World Tamil Blog Aggregator Thendral: திரைப்படம்
Showing posts with label திரைப்படம். Show all posts
Showing posts with label திரைப்படம். Show all posts

Sunday, 5 March 2023

அயலி திரை விமர்சனம்

அயலி
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
இன்று மாலை அயலி இணையத் தொடர் குறித்த விமர்சனம் நடத்தியது..
த.ம.அ ப.அமைப்பின் தலைவர் சகோதரி சுபாஷிணி அவர்கள் நிகழ்வின் முக்கியத்துவத்தை குறித்து பேசினார்.
பல நாடுகளில் இருந்தும் பெண்கள் கலந்து கொண்டு அயலி குறித்து விமர்சனம் செய்தனர்.
எட்டு பெண்கள் அயலியை பற்றி அவரவர் கோணத்தில் பேசினர்.
புதுக்கோட்டை ஜெயலெட்சுமி மகளைப் பற்றி பேராசிரியர் வெண்முகில் அவர்கள் பாராட்டிய போது பெருமையாக இருந்தது.அவள் நாசா செல்ல துணை நின்ற கவிஞர் நா முத்துநிலவன் அவர்களும் நிகழ்வில் கலந்து கொண்டு மகிழ்ந்தார்.

ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையுடன் அயலியைத் தொடர்பு படுத்தி பேசியது அருமை.நிகழ்வை சகோதரிகள் பாப்பா மற்றும் பாமா ஒருங்கிணைத்தனர்.தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் குழுவினர் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் 
எனது உரை இறுதியாக
அயலி புதுக்கோட்டை வீரப்பண்ணை கிராமத்தில் நடந்தது என்பதும், அதற்கு வசனம் எழுதியவர்களில் புதுக்கோட்டை தோழர் சச்சின் ஒருவர் என்பதும், அதில் அப்பாவாக நடித்த திருமிகு மதன் புதுக்கோட்டைக்காரர் என்பதும் எங்களுக்கு மிகவும் பெருமை.

திரைப்பட வரலாற்றில் பெண்கள் குறித்து இதுவரை பேசப்படாத பொருளைக் கருவாகக் கொண்டு இயக்கப்பட்டுள்ள படம் இது மட்டுமே.
சமயம், கடவுள் பெயரைக் கூறி பெண்களை அடிமைப்படுத்துவதைத் தான் பண்பாடு கலாச்சாரம் எனக் கூறித் திரியும் ஆதிக்கவாதிகளின் தோலை உரித்து காட்டுகிறது.
பெண்கள் தெளிவாகச் சிந்தித்து சரியான முடிவு எடுத்து உறுதியாக நின்றால் அனைவரும் ஏற்றுக் கொள்வர் என்று கூறுகிறது.
பெரியாரின் பெயரை, அம்பேத்கரின் பெயரை எந்த இடத்திலும் இயக்குநர் கூறவில்லை ஆனால் பார்ப்பவர் அனைவரையும் கூற வைக்கிறார்.
வசனங்கள் ஒவ்வொன்றும் கூர் தீட்டப்பட்ட கத்தியாக மூளைச் சலவை செய்யப்பட்ட மனிதர்களைப் பதம் பார்க்கின்றன.
பெண்கள் தங்கள் சிக்கல்களைத் தீர்க்க ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று கற்றுக் கொடுக்கிறது.
கல்வி ஒன்றே நமது துணை என பத்தாம் வகுப்பு முடித்தால்  திருமணத்திற்கு பணம் தருவதை மாற்றி உயர்கல்வி படித்தால் பணம் என்ற திராவிட அரசின் கொள்கையை உணர்த்தி கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
மூடநம்பிக்கைகளால் சீழ் பிடிக்கப்பட்ட சமுதாயத்தை திருத்தும் கடமை பெண்களுக்கும் உண்டு என்று பெண்களுக்கான சமுதாயக் கடமையை உணர்த்துகிறது.
குடும்பத்தோடு உட்கார்ந்து பார்க்கலாம் என்ற நம்பிக்கை அளிக்கிறது.
பெரியாரை அம்பேத்கரை மார்க்ஸை படிப்பவர்கள் சமுகச் சீரழிக்கும் காரணிகளின் ஆணிவேரை அசைத்து பார்ப்பர் என்று இயக்குநரின் மேன்மையை உணர்த்துகிறது.
தந்தையின் தாயின் பாசம் எப்படி இருக்க வேண்டும் என்று கற்றுக் கொடுக்கிறது.
மொத்தத்தில் திரை உலகம் எதை நோக்கி பயணிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.
திரைக் குழுவினர் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

