World Tamil Blog Aggregator Thendral: December 2016

Wednesday 21 December 2016

வீதி-34

                                                            வீதி
                                   கலை இலக்கியக்களம்
                                                 கூட்டம்-34
நாள்:25.12.16

இடம்:ஆக்ஸ்போர்டு சமையற்கலைக்கல்லூரி புதுகை
புதிய பேரூந்து நிலைய மாடியில்]

காலம்:காலை 9.03.-1.00

காலை 9.30 மணி அளவில் ஆரோக்கிய உணவு குறித்த வீடியோக்காட்சி

நிகழ்வுகள்

பாடல்,கவிதை,கதை,கட்டுரை,நூல் விமர்சனம்[ஞாபக நடவுகள் கவிதை நூல்].

சிறப்பு விருந்தினர்கள்

கவிஞர் அன்னக்கொடி ஸ்ரீவில்லிப்புத்தூர்.

வளரி இதழின் ”கவிப்பேராசான் மீரா” விருது பெற்றுள்ள ”ஞாபக நடவுகள் “நூலாசிரியர் கவிஞர் கூரா அம்மாசையப்பன். சேலம்.

.மேலும் சிறப்பாக

சர்க்கரை, உடல் எடை, தைராய்டு,மூட்டு வலியை இரத்த அழுத்தம்,கொழுப்பு,மகளிர் தொடர்பான பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வாக..உணவுமுறையில் மட்டுமே சிறிது மாற்றம்[பேலியோ டயட்]

அதிக செலவில்லை…ஆனால் பலனடைந்தோர்..தங்களின் அனுபவங்களை கூறுகின்றனர்.. அவசியம் வருக….ஆதாயம் இல்லை …அக்கறையால் அழைக்கின்றோம்.

அமைப்பாளர்கள்

கவிஞர்கள்
சோலச்சி 9788210863,
முருகதாஸ்..9443824331
 
                                                                                                                 அன்புடன்
                                                                                                                 கீதா 9659247363



Monday 19 December 2016

இணையத்தமிழ்ப்பயிற்சி முகாம்-நிகழ்ச்சி18.12.16

புதுக்கோட்டை கணினித்தமிழ்ச்சங்கம் நடத்திய
இணையத்தமிழ்ப்பயிற்சி முகாம்.

மவுண்ட் சியோன் பொறியியல் கல்லூரியில் 18.12.16 அன்று காலை 10 மணியளவில் தொடக்கவிழாவோடு துவங்கியது.




வரவேற்புரை

                கவிஞர் ராசிபன்னீர்செல்வன் அவர்கள் வரவேற்புரை நல்கினார்.
[விழா நடக்கும் இடத்திற்கான பொறுப்பு மற்றும் அவர்களே உணவும் தேநீரும் வழங்குவார்கள்  என்று கூறி பெரிய நிதிச்சுமையை குறைத்தார் திட்டமிடலின் போது]

வாழ்த்துரை

மவுண்ட் சியோன் பொறியியல் கல்லூரியின் இயக்குநர் திருமிகு ஜெய்சன் ஜெயபரதன் அவர்களும்,கல்லூரியின் முதல்வர் முனைவர் பாலமுருகன் அவர்களும் சிறப்பானதொரு வாழ்த்துரையை வழங்கினார்கள்.

பயிற்சி கையேட்டு நூல் வெளியிட்டு சிறப்புரை


கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் பயிற்சி கையேட்டு நூலை வெளியிட அதை கணினித்தமிழ்ச்சங்க உறுப்பினர்களாகிய பாவலர் பொன்.க அவர்களும் ,கவிஞர் கீதாவும் பெற்றுக்கொண்டனர்.

சிறப்பானதொரு உரையை கவிஞர் தங்கம்மூர்த்தி வழங்கினார்.

பயிற்சி நோக்கவுரை.


