World Tamil Blog Aggregator Thendral: June 2021

Wednesday 16 June 2021

a kid like jake

a kid like jake English film 2018

என் குழந்தை திருநங்கை ஆக இருந்தால் நான் என்ன செய்வேன்....
இந்த கேள்விக்கு பதில் தர இன்னும் சமூகம் தயாராக இல்லை ...
இத்தனை ஆண்டு கால அனுபவம், வாசித்த நூல்கள் என்னைப் பக்குவப்படுத்தி இருப்பதால் அதிர்ச்சியிலிருந்து மீண்டு அவனை(ளை) ஏற்க தயாராக இருப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது.
ஆனால் சிறு வயதில் இத்தனை பக்குவம் இருக்க வாய்ப்பே இல்லை.எனக்குள் குமைந்து ,என் குழந்தையையும் ஏற்க முடியாது வதைத்து ,நானும் இறப்பை நாடி இருக்கக் கூடும்.
ஆண் பெண் இருவருக்கான சமூகத்தில் திருநங்கைகளுக்கு திருநம்பிகளுக்கான சமூகத்தை நாம் ஏற்று உருவாக்கி இருக்கிறோமா? என்றால் இல்லை என்ற பதிலே கிடைக்கும்
அவர்களை சாதாரண குழந்தைகளுடன் இணைத்து பழக விடுவதில்,அவர்களுக்கான தனிப்பட்ட வசதிகளை செய்து தந்துள்ளோமா என்றால் இல்லை.
இன்னும் நமது இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளை பேரூந்துகளில்,பொது இடங்களில்,தியேட்டர்களில் எங்காவது அவர்களுக்கான வசதிகள் உள்ளதா?
இந்த உலகில் அவர்களுக்கான இடம் இல்லையா?
உணவு விடுதிகளில் கூட அவர்களுக்கான இடம் இல்லாத நிலையில் அவர்களை கொஞ்சமாவது திரும்பி பார்க்க அரசு துவங்கி உள்ளது.
பெரும்பான்மையோரின் நலத்திற்கு தரும் முக்கியத்துவம் சிறுபான்மை குறைபாடுள்ள மக்களுக்கு தருவதில்லை என்பது மனித நேயம் அற்ற நிலை.
இப்படி யோசிக்க வைத்த திரைப்படம் 
"a kid like jake"
தனது 4 வயது மகனின் மாறுபாடான செயல்களை குழப்பத்துடன் உற்று நோக்கி பள்ளி தலைமையாசிரியருடன் கலந்து என்ன தான் சமாதானம் செய்து கொண்டாலும் ஏற்க முடியாது தவிக்கும் அம்மா அப்பாவாக நடித்துள்ளவர்களின் மனநிலையை நாமும் அடையும் படியான சிறப்பான தேர்வு...
இன்னும் மனிதன் வளர வேண்டும்... அதுவும் நமது நாட்டில் இந்த குழந்தைகளை ஏற்றுக்கொள்ள காலம் பக்குவப்படுத்த வேண்டும்...
தமிழ் நாடு இந்தியாவிற்கு முன்னுதாரணமாக தோழி நர்த்தகி நடராஜை உயர் பதவியில் வைத்து சிறப்பித்துள்ளது .
அவர்களின் துன்பங்களுக்கு மருந்தை தர முன்வந்துள்ளது போற்றத்தக்கது.
உணர்வுள்ளவர்கள் பார்க்க வேண்டிய படம்.. நன்றி ஆசிரியர் ரெ.சிவாவிற்கு..
மு.கீதா
புதுக்கோட்டை

Tuesday 15 June 2021

திரைப்படம்wonderfilm

Wonder cinema
ஆகி முதல் நாள் பள்ளி செல்கிறான்‌பள்ளியின் முதல்வர் அவன்மீது மிகுந்த அன்பு காட்டுகிறார்.எப்போதும் அவனது உணர்வுகளைப் புரிந்து செயல்படுகிறார்.ஆகியை கேலி செய்த மாணவனை பள்ளியை விட்டு அனுப்புகிறார்.
ஏனெனில் ஆகி Treacher collins syndrome ஆல் பாதிக்கப்பட்டு 27 முறை அறுவைச் சிகிச்சை செய்து தற்போதுள்ள முகத்தைப் பெற்று இருக்கிறான்.
எப்போதும் அவன் விண்வெளி வீரரின் முகமூடியை அணிந்து தனது சிதிலமான முகத்தை மறைத்துக் கொள்கிறான்.அவனது அன்னை நல்ல எழுத்தாளர்.அவரது உலகமாக ஆகி . ஆகி பிறந்த பிறகு அவளது அக்கா தனிமையை உணர்கிறாள்.அவளது பாட்டியே அவளுக்கு பிடித்த நபராக இருந்திருக்கிறார்.பாட்டியின் இறப்பு மேலும் அவளுக்கான நபரைத் தேட வைக்கிறது .அவளது தோழியின் விலகலும் அவளால் தாங்கிக் கொள்ள முடியாத சூழல்.
ஆகி பள்ளி சென்று படிக்கும் காலம் வந்துவிட்டது என அவனது அம்மா அவனை பள்ளியில் சேர்க்கிறார்.
பள்ளியில் மாணவர்கள் செய்யும் கேலியில் மனம் உடைந்து அழுகிறான்.
அவனது அம்மா நீ பள்ளிக்குச் செல்லும் போது விண்வெளிக்குச் செல்வது போல மகிழ்வுடன் செல் என்ற வார்த்தை அவனது துன்பங்களில் இருந்து அவனை மீட்டெடுக்க முயல்கிறது.
தனது முதல்நாள் பள்ளி அனுபவத்தை தனது பெற்றோரிடம் கூற மறுப்பவனைக் கண்டு அம்மா வேதனைப்படுகிறாள்.பள்ளிக்குப் போக வேண்டாம் என்று அவள் கூறுகையில் பள்ளிக்குச் செல்வேன் என்று அவன் உறுதியாகக் கூறுகிறான்.
அறிவியல் பாடத்தில் அவனது ஆர்வம் நண்பர்களைத் தருகிறது.ஒவ்வொரு குழந்தையும் ஆகியின் மேல் அன்பு செலுத்தத் துவங்குகின்றனர்.
குழந்தைகளுக்கான உலகை பெரியவர்கள் புரிந்து கொள்ள முயல்வதே இல்லை.
அவர்களின் துன்பங்களுக்கு மருந்தை அவர்களே கண்டு பிடிக்கின்றனர்.
அவனது ஒவ்வொரு அசைவையும் புரிந்து கொண்டு நடக்கும் அம்மா அப்பா அக்கா அவர்கள் வளர்க்கும் நாய் கூட.
முகமூடியை கழற்றி எனது மகனின் முகத்தை நான் காண வேண்டும் என அன்பு ததும்பி கூறும் அப்பா .
அவனது மகிழ்வே தனது வாழ்வாக எண்ணி வாழும் அம்மா...
மனதை நெகிழ வைத்த உண்மைக் கதை.ஆசம்.
குழந்தைகளுக்கான உலகை உலகம் எப்போது படைக்கப் போகிறது?
இப்படிப்பட்ட படங்கள் தமிழில் வரும் காலம் எப்போது?
இப்படத்தை அறிமுகம் செய்த ஆசிரியர் ரெ.சிவா விற்கு மனம் நிறைந்த நன்றி.
மு.கீதா
புதுக்கோட்டை