World Tamil Blog Aggregator Thendral: 2025

Monday, 17 March 2025

ஐரோப்பா

இரண்டு தமிழ்ப்பெண்களும் ஐரோப்பிய நாடுகளும்.
ஆங்கிலம் ஒன்றை மட்டும் நம்பி போலந்தின் தலைநகர் வார்சா, இத்தாலியின் ரோம் மற்றும் வெனிஸ் , செக் குடியரசின் பிராக்,சுலோவேகியா நாட்டின் பிராட்டிஸ்லாவா,ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்யப் புறப்பட்டோம்.
நானும் Subhasree Muraleetharan னும்.
ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்ட்டில் படிக்கும் சுபா முரளியின் மகள்கள் இருவரும் ஆங்கிலம் தெரிந்ததால் அங்கு படிக்க முடிவெடுத்து உளவியலில் ஆராய்ச்சி படிக்கும் ஆவலில் இளநிலை முதுநிலை படித்துக் கொண்டு இருக்கிறார்கள் .

புடாபெஸ்ட்டில் நிறைய இந்திய மாணவர்கள் படிப்பையும் காண முடிந்தது.ஹங்கேரியர்களுக்கு ஆங்கிலம் சுமாராக தெரியும் நிலையில் ஐரோப்பிய நாடுகளில் மிகச் சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது.

வார்சாவில் அவர்களுக்கு போலிஷ் மட்டுமே தெரிந்த நிலையில் கூகுள் மேப் மட்டும் உதவிட நாங்கள் இருவரும் இரண்டு நாட்கள் தங்கி சுற்றிப் பார்த்தோம்.அங்கும் எங்களைக் கண்டு பிடித்த ஒரு இந்திய ஜோடி மகிழ்வாக வந்து பேசிக் கொண்டு இருந்தனர்.

மற்ற நாடுகளில் ஆங்கிலம் சரளமாக அனைவருக்கும் தெரிய கவலையின்றி சுற்றி பார்த்தோம்.

இத்தாலியில் சரவணபவன் ஹோட்டலில் தஞ்சாவூர் குடும்பத்தினர் பார்த்த போது மகிழ்வாக இருந்தது.

இப்படியாக இந்தி படித்தவர்களும் ஆங்கிலம் தெரிந்ததால் தான் உலக நாடுகளில் பணி செய்து வருவதை காண முடிந்தது.

இதற்கும் இப்போதைய மும்மொழி பிரச்சினைக்கும் தொடர்பு உண்டுங்கோ.