World Tamil Blog Aggregator Thendral: தேன் துளிகள்
Showing posts with label தேன் துளிகள். Show all posts
Showing posts with label தேன் துளிகள். Show all posts

Monday, 8 December 2014

.மனிதம் துளி- 1

இன்றைய சிந்தனையாய்...

கிராமத்து சொலவடைகளில் தன்னம்பிக்கை வரிகளாய்.பெரியதைக்கூறி கடினச்செயலைச் சிறியதாக்கும் சொல்வன்மையை யாரிடம் கற்றார்கள் நம் முன்னோர்கள்?.போகின்ற போக்கில் வாழ்வியலை தூவிச் செல்லும் கிராமத்து கீதமாய்...

பட்டப்படிப்பு படித்தும் தற்கொலையை நாடும் கல்வியின் முன் இச்சொலவடை தலைநிமிர்ந்து நிற்கின்றது.

கல்வியாளர் ச.மாடசாமி அய்யாவின் சொலவடைகளும் சொன்னவர்களும் நூலிலிருந்து...

”அண்டத்தை சுமக்கிறவனுக்கு
சுண்டைக்காய் பாரமா?”

”ஆத்தைத் தாண்டுனவன்
குளத்தைத் தாண்டுனவன்
வாய்க்கா தாண்ட எம்மாத்திரம்?”

மனிதம் துளி-2

இன்றைய சிந்தனை

மனிதம் துளி-2

ப்ரீத்தி ஸ்ரீநிவாசன்...

.நீங்கள் அறிந்தவர் தான் .17 ஆண்டுகளுக்கு முன் 19 வயதுக்குட்பட்டோருக்கான தமிழகக்கிரிக்கெட் அணியின் கேப்டன்..சிறந்த நீச்சல் வீராங்கனை .ஹூஸ் இஸ் ஹூ அமாங் அமெரிக்காஸ் ஸ்டூடண்ஸ் திட்டத்தின் கீழ் படித்தவர் ப்ரீத்தி.அமெரிக்க பணியை நிராகரித்து கிரிக்கெட்டில் கவனம் சேர இந்தியாவிற்கு வந்தவர்.1997இல் அவர் 19வயதுக்குட்பட்டோருக்கான மாநில அணியின் நியமிக்கப்பட்டு தேசிய அளவிலும் வெற்றி பெற்றார்.


Sunday, 17 August 2014

வார்த்தைகள்

வார்த்தைகளால் வசமாகும்...உலகு
வளமான வார்த்தைகளால்
மனதை நிறைப்போம்....