World Tamil Blog Aggregator Thendral: March 2017

Tuesday 28 March 2017

வீதி கலை இலக்கியக்களம்-37

                            வீதி கலை இலக்கியக்களம்
                                கூட்டம்-37

இன்று புதுகை ஆக்ஸ்போர்டு சமையற்கலைக்கல்லூரியில் வீதி கலை இலக்கியக்களத்தின் 37 ஆவது கூட்டம் மிகச்சிறப்பாக நடந்தது.

நிகழ்விற்கு முன்னதாக கவிஞர் அன்னக்கொடி அவர்கள் வீதியைப்பற்றி எழுதிய கடிதத்தினை கவிஞர் சோலச்சி வாசித்து காட்டினார்.


கவிஞர் கீதா அண்மையில் வாசித்த “நிழலற்ற பெருவெளி” என்ற எழுத்தாளர் அர்ஷியாவின் மொழிபெயர்ப்பு நூல் குறித்தும்,”நிசப்தம்” திரைப்படம் குறித்தும் அறிமுகம் செய்தார்.

வரவேற்புரை:கவிஞர் நீலா..

ஒவ்வொருவரையும் அவர் அறிந்த விதத்தினைக்கூறி  வரவேற்ற விதம் அருமை.

Saturday 25 March 2017

வீதி -௩௭ 37

அன்புடன் அழைக்கின்றோம்

வீ தி கூட்டத்திற்கு கிளம்பிட்டீங்களா ...
இன்று[26.3.17]காலை பத்து மணியளவில் நம்ம புதுகை பேருந்து நிலயத்தில் உள்ள ஆக்ஸ்போர்டு சமையற்கலை கல்லூரியில்....

வரவேற்புரை :கு.ம.திருப்பதி

தலைமை .இரா .ஜெயா

நூல் விமர்சனம் :மீரா .செல்வகுமாரின் "சின்னவள் "-ராசி.பன்னீர் செல்வம்

மகளிர் தின உரை :ரேவதி

சிறப்புரை :நெடுவாசல் போராட்டக்களம் கண்ட இயற்கை உழவர் "ச .வே .காமராசு"


நிகழ்ச்சி தொகுப்பு :நீலா



சின்னவள்-நூல் விமர்சனம்

தாயுமானவனின் "சின்னவள் "கவிஞர் மீரா.செல்வக்குமார் அவர்களின் கவிதை நூல்

காலப்பெருநதியில்...சிறிய காவியமாய் "சின்னவள்" சிரிக்கின்றாள் .

ஒரு அன்பான தந்தைக்கு பாத்திரமான குழந்தை ...தந்தையின் ஸ்பரிசத்தில் உலகை வெல்லத்துடிக்கும்....கவிதையாய் "சின்னவள்"...மகளுக்கே தான் வடித்த உணர்வுகளை நெய்து நூலாக்கி சின்னவளோடு நம்மையும் சிறைப்படுத்தும் வித்தை அருமை..

ஆண்களே மோசம் என்ற குற்றச்சாட்டுகளை பொய்ப்பிக்க சின்னவள் பிறந்துள்ளாள்.

தேவதைகளால் தேடப்படுபவன் -நூல் விமர்சனம்

கவிஞர் தங்கம் மூர்த்திஅவர்களின் "தேவதைகளால் தேடப்படுவன் "நூல் திருமிகு பாரதிகிருஷ்ணகுமார் அவர்களால் அண்மையில் வெளியிடப்பட்டது ....

புதுகை மக்களின் அன்பில் நிறைந்த கவிஞரின் நூலின் தலைப்பே அவரின் தன்மையை உணர்த்துவதாக அமைந்துள்ளது மிகச்சிறப்பு ..

குளிர் இளந்தென்றலின் மணமும்,மென்மையும் .....நம்மை பரவசப்படுத்துவது போல ...மழையில் நனைந்த பூக்களின் தலையாட்டலாக ,மல்லிகையாய் மனம் முகிழ்க்கும் கவிதைகள் .....
                
