World Tamil Blog Aggregator Thendral: இணையும் கரங்கள்-செயல் பாடுகள்

Sunday 2 November 2014

இணையும் கரங்கள்-செயல் பாடுகள்

இணையும் கரங்கள்

கீழ் உள்ள செயல் பாடுகளில் உள்ள விவரங்களை திரட்டும் வேலையைத்துவங்குவோம்.

நமது குழுவில்

1]வழக்கறிஞர்கள் இருப்பின் சட்டம் தொடர்பான செய்திகளைத்திரட்டி தர வேண்டுகின்றேன்.

2]ஆசிரியர்கள்  குழந்தைகட்கு தேவையான கல்விமுறை பற்றிய மாற்றங்கள் குறித்து  கருத்துகள் வழங்கினால் உரிய வழியில் கொண்டு சேர்ப்போம்.

3]மருத்துவர்கள் இருப்பின் பாதிக்கப்பட்ட குழந்தைகட்கு எவ்வாறு மருத்துவ மற்றும் மனநல உதவி வழங்கலாம் என்பதை கூறும்படி கேட்டுக்கொள்கின்றேன்.

4]வாய்ப்பு உள்ள இளைஞர்கள் பள்ளி மாணவ குழு உருவாக்கலாம்..அவர்கள் வசிக்கும் பகுதிகளில்...
இது பொழுது போக்க அல்ல என்பதை குழு உறுப்பினர்கள் மாணவர்களுக்கு உணர்த்த வேண்டும்.

5]கல்லூரி மாணவர்களில் பொறுப்புள்ள மாணவர்களை இணைக்க வேண்டுகின்றேன்.குறைவான மாணவர்கள் போதும்.நற்சிந்தனை உள்ளவர்களாக இருப்பது முக்கியம்.

6]பாதிக்கப்பட்ட குழந்தைகள் விவரங்கள் சேகரிப்போம்.

.நிதானமாக செயல்படுவோம் .ஒவ்வொரு அடியும் வளர்ச்சியை நோக்கி செல்லும் வகையில்.

2 comments :

  1. சிறந்த கருத்துப் பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete
  2. சிறந்த அடி கீதா..வாழ்த்துக்கள்!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...