World Tamil Blog Aggregator Thendral: பன்னாட்டுக்கவியரங்கம்

Wednesday 12 August 2020

பன்னாட்டுக்கவியரங்கம்

உலகப் பெண் கவிஞர் பேரவை நடத்தும் பன்னாட்டுக் கவியரங்கம்.
நடத்தலாமா என்று  கவிஞர் அகன் அய்யா கேட்ட போது சாதாரணமாக த் துவங்கி தற்போது நாற்பது பெண் கவிஞர்கள் இணைந்து வருகிற.15.8.2020 அன்று இரு நிகழ்வுகளாக கவிதைகள் வாசிக்க உள்ளனர்...
பல நாடுகளில் இருந்து தங்கள் கவிதைகளை ஆர்வமுடன் கலந்து கொள்ளும் பெண்கள் பாரதி பாரதிதாசனின் கனவு பெண்கள்.
'அவன் நிற்கிறான்' என்ற தலைப்பில் கவிதை வாசிக்கும் நிகழ்விற்கு உங்களையும் அன்புடன் வரவேற்கிறோம்.
இந்நிகழ்வில் திருமிகு ஆறுமுகம்பேச்சிமுத்து அமெரிக்க தமிழ் ஊடகம்.அவர்கள்  வரவேற்புரை நல்க உள்ளார்.
உலகப் பெண் கவிஞர் பேரவை நிறுவனர் திருமிகு அகன் அவர்கள் முன்னுரை வழங்க உள்ளார்.
இயக்குநர் மணிரத்னம் மற்றும் பலருடன் இணைந்து பணிபுரியும் திருமிகு சிவா .அனந்த் அவர்கள் ஆகச் சிறந்த நிர்வாக இயக்குநர் , மெட்ராஸ்_டாக்கீஸ் திரைப்பட பாடலாசிரியர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்.
அமெரிக்கா,கனடா, சுவிட்சர்லாந்து, நியூஜெர்சி, லண்டன், ஜெர்மனி மற்றும் இந்தியாவைச் சேர்ந்த 40 பெண் கவிஞர்கள் 15.8.2020 அன்று கவியரங்கில் கலந்து கொண்டு கவி பாட உள்ளனர்...
இந்நிகழ்வை மு.கீதா(devatha tamil) ஒருங்கிணைக்க உள்ளேன்..
எங்களை ஊக்கப்படுத்த நீங்கள் கலந்து கொள்ள உள்ளீர்கள்.. பிறகென்ன சந்திப்போம்.. கவியரங்க நிகழ்வில்

4 comments :

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...