                                                 "குளிர்ந்த ஒளி
                                       மழையெனப் பொழிந்து
                                         என்னை முழுவதும்
                                           நனைத்திருந்தது

                                                அப்போது
                                             பூமியெங்கும்
                                           பூத்திருந்தன
                                             நிலவுகள் "
நிலா பூக்கும் அதிசயம் இவருக்கு தான் தோன்றும் ...

Thursday 23 March 2017

காவு கொடுக்கவா வளர்த்தோம் ..

காவு கொடுக்கவா வளர்த்தோம் ..

எத்தனையோ வலிகளில் ஆறுதலாய் இருப்பது குழந்தைகளே ....

என் தோழியின் கவலைக்கு மருந்தாக அவர்களின் குழந்தைகளே இருந்தனர் .வேதனைகளை அவர்களின் வளர்ச்சி கண்டு துடைத்து வாழ்ந்தார் ....

சில மாதங்களுக்கு முன் கடைவீதியில் மகிழ்வாய் ஓடி வந்து கீதா நல்லாருக்கீங்களான்னு கேட்டு கையை பிடித்த போது , நீண்ட நாள் கழித்து அவர் முகத்தில் சிரிப்பை பார்த்தேன் . மனம் நிம்மதியாய் இருந்தது ...

நலமான்னு கேட்டேன் ..நல்லாருக்கேன்..உங்களுக்கு தெரியுமா ரமேஷுக்கு வங்கில வேலைக்கிடைச்சிருக்கு..கரூரில் எஸ்.பி.ஐ.வங்கில பணி செய்கின்றான் என்ற போது அப்பாடான்னு இருந்துச்சு ..

நல்லா படிக்கிற பையன் ...பொறியாளர் படிப்பு முடித்த உடன் வங்கித்தேர்வு எழுதி தேர்வாகியிருந்தான் .இனியாவது மகிழ்வா இருங்கம்மா கஷ்டப்பட்டதுக்கு விடிவு காலம் வந்துடுச்சுன்னு ..மனம் நிறைய சொன்னேன் ..

நல்லவங்க நல்லாருக்க கூடாதுன்னு இருக்கும் போல ...

இன்று அவன் இல்லை.

என்ன சொல்வது திங்களன்று காலை பணிக்கு சென்றவன்..ஏன் செவ்வாய் கிழமை காலை அதிகாலையில் நண்பனிடம் வண்டியை வாங்கிக்கொண்டு புதுக்கோட்டைக்கு வரணும்?. நண்பனிடமும் கூறாமல் ,அம்மாக்கிட்டயும் வரேன்னு சொல்லாமல்....வந்து புதுகை எல்லையில் விபத்துக்குள்ளாகி ஏன் கிடக்கணும் ..?.

தன்  ஆசை மகனின் மரணத்திற்கு காரணம் தெரியாமல் வாழ்வதென்பது ஒரு பெற்றோருக்கு எவ்வளவு வலியைத்தரும் ..

மரணத்திற்கு பலி தரவா குழந்தைகள் ...

அவர்கள் பாதுகாப்பை யோசிக்காமல் ..இப்படி அகலமாக போவதற்கா பிறக்கின்றனர் ..

அதே இடத்தில் இன்று மாலை ஒரு இருபத்து நான்கு வயது வாலிபன் விபத்துக்குள்ளாகி அடையாளம் தெரியாமல் புதுகை மருத்துவமனையில் உள்ளதாக முகநூலில் செய்தி வருகின்றது..

எப்படி பாதுகாப்பாக வண்டி ஓட்டுவதென்பதை இன்னும் கற்று கொடுக்கவில்லையா அல்லது அவர்களின் அலட்சியமே காரணமா ?