Friday, 24 December 2021

blood money film

Blood money
தமிழ் சினிமா புதிய பாதையில் தடம் பதிக்கத் துவங்கி உள்ளது மனதிற்கு சற்று நிறைவாக உள்ளது...
ஊடக அறம் பேசும் படம் Blood money
Sarjun இயக்கத்தில் பெண் நிருபராக பிரியாபவானிசங்கர் நடித்திருக்கும் இப்படம்...உண்மையை பேசத் துவங்கி உள்ளமைக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்...
குவைத் நாட்டில் பணிபுரியும் சென்ற பட்டுக்கோட்டை  சகோதரர்கள் இருவருக்கும் அந்நாடு தூக்கு தண்டனை அறிவிக்கிறது...
பிரசவத்தில் தாயை இழந்த பெண் குழந்தை தன் தந்தையை பார்க்கத் துடிக்கும் கதை..
விபத்தில் இலங்கை இஸ்லாமியப் பெண்ணை கொன்றதாகவும் இழப்பீடாக  இறந்த பெண்ணிற்காக தரும் தொகை ரூ 30,00,000 (Blood money) கொடுத்தப் பிறகு எதற்காக தூக்குதண்டனை...என பெண் நிருபர் பிரியா பவானியின் போராட்டமே கதை..

முடிவில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடைக்கும் மன்னிப்பு கடிதம் அவர்களைக் காப்பாற்றுதிறது...
ஒரு குழந்தை தன் தந்தையைக் காணத்துடிக்கும் துடிப்பை சிறுமி இயல்பாக கடத்துகிறாள்..
மகன்களைக் காப்பாற்றத்துடிக்கும் தாய்,பெண் என்பதால் அவளை ஏளனம் செய்து அலட்சியம் செய்யும் ஊடக பணியாளர் ...

அரசு மற்றும் ஊடக நிறுவனர் இவர்களை எதிர்த்து துணை நிற்கும் மேலதிகாரி...

சிறப்பு... வழக்கமான டூயட் சண்டை காட்சிகள் இல்லாமல் பெண்ணை மரியாதையாக திறமைசாலியாக போராடி வெற்றி பெறுபவளாக காட்டியது சிறப்பு... பாராட்டுக்கள் இயக்குநருக்கு..

தூக்கு தண்டனை குற்றவாளிகளாக நடிக்கும் கிஷோர், ஷிரிஷ் கண்கலங்க வைத்துள்ளனர்..

படத்தில் அனைவரும் வாழ்ந்துள்ளனர்.. மனம் நிறைந்த வாழ்த்துக்கள்... தமிழ்த் திரைப்படம் தரமான படங்களைத் தந்து தடம் பதிக்கட்டும்.

ஆனால் பணி இஸ்லாமிய நாடு,இஸ்லாமிய பணக்காரர் தன்னிடம் பணி புரியும் இலங்கை இஸ்லாமியப் பெண்ணை கொலைசெய்ய அதை தன்னிடம் பணிபுரியும்  தமிழர்கள் மேல் சுமத்தி தண்டனை பெற்றுத்தருகிறார் என்பது சற்று உறுத்தவே செய்கிறது...

மதம் சாராத படம் எனில் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்....