மென்மலரை தீண்டுவதாய்
தட்டிக்கொடுக்கிறான்
அவனது ஆணைக்கு கட்டுப்பட்டு துயில்வதாய் நடிக்கின்றன சின்னாவும பின்னியும்.
அருகில் அவனது அண்மையை ரசித்து 
கண்சிமிட்டிக் கொள்கின்றன.
அவைகளின் உறக்கத்தை கலைத்து விடாத
அக்கறையுடன் மெதுவாய் அருகில் படுக்கிறான் மலர்மண்மீது உறங்குவதாய்.
சத்தமிடாது அகன்ற என்னைக் 
கடைக்கண்ணால் அதட்டி அழைக்கின்றான்..
கண்களால் ஏனென்று கேட்க..
கையால் உத்தரவிடுகிறான் படுஎன...
அவனெழுந்த இடத்தில்..
முயல்குட்டியின் வாஞ்சையுடன்
குட்டிப்பூனை  உரசுவதாய்..
உறங்க முயல்கிறேன்..
சின்னாவும் பின்னியும் அடக்க முடியாத சிரிப்பையடக்கி
கைதட்டி கண்கொள்ளாத குறையாய்
அவனின் அதிகாரத்திற்கு நடித்து
கண்மூடிக் கிடக்கின்றன.
காலம் சற்று உறைந்து ரசித்து
நகர்கின்றது...
  
  
  
கவிதை நன்று.
ReplyDelete