தலைக்கவசம் அணிந்திருந்தால் அவர்கள் இருவரும் இன்று உயிருடன் இருந்திருப்பார்கள் ....

பெற்றோர்களை வேதனைக்கடலில் ஆழ்த்தவா பிள்ளைகள் .

...நடைப்பிணமாக இனி அவர்களது வாழ்க்கை ....

Tuesday 21 March 2017

வியர்வை


சுட்டெரித்த கதிரவனால்
வானத்தில் வியர்வை
மகிழ்வாய் குதிக்க...

சட்டென்று
இடம் மாறியது
என்னுடலில்
பொல்லாத வியர்வை...

Monday 20 March 2017

வீதி கலை இலக்கியக்களம்-36[19.2.17]

வீதி கலை இலக்கியக்களம்-36

பிப்ரவரி மாத வீதிக்கூட்டம்

மிகத்தாமதமான பதிவிற்கு மன்னிக்கவும்..
 மிகச்சிறப்பாக நடந்தது வீதிக்கூட்டம்...

பிப்ரவரி மாதம் 19.2.17 அன்று அமைப்பாளர்களான பேராசிரியர் சக்திவேல் மற்றும் கவிஞர் சுகுமாரன் ஆகியோரால்அருமையாக நடந்தது..
வரவேற்புரை :கவிஞர் சுகுமாரன்...
தனக்கே உரிய பாணியில் அனைவரையும் அன்புடன் வரவேற்ற விதம் அருமை.

தலைமை:கவிஞர் .முத்துநிலவன்

வீதியின் தோற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் கவிஞர் முத்துநிலவன் அவர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது..அவர் இம்மாத வீதியில்  தலைமை ஏற்று ஒரு பண்பாட்டுக்கூட்டமாக வீதி உள்ளது.ஒரு படைப்பு பற்றி நீண்ட நெடிய பாரம்பரிய மிக்க தமிழ் மொழியில், படைப்பாளனின் கடமை கூடுதலாக உள்ளது.வள்ளுவன் கையில் உள்ள எழுத்தாணியும்,தொல்காப்பியனின் தூரிகையும், நம் கையில் உள்ள பொறுப்பு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைக்கூறுகின்றது...இக்காலக்கல்வி படைப்பாளியை உருவாக்கவில்லை...என்று கூறி தனது சிறப்பானதொரு தலைமை உரையால் வீதிக்கு அணி செய்தார்.

Saturday 18 March 2017

எந்த மரம் குடை பிடிச்சிட்டுருக்கு?

எந்த மரம் குடை பிடிச்சிட்டுருக்கு?

 இப்படி உரிமையாய் பேசும் உறவுகளைத் தந்த முகநூலிற்கு எனது மனம் நிறைந்த நன்றி...

 பேலியோ டயட்டிற்காக....நமது உள் உறுப்புகளின் காயத்தை சரி செய்ய பசுமஞ்சள் கொழுப்பு உணவுக்குபின் சாப்பிட வேண்டும்...அதனுடன் ஒரு சின்ன வெங்காயம்,எட்டு மிளகு,மூன்று துளசி இலை சேர்த்து சாப்பிடுவதற்கு பசு மஞ்சள் வைத்தியம் என்று பெயர்.. 

இதற்காக சேலத்தில் இயற்கை விவசாயத்திற்காகவே வாழ்கின்ற முகநூல் சகோதரியான @ Aaranya Alliஅவர்களிடம் பேசிய பொழுது ஒரு விவசாயி மகளாக,பூமியின் மீது அவர் கொண்டுள்ள அக்கறை மனதை நெகிழ வைத்தது.. இயற்கையாக வேளாண்மை செய்யும் எண்ணம் வந்த தருணத்தை அவர்கள் கூறிய போழுது எத்தனை பொறுப்பற்று வாழ்கின்றோம் எனத் தோன்றியது.. 

Thursday 16 March 2017

சே..

