World Tamil Blog Aggregator Thendral: December 2013

Tuesday 31 December 2013

2014

4. என் வண்ணத்தூறலில் .....


2014
வருங்காலம்
வசந்தங்களையே தரட்டும் 
வலைத்  தள தோழமைகட்கு

Friday 27 December 2013

கடவுளுக்கு வேண்டுகோள்.....!



பள்ளி மானவிகளுக்கு ஊட்டச்சத்தாய் அரசு முட்டை வழங்க வருடத்தின் பாதி நாட்கள் ஏதேனும் ஒரு சாமிக்கு விரதமென்று சாப்பிட மறுக்கின்றனர்.
5 அல்லது 10 நாட்கள் நடைப்பயணம் நடந்து காலில் புண்வர தவிக்கின்றனர்.விரதமிருக்கும் குழந்தைகள் படிக்க முடியாமல் மயங்கிச் சாய்கின்றனர்.
பெற்றோர்களுக்கு எப்படி சொல்லி புரிய வைக்க கடவுளே.கல்வியே கடவுள் என நீயாவது கூறேன் ....!

3.எனது வண்ணத்தூறலில்...


   கானில் கானம் பாடி
   களித்த புட்கள்
  வலைதனில் கவி பாட
   வந்ததுவோ...!

புகைப்படம்: 3.எனது வண்ணத்தூறலில்...
----------------------------------------
கானில் கானம் பாடி
களித்த புட்கள்
முகநூலில் கவி பாட 
வந்ததுவோ...

வீரமங்கை

நான் மிகவும் நேசிக்கும் வீரமங்கை மட்டுமல்ல வெற்றிமகள்

டிசம்பர் 25: ஆங்கில அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய வீரமங்கை வேலு நாச்சியார் நினைவு தினம் இன்று

Tuesday 24 December 2013

வெற்றுத்தாளா நீ?

வெற்றுத்தாளா நீ?
வெறுமை அல்ல நீ
உலகே உன் பின்னே...!

சான்றிதழாய்,ஊதியமாய்
கரங்களில் தவழ்கின்றாய்..
கர்வமுடன் கனைக்கின்றாய்
எனை நோக்கியே உலகென்று..!

யார் நீ?
அமெரிக்காவின் அதிகாரமா?
க்யூபாவின் தன்மானமா?
அரபு நாடுகளின் கச்சா எண்ணெயா..?

ஆப்பிரிக்காவின் அடிமை வாழ்வா?
சிங்களரின் சித்ரவதையா?
ஈழத்தமிழரின் கண்ணீரா?
இரக்கமின்றி வதைக்கின்றாயே..!

உலகத்தை உனக்காக உலுக்கி
அரசியல் சாட்டையால் சொடுக்கி
மனிதம் மறக்கச் செய்து
மக்களை உன் பின்னே
உழன்றோடச் செய்கின்றாயே..!

உனையறியா உயிர்கள்
தரணியில் அமைதியாய் வாழ..
உனைநினைந்த மானுடத்தின்
மனிதநேயம் மறக்கச் செய்யும்
வெற்றுத்தாளா-நீ

வெறுமையல்ல நீ
உலகே உன்பின்னே...!

Monday 23 December 2013

நேசம்

அரசனென்றாலும்
அதிகாரியென்றாலும்
தாய்மொழியால்
முடிகின்றது
நேசிக்க வைக்க....!

வண்ணத்தூறலில் -2

கன்னிமுகத்துடன்
போட்டியோ....!


வெட்கச்சிவப்பில்
அந்தி வானும்
அலைகளும்...!