கணினித்தமிழ்ச்சங்கத்தின் தோற்றம்...தோற்றுவித்தவர்,ஏன் கணினித்தமிழை வளர்க்க வேண்டும் என கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள் விரிவாக எடுத்துரைத்த விதம் அனைவரையும் கவர்ந்தது.ஒவ்வொரு நாளும் தூங்காமல் திட்டமிட்டு அதை வெற்றிகரமாக நடத்தி முடிக்கும் திறமையை பாராட்டாமல் இருக்க முடியாது.

வாழ்த்துரை வழங்கிய சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்து நூல்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

நன்றியுரை

கவிஞர் கீதா நன்றியுரை கூற தொடக்கவிழா இனிதே நிறைவுற்றது.

 பயிற்சி முதல்நிலை

முதல் பயிற்சியாக தொடக்கநிலையில் உள்ளவர்களுக்கு முனைவர் பழனியப்பன் அவர்கள் மற்றும் புதுகை எல்.கே இன்ஸ்டியூட் உதயக்குமார் ஆகியோர் வழங்கினார்கள்.
புதுக்கோட்டை மற்றும் பல மாவட்டங்களில் இருந்து 80 பேருக்குமேல் பயிற்சியில் கலந்து கொண்டனர்.அதில் 40 பேருக்கு மேல் அன்றைய பயிற்சியில் மின்னஞ்சல் துவங்கி, வலைப்பூவும் வடிவமைத்தனர்.

வலைப்பூவை எவ்வாறு மேம்படுத்தலாம் என்று வலைச்சித்தர் திண்டுக்கல்தனபாலன் அவர்கள் தெளிவாக விளக்கினார்கள்.அனைவரும் தங்களது தளத்தை செம்மைப்படுத்திக்கொள்ள உதவினார்.

விக்கிபீடியாவின் அடிப்படை நோக்கம் என்ன?என்ன எழுதாலாம்....அதன் பயன்கள் என்ன என்று விக்கிபீடியாவைச்சேர்ந்த பிரின்ஸ் என்ராசு அவர்கள் தெளிவுபடுத்தினார்கள்.

முனைவர் ஜம்புலிங்கம் அய்யா தனது விக்கிபீடியா அனுபவங்களைக்கூறி எப்படி எழுத வேண்டும் .எதை எழுதக்கூடாது என்பதை கூறி..
பயிற்சியை மெருகூட்ட விக்கிபீடியாவில் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களுக்காக ஒரு கட்டுரை துவங்குகின்றேன் என்று துவங்கினார்கள்.நம்பிக்கைக்குரிய விக்கிபீடியா உறுப்பினராக அய்யா விளங்குகின்றார்..கணினித்தமிழ்ச்சங்கம் அளித்த முதல்பயிற்சியில் தான் அவர்கள் விக்கிபீடியாவைப்பற்றி அறிந்து பின் 300 கட்டுரைகளுக்கு மேல் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


























திருமிகு ரமேசு டி.கொடி திருச்சி
 யூ ட்யூபில் எவ்வாறு வீடியோவைப்பகிர்வது என்பதைப்பற்றி சிறப்பாக விளக்கினார்.
அலைபேசி பயன்பாடு
அலைபேசியில் என்னவெல்லாம் பயன்படுத்தலாம் என்பதையும்,கூகுளில் ஷார்ட்கட் முறைகளையும்,திருமிகு கோபிநாத் [ஜி டெக் எஜுகேசன்]அவர்களும் திருமிகு ராஜ்மோகன் அவர்களும் எடுத்துக்கூறியது மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.

கலந்து கொண்டு சிறப்பித்த வலைப்பதிவர்கள்
திருமிகு கில்லர்ஜி,
திருமிகு எஸ்.பி செந்தில்குமார்,
திருமிகு கோபிசரபோஜி,
திருமிகு தமிழ் இளங்கோ..இன்னும் பலர் ....

கவிஞர் செல்வா மற்றும் புதுகை செல்வா ஆகியோர் தங்களது வலைப்பூ அனுபவங்களைப்பகிர்ந்து கொண்டனர்.

கல்லூரி நிர்வாகத்தினர் சிறப்பானதொரு மதிய உணவும் தேநீரும் தந்து உபசரித்த விதம் மிக அருமை.