ஆறடி நிலம் கூட
ஆற்று மணலாய் கரைந்திடும்..புவியில்

அளவில்லா சொத்துக்குவிப்பு
வாசிக்கவே கூசுமளவு..

நிம்மதியாக உறங்கிட இயலுமோ..
நீதியற்றவர்களால்...

நேரில் முடியாதவர்கள்
மனதிற்குள் காரி....

வருங்கால சந்ததிக்கு...
வறண்ட மண் கூட
சாத்தியமின்றி...
 
சாக்கடை அரசியலில் மூழ்கிடும்
பாரதம்....
 




Wednesday 15 March 2017

மின்னூல்கள்




 நம்பவே முடியவில்லை புஸ்தகா நிறுவனம் எனது நூல்களை மின்நூலாக வெளியிட்டுள்ளது .கவிஞர் முத்துநிலவன் அண்ணாவின் முயற்சியால் இன்று புதுகை எழுத்தாளர்களின் நூல்கள் அனைத்தும் மின்னுக்குள் வடிவில் ....நன்றி அண்ணாவிற்கு புஸ்தகா நிறுவனத்தினருக்கும் ...



 எனது முதல் கவிதை புத்தகமும்,வளரி சிற்றிதழ் வழங்கிய கவிப்பேராசான் மீரா விருது பெற்றுள்ள புத்தகமுமாகிய "விழிதூவிய விதைகள்" ...மின்னூலாக உங்களுக்காக...

http://www.pustaka.co.in/home/ebook/tamil/vizhi-thooviya-vidhaigal




 எனது வாழ்வின் திருப்பு முனையாக....இளமுனைவர் பட்ட ஆய்வு நூல் கவிஞர் ஜீவபாரதியின் "வேலு நாச்சியார் நாவலில் பெண்ணியச்சிந்தனைகள்" "...எனது முதல் நூலாக 2007 இல்வெளியிடப்பட்ட நூல்..தற்போது மின்னூலாக...நன்றி புஸ்தகா நிறுவனத்திற்கு...
Velu Nachiyar Novelil Penniya Sinthanagal | Tamil eBook | M. Geetha | Pustaka

http://www.pustaka.co.in/home/ebook/tamil/velu-natchiyar-novelil-penniya-sinthanaigal




எனது "ஒரு கோப்பை மனிதம்" கவிதைப் புத்தகம் மின்னூலாக..

http://www.pustaka.co.in/home/ebook/tamil/oru-koppai-manitham


Tuesday 14 March 2017

இன்னும் எத்தனை காலம்?


குப்பைகள் பொறுக்கிய
கைகளில் புத்தகங்கள்
தவழ்வதை பொறுக்காத
பொறுக்கிகளா .....

குருதி கொதிக்கும் நிலை
குனிந்த முதுகு சற்று
நிமிர்வதை தாங்க முடியாது
கொலை செய்தீர்..

வயல்களில் காய்த்த விரல்கள்
வடுவேறிய கால்கள்
கல்லூரி மிதிப்பதை
கண்கொண்டு சகிக்க முடியாத
கடைமடையர்களே..

மலம் அள்ளவா கைகள்
மதியற்றீரா நீவிர்...

வந்தேறிகளே....
வரம்புமீறி போகின்றீர்....
ஒரு விதை
ஒரு வனத்தின் திறவுகோல்

ஒரு மரணம்
ஓராயிரம் குருதிகள் வெடித்துச்
சிதறும்.....அணுக்கூட்டம்

மூடர்களே.....
முடை நாற்றம் வீசும்
உங்கள் குருதியைக் கழுவிக்கொள்ளுங்கள்...
எங்களின்..........ல்
பாவம் தொலைய.....







