்டும்..

நெடுஞ்சாலை மதுக்கடைகள் குடியிருப்புகளில் நுழைவது இன்னும் மோசமான நிலையே உண்டாக்கும் ......

மக்கள் நினைத்தால் மட்டுமே முதலாளித்துவ,சுயநல அரசை ஒழிக்க முடியும் ...

அன்று குழந்தை திருமணத்தால் பெண்குழந்தைகள் லட்சக்கணக்கில் விதவைகளாக இருந்தனர் என்பது வரலாறு ..
 
இன்று மதுவால் பெண்கள் லட்சக்கணக்கில் விதவைகளாக ஆக்கப்படுகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை

பெண்களுக்கு துணை நில்லுங்கள் ..அவர்கள் உங்கள்
சகோதரிகள் தான் ....

Friday, 7 April 2017

ஆணும் பெண்ணும் சமமா ?


 
ஆணும் பெண்ணும் சமமா ?

ஒன்பதாம் வகுப்பு மாணவி இன்று என்னிடம் வந்து மிக ரகசியமாக அம்மா ஒருத்தன் என் பின்னாடியே வந்து அவனை காதலிக்கச்சொல்லி கட்டாயப்படுத்துகின்றான் ...இல்லைனா விசம் குடிச்சி நீதான் காரணம்னு சொல்லிட்டு செத்து போய்டுவேன் ...உன் பள்ளியில் உன்னை அவமானப்படுத்துவேன்னு மிரட்டுகின்றான்மா. அப்பா அம்மா கிட்ட சொன்னேன் அவங்க அவன் ரவுடி நீ தான் கவனமா போனும்னு பயப்படுறாங்கம்மா...

என்னம்மா செய்வதுன்னு கலங்கியபடி கேட்ட பொழுது..மனம் வெடிக்கும் நிலை..ஒரு பெண் குழந்தை எதெற்கெல்லாம் போராடி வளர வேண்டியுள்ளது ..

துணிச்சலா இருடா இதற்கெல்லாம் பயப்படக் கூடாதுன்னு தைரியம் கொடுத்தாலும் ..இனி உன் அப்பா கூடவே வந்துட்டு போண்ணு தான் சொல்ல முடிந்தது ...

அதையும் மீறி தொல்லை செய்தால் காவல் துறையில் சொல்லிடுவோம்னு சொல்லி அனுப்பினாலும் மனதில் ஒரு அச்சம் படுபாவி ஆசிட்டை ஊத்திடுவனோன்னு..
 
தனக்கு தானே குழி தோண்டும் மாணவிகள் ....

ஆண்பிள்ளைகள் மட்டும் குறை கூறினால் உண்மையை மறைப்பதாக ...ஆகும் ..

இன்று பெண் குழந்தைகள் பெற்றோர்களைப்படுத்தும் பாடு..சொல்லி மாளாது...

பருவத்தின் வாயில் நின்று அவர்கள் இக்காலக்கட்டத்தில் மனதை வழிப்படுத்தும் முறையை கூறினாலும் புறந்தள்ளி வீழவே துணியும் நிலை.

பெண்குழந்தைகள் படும் பாடுகளை தினமும் அறிவுறுத்தி நீங்கள் தான் உங்களுக்கு முதல் பாதுகாப்பு ...எதையும் மறைக்காமல் பெற்றோரிடம் கூறுங்கள் ...என்று எவ்வளவு முறை சொன்னாலும் விழலுக்கு இறைத்த நீராக ஆகின்றது ...

திரைப்பட கதாநாயகிகள் போல் காதல் மட்டுமே வாழ்க்கை எண்ணி வலையில் வீழ்கின்றனர் ..

முன்பெல்லாம் சில மாணவிகள் மட்டுமே இப்படி இருப்பார்கள்..ஆனால் இன்று அதற்கு எதிராக பல மாணவிகள் விட்டில் பூச்சிகளாக ...

பெண்ணை பெற்ற பெற்றோர்கள் அவர்களை வழி நடத்த முடியாமல் இரத்த கண்ணீர் வடிக்கின்றனர் ...

பல பெண்களை சுற்றும் ஒருவன் எனத்தெரிந்தும் அவன் தான் வேண்டும் என முட்டாள் தனமாக கூறும் மாணவிகளின் வாழ்க்கை என்ன ஆவது .....

திரைப்படங்கள் ரவுடிகளின் பின்னே அலைய வைத்து வருங்கால சந்ததிகளை வீணாக்கியது தான்  மிச்சம் ..