அனைவரிடமும் கருத்து படிவம் வழங்கி கருத்துகளைப்பெற்றபோது..சிறப்பான பயிற்சி மேலும் வழங்க வேண்டும்,பிறமாவட்டங்களிலும் நடத்த வேண்டும் என அனைவரும் பயன் பெற்றோம் என்று எழுதியிருந்த போது ...அதுவரை பட்ட சிரமங்கள் எல்லாம் பனியாகக்கரைந்தன.

இப்பயிற்சி முழுமையடைய முழுமுதற்காரணம் கவிஞர் முத்துநிலவன் அண்ணா தான்.இரவுபகல் பாராது இதற்காக உழைத்துள்ளார்.அவர்களின் சீரான திட்டமிடலே முக்கிய காரணம்...கணினியில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்..என்ற தாகத்தை அன்றைய பயிற்சி உருவாக்கியுள்ளது.





Sunday 18 December 2016

உணவு முறையில் சிறிய மாற்றம்.

உணவு முறையில் சிறிய மாற்றம்.

ஆதாயம் இல்லை
அக்கறையால் கூறுகின்றேன்.

இருமாதங்களில்

உடல் எடை 82 இருந்து 75க்கு -,

நீரிழிவு-துவங்கும் நிலையில் இருந்த நீரிழிவு மிக நார்மலுக்கு,அதிகமா இருந்தாலும் நார்மலுக்கு திரும்பி மாத்திரை எடுப்பதை நிறுத்தியவர்கள் பலர்.

தைராய்டு-7 வருடங்களாக இருக்கும் தைராய்டு நார்மலுக்கு திரும்பிக்கொண்டு...

மெனோபாஸ்,தைராய்டு காரணமாக எப்போதும் சோர்வாகவே இருக்கும் நான் சுறுசுறுப்பாக பணி செய்ய முடிகின்றது.அதனால் எல்லோர் மேலும் இயலாமையினால் வரும் கோவமும் குறைந்துள்ளது.

எங்கள் குடும்பத்தினர் அனைவரும் இந்தப்பலனை அனுபவிக்கின்றோம்.
.
நீங்களும் பலன் பெறவே விழைகின்றேன்.

பாருங்கள்,இணையுங்கள் முகநூலில் @ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு குழுவில்..

அதிகாலையில் ஆசிர்வதிக்கப்பட்டேன்.

அதிகாலையில் ஆசிர்வதிக்கப்பட்டேன்.

எப்பவாவது?~! நடைப்பயிற்சிக்காக புதுக்குளம் செல்வேன்..வீட்டிலிருந்து வண்டியில் சென்று பின் அங்கிருந்து நடைப்பாதையில் நடப்பதுண்டு.

முகத்தில் அறையும் பனியை முழுமையாக வாங்கிக்கொள்வதில் வரும் மகிழ்வு வேறு எதிலும் கிடைக்காது.மெல்ல விடியும் பகல் அத்தனை அழகாக நம்மை வரவேற்கும்..

குளிர்ந்த நீரிலிருந்து வீசும் மென்பனிக்காற்று அடடா.
எனக்கு பிடித்த வேப்பமரத்தடியில் சில நிமிடங்கள் அமர்ந்து இலவசமாக தூய்மையான ஆக்ஸிஜனை சுமந்து கொள்வேன்.

எப்போதும் ஒரு ஒற்றைநாரை தனக்கான இரைக்காகக் காத்திருக்கும்.அதன் விடாமுயற்சியில் இரையோடு பறப்பதைக்காண்கையில்...என்ன சொல்வது இயற்கை அதிசயம்..தான்

அப்படி இன்று அதிகாலையில் வீட்டிலிருந்து புறப்பட்ட சில நிமிடத்தில் ஒரு பெரியவர் நடப்பதைப்பார்த்து அய்யா வர்றீங்களா என்று கேட்டேன்..உடனே வரேன்மா என்று ஏறினார்.எங்க போகனும்ங்க என்றதற்கு சர்சுக்கு போறேன்மா..என்றார்.