Saturday 11 March 2017

மகளிர் தின உரை-வழக்கறிஞர்கள் சங்கம் அறந்தாங்கி 8.3.2017

மகளிர் தின உரை-வழக்கறிஞர்கள் சங்கம் அறந்தாங்கி

வாதாடுபவர்கள் முன்
சொல்லாடும் கவி நான்
வார்த்தைகளால் வாழ்கின்றோம்
ஆம் ..வார்த்தைகளால்
வானத்தையும் வில்லாக்கும்
வழக்குறைஞர் நீவிர்
தலைகுனியா நீதி வழங்கி
தலைநிமிர்ந்து நடக்கும் நீதிபதிகள்.

 வானவில் குழந்தைகளை
வளப்படுத்தும் ஆசிரியர் நான்.

சமூகத்தை வழக்குகளால்
சந்திக்கும் உங்களிடத்தில்

சமூகத்தை கவிதையால்
சங்கமிப்பவள் வாழ்த்துகின்றேன்
இனிய மகளிர் தின வாழ்த்துகள்.

” மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக்கொளுத்துவோம்” என்றான் பாரதி..ஆனால் பாரதிக்கே மாதரின் இருப்பை அறிவுறுத்தியவர் சகோதரி நிவேதிதை..அவர்களது சந்திப்பிற்கு பின்னே தான் பாரதியின் பாடல்களில் பெண்ணியச்சிந்தனை அதிகம் கலந்தது என்றால் மறுக்க முடியாது.

இரோம் ஷர்மிளா

இரோம்....
இரும்பு பெண்மணியே
துருப்பிடித்த மனங்கள் உனை
தூக்கி எறிந்துள்ளது, உன்
தியாகம் உணரா மாக்கள்.
பலியாவதையறியா
பலியாடுகள்....

எத்தனை வலி தாங்கினாய்
எதையும் நினைக்கவில்லையே.
இத்தனை துரோகத்தை ஏற்க
இதயத்திற்கு வலிமை வேண்டும்
உன் அருமை பெருமை உணர
காலம் வழி செய்யட்டும்.

Thursday 9 March 2017

மகளிர் தின விழா 8.3.17

மகளிர் தின விழா

8.3.17 அன்று மகளிர் தின விழாவிற்காக காலையில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ரோட்டரிநிறுவனம் இணைந்து நடத்திய விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள நீலா அழைத்த போது பொதுவாக இலக்கிய கூட்டங்களில் மட்டும் அதிகம் கலந்து கொண்ட எனக்கு விவசாயம் சார்ந்த தொழில் புரியும் பெண்கள் கலந்து கொண்ட விழா புதிய உணர்வைத்தந்தது.மாவட்டத்திட்ட அலுவலர் புதுவாழ்வுத்திட்டம் திருமிகு வசுமதி அவர்களும்,எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தைச்சேர்ந்த திருமிகு இராஜ்குமார் அவர்களும் ,திருமிகு பிலால் மற்றும் குயிலி ஆகியோரால் விழா மிகச்சிறப்பாக நடந்தது..அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகளும் நன்றியும்.



8.3.17 மாலையில் மற்றுமொரு அனுபவமாக வழக்கறிஞர்கள் சங்கம் அறந்தாங்கி நடத்திய விழாவில் மாவட்ட குற்றவியல் நீதிபதி,மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிபதிகள் தலைமையேற்க..சிறப்பு விருந்தினராகக்கலந்து கொண்டு மகளிர் தினவிழாக்குறித்து பேசினேன்.எனக்கு முன் பேசிய வழக்கறிஞர்கள் பெண்களுக்கு சுதந்திரம் வந்துவிட்டதாக அவர்கள் பயன் படுத்திக்கொள்ளவில்லை என்றும் பேசினார்கள்.





.கொஞ்சம் பதட்டம் இருந்தாலும் சொல்லவேண்டிய கருத்தை அவர்கள் ஏற்கும் விதத்தில் கூறிய போது அவர்களால் மறுக்க முடியவில்லை...விழாவை மிகச்சிறப்பாக நடத்திய திருமிகு பிஸ்மில்லா அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.