World Tamil Blog Aggregator Thendral: சோலைவனம்

Thursday 30 January 2014

சோலைவனம்


 வண்ணப் பூக்களில் சில
தென்றலில் அசைந்தாடும்
மகிழ்வோடு
 மமதையோடு ...

தேன் அகத்தில்அடக்கிய
 கர்வத்தில் திளைத்தே ....

புயலில் சிக்கிடும் நிலையை
புரியாமல்  வரவேற்கிறது 

பாதுகாப்பை புறந்தள்ளி 
தவிக்கும் கண்களை
தவிர்த்து நகைக்கின்றது ...

வாடவே விரும்பும் மலரை
வாடாமல் காப்பற்ற
வழியின்றி வகையின்றி
செயலற்ற சோலை ..... வனம் ...




6 comments :

  1. Replies
    1. மிக்க நன்றி சார்

      Delete
  2. அருமை... உண்மை...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார்

      Delete
  3. அருமை கவிதை கீதா...உங்கள் முந்தைய பகிர்வோடு இணைத்துப் பார்க்க முடிகிறது..

    ReplyDelete
    Replies
    1. இணைத்துப் பார்த்தால் மட்டுமே புரியும் நன்றிம்மா

      Delete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...