போகும் வழியில் தான் சர்ச் உள்ளதால் அங்கேயே இறக்கி விட்டேன்..
இறங்கியதும் அவர் கூறியது

”கடவுளே வந்து உதவி செய்துள்ளார்மா” என்று ஆசிர்வதித்து இறங்கிச்சென்றார்.எங்கள் வீட்டிற்கு அருகில் குடியிருக்கும் அவரின் வாழ்த்து இன்றைய நாளை மகிழ்வாகத்துவங்கி வைத்துள்ளது.

செய்வோம் சின்னச்சின்ன உதவிகளை...நமது நாள் மகிழ்வாக..

இனிய வணக்கம்..

Friday 16 December 2016

இணையத்தமிழ்ப்பயிற்சி முகாம்.18.12.16


ஆவலுடன் எதிர்பார்த்த வலைப்பதிவர்களுக்கான ஒருநாள் பயிற்சி ....வரும்

ஞாயிற்றுக்கிழமை.18.12.16 அன்று

புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் பொறியியல் கல்லூரியில்

புதுகை கணினித்தமிழ்ச்சங்கத்தால்,ஆர்வமுள்ள வலைப்பதிவர்களுக்கு, இணையத்தமிழ் பயிற்சி அளிக்கப்பட உள்ளது..முகநூல் நண்பர்களும் இதில் கலந்து கொள்வதை எண்ணி மகிழ்வாக உள்ளது..
வாருங்கள்...75 பேருக்கு மட்டுமே...முன் பதிவு செய்தவர்களுக்கு ....


Sunday 11 December 2016

வீதி கலை இலக்கியக்களம்-33

வீதி கலை இலக்கியக்களம்-33

இம்மாத வீதிக்கூட்டம் 27.11.16 அன்று காலை 10 மணியளவில் துவங்கியது.இம்மாதம் ஆட்டிசம் குழந்தைகளுக்கான சிறப்பு வீதியாக நிகழ்ந்தது.
வரவேற்புரை:”விதைக்கலாம்”பாலாஜி அனைவரையும் அன்புடன் வரவேற்று மகிழ்ந்தார்.

தலைமை:கவிஞர் அமிர்தா அவர்கள் தலைமையேற்று வீதிக்கூட்டத்தை சிறப்பாக நடத்தினார்.




பாடல்:கவிஞர் முருகதாஸ்[மாட்டைப்பற்றி பாடிய விதம் மிகச்சிறப்பு],பாவலர் பொன் .கருப்பையா,கவிஞர் மாலதி ஆகியோர் ஆட்டிசம் குழந்தைகளுக்கான பாடல்களைப்பாடி அனைவரையும் கவர்ந்தனர்...

கவிதை:கவிஞர் சிவக்குமார்,கவிஞர் செல்வா,கவிஞர் பவல்ராஜ்,கவிஞர் செம்பை மணவாளன் ஆகியோர் கவிதை வாசித்து வீதிக்கு மெருகூட்டினர்.

நூல் விமர்சனம்:எழுத்தாளர் பாலபாரதியின்:ஆட்டிசம் பற்றி சில புரிதல்கள் “என்ற நூலை கவிஞர் சோலச்சி அறிமுகம் செய்து அவரது ஆசிரியப்பணியில் சந்தித்த ஆட்டிசம் குழந்தைகளின் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.
சிறுகதை:கவிஞர் இந்துமதி ஆட்டிசம் பெற்றொரின் சிக்கல்களை கதையாக பின்னியிருந்த விதம் மிக அருமை.

கட்டுரை:கவிஞர் ரேவதி 
ஆட்டிசம் குறித்த விரிவான,தெளிவான,புள்ளிவிவரங்களுடன் மிகவும் ஆழ்ந்து கட்டுரையை தந்த விதம் அவரது இலக்கியப்பணியில் உள்ள முன்னேற்றத்தைக்காட்டியது..அனைவராலும் பாராட்டப்பட்டது.
காணொளிக்காட்சி:ஆட்டிசம் குழந்தைகளுக்கான ஒரு வீடியோ கிளிப்பிங் காணொளிக்காட்சியாக பாலாஜி படைத்தார்.




















