World Tamil Blog Aggregator Thendral: 4.4.15-முழு நிலா முற்றம்- மூன்றாவது கூட்டம்

Saturday 4 April 2015

4.4.15-முழு நிலா முற்றம்- மூன்றாவது கூட்டம்



4.4.15-முழு நிலா முற்றம்- மூன்றாவது கூட்டம்

காமராசபுரத்தில் உள்ள ரேவதி தமிழாசிரியர் வீட்டில் நடந்தது மழலைகள் கூட்டமாகவே கலகலன்னு இருந்தது.குழந்தைகள் விடுகதைக்கேட்டு அசத்திவிட்டார்கள் .நடனம் ஆடி மகிழ்வித்தார்கள்.

நிலாவைப்பற்றி கூறுங்கள் என்றதும் ஒருவன் அதைபார்த்தா என் கைக்குள்ள வச்சுக்கனும் போலருக்கு ஆனா அது எல்லாருக்கும் சொந்தமாச்சேன்னான் பொதுவுடமைச் சிந்தனைவாதியாய் .

கவிஞர் நீலா  ஷாஜகான் -மும்தாஜ் கதை குழந்தைகளுக்காக் கூறிய போது நாங்களும் மெய்மறந்து கேட்டோம்.

கவிஞர் வையாபுரி கவிதை வாசித்தார்.

கவிஞர் சிவா கலவையான திரையிசைப்பாடல்கள் பாடி அசத்தினார்.

கவிஞர் சுரேஷ்மான்யா நிலாப்பற்றியக்கவிதைக்கூறி மாணவர்களுக்கு கற்பனை வளர ஊக்குவித்தார்.உடனே ஒருவன் நிலா எப்போது டியூப்லைட் மாதிரி வெளிச்சமாருக்கும் ஆனா இன்னைக்கு குண்டுபல்பு மாதிரி மஞ்சளா இருக்குன்னான்.ஒருவன் அம்மா தட்ட வீசிட்டாங்க எனக்கு எடுத்து தாங்க சாப்பிடனும் என்றான்.

கவிஞர் ரேவதி பூமி பற்றியக்கவிதை வாசித்தார்கள்.

கவிஞர்சோலச்சி விடைகூறமுடியாத விடுகதைக்கூறி மாணவர்களிடம் மாட்டிக்கொண்டார்.
நிலா எல்லாவற்றையும் வேடிக்கைப்பார்த்துக்கொண்டு ரசித்தது.
மாணவர்களுக்கான ஒரு மலையாளப்பாட்டு ஒன்றை நான் பாட மாணவர்களும் சேர்ந்து பாட உண்மையில் நிறைவாக இருந்தது..
மாணவர்கள் மனமின்றி கலைந்தார்கள்

சிறப்பாக நடத்திய ரேவதிக்கு வாழ்த்துகள்.

அடுத்தக்கூட்டம் தோழி ஜெயா வீட்டில் கீரனூரில் சித்திராப்பௌர்ணமி...அன்று...

5 comments :

  1. கூட்டங்கள் தொடரட்டும்
    நன்றி சகோதரியாரே
    தம 1

    ReplyDelete
  2. வணக்கம்
    நல்ல முயற்சி வாழ்த்துக்கள் த.ம2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்,இலக்கியக்கூட்டத்தில் குழந்தைகளா,கூடுதல் உற்சாகம்/

    ReplyDelete
  4. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  5. மகிழ்ச்சி.
    வாழ்த்துகள்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...