World Tamil Blog Aggregator Thendral: புதுக்கோட்டை த.மு.எ.க.ச நடத்திய புகழஞ்சலிக்கூட்டம்.

Tuesday 13 September 2016

புதுக்கோட்டை த.மு.எ.க.ச நடத்திய புகழஞ்சலிக்கூட்டம்.

புதுக்கோட்டை த.மு.எ.க.ச நடத்திய புகழஞ்சலிக்கூட்டம்.

இன்று [13.9.16 ]காலை புதுகை அறிவியல் இயக்கக் கூடத்தில் மறைந்த கவிஞர்கள் நா.முத்துக்குமார்,ஞானக்கூத்தன் மற்றும் பாடகர் திருவுடையான் ஆகியோருக்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டது..

அரங்கு முழுக்க உணர்வுகளின் வெளிப்பாடாக அனைவரும் அஞ்சலி செலுத்தினர்..

நிகழ்விற்கு திருமிகு இரமா ராமநாதன் அவர்கள் தலைமையேற்க,திருமிகு சண்முகப்பழனியப்பன் அவர்கள் முன்னிலை வகித்தார்.
 
 

மாவட்ட செயலர் மதியழகன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.




 

கவிஞர் நா.முத்துக்குமார் குறித்து கவிஞர் தங்கம்மூர்த்தி அவர்களும்,
கவிஞர் ஞானக்கூத்தன் குறித்து கவிஞர் ராசிபன்னீர்செல்வம் அவர்களும்,
பாடகர் திருவுடையான் குறித்து கவிஞர் நா.முத்துநிலவன் மற்றும் கவிஞர் நீலாவும் நினைவலைகளைப்பகிர்ந்து கொண்டார்கள்.









கவிஞர்கள் குறித்த கவிதைகளை கவிஞர் இந்துமதி,கவிஞர் சுரேகா,கவிஞர் கபார்கான்,கவிஞர் பாக்யா,கவிஞர் கபார்கான்,கவிஞர் கீதா,முனைவர் மாதவன்,கவிஞர் கவிபாலா,கவிஞர் காசாவயல்கண்ணன் ஆகியோர் கவிதாஞ்சலியால் நினைவு கூர்ந்தனர்.


கூட்டத்தில் கொள்கைக்காகவே வாழ்ந்துமறைந்த திருவுடையான் குடும்பத்திற்கு நிதி உதவி செய்து காக்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
 
 
 
 
கூட்டத்தை இனிய பாடல்களால் பாடகர்கள் சுபாஷிணி,ராஜலெட்சுமி,கவிஞர் வெள்ளைச்சாமி,முனைவர் மகா.சுந்தர் ஆகியோர் அணி செய்தனர்.
 
 
கவிஞர் ஸ்டாலின் நன்றியுரைக்க கூட்டம் இனிதே முடிந்தது.

3 comments :

  1. உங்கள் கவிதையை பகிரலாமே?

    ReplyDelete
  2. ஞானக் கூத்தன் பற்றிய தங்களின் புகழஞ்சலிக் கவிதை அருமைம்மா.

    ReplyDelete
  3. தகவல் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...