World Tamil Blog Aggregator Thendral: ஒரு சந்தேகம்....

Wednesday 15 April 2015

ஒரு சந்தேகம்....

ஒரு சந்தேகம்....

இரண்டு அவாக்களுக்கிடையே பிரச்சனை. நடுவில் நான். ஒரு அவா சொல்லுது சூத்திரவா முன்னாடி என்ன திட்டுறான்னு என் கிட்டயே சொல்லி வருத்தப்படுது...இங்க நான் தான் சூத்திராள்...அப்படின்னா தே.....மகன்னு அர்த்தம் ...இல்லன்னு சொல்ல சொல்லுங்க ..என் தாயை பழிக்கும்  இந்து தர்மத்தை நான் ஏற்பதா வேண்டாமா....?

இந்து மதத்துல எந்த பிரிவினையும் இல்ல எல்லோரும் ஒண்ணு தான்னு  சொல்ல முடியுமா...?

இதுல கொடுமை என்னன்னா....காலடில பிறந்த சூத்திராளுக்களுக்குள்ள நான் தான் பெரியவன்னு அடிதடி சண்டை....உனக்குள்ள சண்டை போடாதடா..உனக்குன்னு சுயமரியாதை இருக்கு..உன்ன மிதிச்சு சிலர் வாழ்வதை ஏற்காதன்னு போராடிய பெரியாரை இவர்கள் அவமானப்படுத்த முடியாது. இவர்களே இவர்களை அவமானப்பட வைத்து வேடிக்கைப் பார்க்குது ஒரு கூட்டம்..

9 comments :

  1. இந்து மதத்தின் மிகப் பெரிய சாபக்கேடு இந்த சாதியம்தான். வெளிநாடுகளில் அடிமை என்றால் இந்தியாவில் சூத்தரர்கள். மனிதனை மனிதனே அடிமையாக்கும் இந்த போக்கு இன்னமும் மாறாமல் இருப்பத்துதான் கொடுமை.
    த ம 2

    ReplyDelete
  2. நான் சிறுவனாக இருந்தபோது என் வீட்டைச் சுற்றிலும் அவாதான். என்னை சூத்திரன் என்று அங்கு இருந்த பல மொட்டைப் பாப்பாத்திகள் பலமுறை சொல்லியிருக்கிறார்கள்.

    ReplyDelete
  3. வணக்கம்
    காலம் மாறிவிட்டது....
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. சாதியின் பெயரால் மனிதர்களைப் பிரித்துப்பார்க்கும் நயவஞ்சக வலை அறுபட்டாலே மனிதசாதி ஓன்றென்பது நிலைக்கும் .

    ReplyDelete
  5. பெரியார் கைத்தடி கண்டு
    அஞ்சும் அரைவேக்காட்டு
    கும்பலுக்கு
    கோவிந்தா மட்டுமே
    கோஷமாக
    அமைந்துவிடும்
    கொள்கைகள்
    நம்முடனே
    வாழும் வீரியத்து
    விஷமுறிவுகள்
    நாங்கள்
    நாங்களே பெரியாரின்
    பிள்ளைகள்

    ReplyDelete
  6. இந்த சாதிய அமைப்பைப் போக்க முயன்று முயன்று தோற்றுத்தானே அம்பேத்கர் கூறினார்
    நான் இந்துவாகப் பிறந்து விட்டேன்
    ஆனால் நிச்சயம் இந்துவாக இறக்கமாட்டடேன்
    என்று சூளுரைத்து பௌத்தராக அல்லவோ கண் மூடினார்
    தம +1

    ReplyDelete
  7. ***ஒரு அவா சொல்லுது சூத்திரவா முன்னாடி என்ன திட்டுறான்னு என் கிட்டயே சொல்லி வருத்தப்படுது.***

    அவாக்களின் சிற்றறிவுக்கு தெரிந்தது அவ்வளவுதான். உண்மையான சூத்திரவா யாருனா மூளைமழுங்கிப்போன அவாதான். அறிவு குன்றிய நிலையிலேயே இருப்பதால் "ஒதுக்கி வைக்கப் பட" வேண்டியர்களான அவர்களுடன் இவ்வளவு தூரம் பழகியது உங்க தப்பு! உங்களுக்கு பழக ஆள் கிடைக்கலையா என்ன? இல்லைனா அவாக்களுக்கு உயர்ந்த சிந்தனைகள் இருக்கும்னு தப்புக் கணக்கு போட்டுட்டீங்களா?

    ReplyDelete
  8. இப்ப அவா அங்க மட்டுமில்லீங்க... மற்ற இனத்தவரும் அப்படியாக முயற்ச்சிக்கிறாங்க... அதாவது ஆதிக்க மனப்பான்மை- ஓரினம் மற்றோர் இனத்தை அடிமையாக்கவே முயற்ச்சிக்கிறது... அதுக்குதான் மனுசனா மட்டும் இருங்கய்யான்னா யாரு கேக்கறாங்க....

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...