சிறப்பு விருந்தினர்
பேராசிரியர் டாக்டர் .பிரபாகர் இம்மானுவேல்..M.Sc,M.Phil,M.S.Ed[USA],M.Phil,Ph.d.
திருச்சி ஹோலிக்கிராஸ் சர்வீஸ் சொசைட்டியின் இயக்குனர்.
  35க்கும் மேற்பட்ட நூல்களை சிறப்புக்குழந்தைகள்/மாற்றுத்திறனாளிகளுக்காக  எழுதியுள்ளார்.
மூவாயிரம் குழந்தைகட்கு மேலாக தனது துணைவியாருடன் சேர்ந்து பயிற்றுவித்துள்ளார்.அவர்களும் கூட்டத்தில் காந்து கொண்டு பெருமை சேர்த்துள்ளார்.
கீரனூர் மற்றும் பிற ஊர்களில் இக்குழந்தைகளுக்காக பயிற்சி அளித்து வருகின்றார்.
புதுகையிலும் இடம் தந்தால் இங்கிருந்து திருச்சிக்கு வரும் குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இவரது ”தாய்மை மற்றும் குழந்தை வளர்ச்சி “என்ற நூல் ஒவ்வொரு பெண்ணும் அறிந்து கொள்ள வேண்டிய உண்மைகளைத்தாங்கி உள்ளது.குழந்தை பெற்றவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய நூலாக உள்ளது.
சிறப்புரை
சமுதாயத்திற்கு பயன்படும் செயல்களைச்செய்யும் போது குழந்தைகளைப்பற்றி யாரும் நினைப்பது இல்லை.தீர்வற்ற சிந்தனைகளால் பயன் இல்லை.
ஆட்டிசம் ஒரு நோய் அல்ல...உடற்குறைபாடு என்பதை உணரவேண்டும்.அக்குறை உள்ளவர்கள் தனித்து இருப்பதையே விரும்புவார்கள்.தனியே இருப்பதை ஆட்டோ என்பதால் ஆட்டிசம் என்ற வார்த்தை உருவானது.

வளர்ச்சி பருவக்குறைபாடே ஆட்டிசம் ஆகும்..அறிவுத்திறன் சார்ந்தவை இல்லை.
இதன் தன்மைகள்
*சமூகப்பங்கேற்பு கொள்வது இவர்களுக்கு சிரமமான ஒன்று
*மொழி/தொடர்பு கொள்ளுதல்/பேச்சு ஆகியவை கடினமான ஒன்றாகும்.
*மாறுபட்ட குணாதிசயங்களை கொண்டவராக இருப்பர்.
சிறுவயதிலேயே தற்காலத்தில் செல்லை வைத்து பார்த்துக்கொண்டிருக்கும் குழந்தைகள் நாளடைவில் ஆட்டிசம் குழந்தைகளுக்கான தன்மைகளைப்பெறும் என்ற அதிர்ச்சி தரக்கூடிய செய்தியைக்கூறினார். 
மருத்துவம்
இக்குறைபாட்டிற்கு மருந்து இல்லை...ஆனால் பெற்றோர்கள் அறியாமையினால் மருத்துவரிடம் காட்டுவதால் அவர்களும் ஊட்டச்சத்து மாத்திரைகளைத்தந்து  உண்மையை கூற மறுக்கின்றனர்.
எனது நண்பர் கூட சிறந்த மருத்துவர் ஆனால் இவ்வாறு ஏன் செய்கின்றாய் எனக்கேட்ட பொழுது..நான் சொன்னால் அவர்கள் உணர மாட்டார்கள்.மேலும் இந்த மருத்துவர் சரியில்லை என எல்லாரிடமும் சொல்ல வாய்ப்பு உண்டு எனக்கு வரும் நோயாளிகளை குறைத்துக்கொள்ள நான் விரும்பவில்லை என தெளிவாகக் கூறினார் என்று சொன்ன போது என்ன சொல்வது எனத்தெரியாமல் அமர்ந்திருந்தோம்.
இவர்களிடம் கற்றல் குறைபாடு 80%,அறிவுத்திறன் குறைபாடு 20% இருக்கும் சிலருக்கு அளவு வேறுபடலாம்.
முதல் படி 
3 மாதம் முதல் ஒண்ணரை வயதுக்குள்
வளர்ச்சியில் பின் தங்கிய குழந்தைகளாக இருப்பார்கள்..பெற்றோருக்கு இவ்வறிவு இருப்பின் எளிதில் கண்டு பிடித்து தொடர் பயிற்சியினால் இக்குறைப்பாட்டை போக்கி ,நடத்தையில் மாற்றத்தைக்கொண்டுவந்து விடலாம் என்பது மறுக்க முடியாத உண்மை.ஆனால் அம்மாவிற்கு குழந்தையை எவ்வாறு வளர்க்க வேண்டும் என்ற அறிவை, பொறுப்பை கல்வியோ,சமூகமோ கற்றுத்தருவதில்லை என்பதே வேதனையான உண்மை.
இரண்டாம் படி 
மூன்று வயதிற்குள் கண்டு பிடித்தால் இவர்களுக்கென உள்ள சிறப்பு பள்ளியில் சேர்த்து பயிற்சி அளித்து 80% குறைப்பாட்டை நீக்கி, அவர்களை சாதாரண பள்ளியில் சேர்க்க வாய்ப்பு உள்ளது. 
நரம்பு மண்டல ஒருங்கிணைப்பில் ஏற்படும் தாமதமே இவர்களுக்கு குறைபாடாகும்.

