World Tamil Blog Aggregator Thendral: பெரியார் பிறந்தநாள் விழா மற்றும் வண்ண ஆடைகள் வழங்கும் விழா..

Saturday 17 September 2016

பெரியார் பிறந்தநாள் விழா மற்றும் வண்ண ஆடைகள் வழங்கும் விழா..

பெரியார் பிறந்தநாள் விழா மற்றும் வண்ண ஆடைகள் வழங்கும் விழா..

இன்று புதுக்கோட்டை அரசு உயர் துவக்கப்பள்ளியில் பெரியார் பிறந்தநாளான இன்று அங்கு பயிலும் பெண்குழந்தைகள் அனைவருக்கும் புதிய ஆடைகள், ஐக்கிய நல கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆன சகோதரர் பஷீர் அலி அவர்களால் வழங்கப்பட்டது.

விழாவில் சகோ மீனாட்சி சுந்தரம் வரவேற்க,பள்ளித்தலைமை ஆசிரியர்,வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளர்,திருமிகு செல்வா,கவிஞர்.செல்வா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

முயற்சி உடையோருக்கே எல்லாம் கிடைக்கும் என்பதை அழகாக எடுத்துக்காட்ட, நூறு ரூபாய் பணத்தைக்காட்டி இது யாருக்கு வேண்டும் என்றார்..குழந்தைகள் தயங்க..ஊக்கமூட்டி முன் வந்த குழந்தைக்கு சட்டென்று உனக்கு தான் இந்த பணம் என்ன செய்ய போறே என்று சகோ பஷீர் அலி அவர்கள் கேட்க இதை நான் உண்டியலில் சேர்த்து வைப்பேன் அன்று அந்த சின்னஞ்சிறு சிறுமி கூறிய போது ...மனம் நெகிழ்ந்து போனது.

சகோ பேச்சியம்மாள் நன்றியரை வழங்க விழா சிறப்புடன் நிறைவுற்றது.

மாணவிகளின் கண்களில் கண்ட பூரிப்பை காண் கண்கோடி வேண்டும்...மனம் நிறைந்த நன்றி ...சகோ பஷீர் அலி அவர்களுக்கும்.அவரது அமைப்பினருக்கும்..
















3 comments :

  1. விழா நிகழ்வுப் பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. சிறப்பான விழாப் பகிர்வு...
    வாழ்த்துக்கள் அக்கா...

    ReplyDelete
  3. அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...