Saturday 21 December 2013

ரசிப்போமே

எனது வண்ணத்தூறலில்
என்றும் அழியா
பறவைகள்

நன்றி

வலைச்சரத்தில்
வேலுநாச்சியார்
தென்றலாய் வீச
தெள்ளமுதத்தமிழில்
தேனாய் இனித்திட
இணைத்திட்ட உள்ளங்களுக்கு
நன்றிதனை சமர்ப்பிக்கின்றேன்

Wednesday 18 December 2013

பாரதிதாசன் நினைவலைகள்







வாழ்க்கை போராட்டம்


கயிற்றில் தள்ளாடும்
சிறுமியின் வாழ்வு

படம் பிடிக்கையில்
பதறாமல் ஆடினாள்

அவளை மட்டுமல்ல
அவளின் பசியையும்
உணர வைக்க.....

பாரதிதாசன் இல்லத்தில்

பாரதிதாசன் இல்லத்தில் (9 புகைப்படங்கள்)

பாரதிதாசனுடன்

பாரதிதாசனுடன் ...

பாரதிதாசனின் இல்லம் காணும் வாய்ப்பு கிடைத்தது.மனதில் அவருடன் இருப்பது போலவே உணர்ந்தேன்.பாரதியாரால் கட்டுண்ட புரட்சி கவிஞன் வாழ்ந்த இடம் புதுப்பிக்கப் பட்டுள்ளது.இன்னும் சீர் படுத்த உள்ளார்கள்.அன்புடன் வரவேற்று இல்லத்தை முழுவதும் காட்டி புத்தகங்களும் சி.டி யும் தந்தார் அங்கு பணிபுரியும் அம்சா .மனம் சொல்ல முடியாத உணர்வில் இன்னமும்.

Thursday 12 December 2013

கல்வி

சுட்டிப் பையனை
பள்ளிக்குள் தள்ளினர்
படி..படி..படி...

Tuesday 10 December 2013

பெண்ணியவாதி

பெண் என பெருமை படவா?வேதனை படவா?இப்படி எழுத தூண்டிய சமூக அவலத்தை என்ன செய்ய?



பெண்ணியவாதி
எரிச்சலும் நக்கலுமாய்
பட்டமெனக்கு..

Sunday 8 December 2013

Saturday 7 December 2013

தொட்டில் குழந்தை

அணிமணிகள்
ஆடம்பர உடை
அறுசுவை விருந்து
பகட்டு வாழ்வு
எதுவும் வேண்டாம்..

ஆறுதலாய்
அரவணைக்க
அம்மா
  போதும்

Wednesday 4 December 2013

குடும்பத்தலைவி

அதிகாலை
இயற்கை உபாதை
கழிப்பறைக்கு போட்டி
பொறுமையின் துவக்கம்..

கொதிக்க கொதிக்க
அனைவருக்கும் டீ
ஆறி அவலானது
அவளுக்கான டீ...

அனைவரின் பசியறிந்து
அன்போடு பரிமாறியபின்
காலிப் பாத்திரங்களுடன்
அவளுக்கான உணவு....

விழா நாள்
புத்தாடையுடன் இல்லமே மகிழ
அவள் அணியும் நேரம்
அனைவரும் உறக்கத்தில்..

Tuesday 3 December 2013

மொட்டுக்கள்


முகத்தில் இறுக்கம்
மனதில் சோகம்
சுறுசுறுப்பின்மை
தளர்ந்த நடை
ஒளியிழந்த கண்கள்
ஒன்றாய் காணலாம் ..
10ஆம்,12ஆம் வகுப்பு
பயிலும் மாணவரிடத்தில்.

”வாழ்க்கையே மதிப்பெண்களாய்
மகிழ்வும் குழந்தமையும்
இழந்த மொட்டுக்களாய்....”

சபதம்




                                                                                   
    ஆண்டு துவக்கம்
சபதங்களுக்கு பஞ்சமில்லை..

குடியை மறந்து
தவறுகள் தொலைத்து

இனிவரும் நாட்கள்
குறையில்லா நாட்கள்...

வாக்கு மாற மாட்டேன்
ஒவ்வொரு புத்தாண்டும்
இதே சபதம் தான்..!