5 வயதிற்குள்  தூண்டப்படும் நியூரான்களே கற்றலுக்கு பயன்படுகின்றன.
8 வயதிற்கு மேல் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் குறைபாட்டைக்காண்கையில் அவர்கள் நிரந்தரமான ஆட்டிசக்குழந்தையாகவே மாறிவிடுகின்றனர்.அவர்களின் குறைபாட்டை களையும் காலம் முடிந்துவிடுகின்றது..

மொழிதான் கல்வியின் ஆதாரமாக உள்ளது.குழந்தை தான் கற்றதை வெளிப்படுத்தினால் மட்டுமே கற்றல் நிகழ்ந்துள்ளது என்று பொருள்...ஆனால் இக்கால குழந்தைகளில் கற்ற என்பது மிகவும் குறைவு என்பது மறுக்க முடியாத உண்மை.மனப்பாடம் செய்யவே பயிற்றுவிக்கப்படுகின்றார்களே ஒழிய அவர்கள் கற்றதைப்பயன் படுத்தி தானாக செய்யும் அறிவைப்பெறுவதில்லை என்பதே உண்மை என்று கூறிய போது வீதியே உறைந்து நின்றது..

ஒரு குழந்தை எப்படி வளரும்?எப்படி வளர்க்க வேண்டும் என்பதை யாரும் கற்றுக்கொடுக்கவில்லை...பின் எவ்வாறு இப்படிப்பட்ட குழந்தைகளை அடையாளம் கண்டு குணப்படுத்துவது..


அவர் பள்ளிகளில் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தயாராக உள்ளார்..பள்ளிகள் அவரைப்பயன்படுத்திக் கொண்டால் மிகப்பெரிய விழிப்புணர்வு உண்டாகும் என்பதில் ஐயமில்லை
அவரின் பேச்சு அனைவருக்கும் விழிப்புணர்வை தந்ததுள்ளது...இத்தனைக்கூட்டங்களை விட மிகச்சிறப்பான வீதியாக இவ்வீதி அமைந்தது.

வீதிக்கூட்டத்திற்கு திருச்சியிலிருந்து சமூக ஆர்வலர் வில்வம்,காரைக்குடியிலிருந்து முனைவர் கண்மணி மற்றும் கவிஞர் ம.கு. வைகறை,ஆசிரியர் மா.தவமணி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நன்றியுரை
கவிஞர் கீதா அனைவருக்கும் நன்றி கூற வீதி சிறப்புடம் முடிந்தது.

இம்மாதக்கூட்டத்தை சிறப்பாக நடத்திய அமைப்பாளர்கள் கீதா மற்றும் பாலாஜிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.