World Tamil Blog Aggregator Thendral: மதிப்பிற்குரிய நீதியரசர் அவர்களுக்கு...

Thursday 14 September 2017

மதிப்பிற்குரிய நீதியரசர் அவர்களுக்கு...

மதிப்பிற்குரிய நீதியரசர் அவர்களுக்கு..... அரசு பள்ளிகளில் எத்தனை மனநலம் குறைவாக பாதிக்கப்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர்.தெரியுமா.

எங்கள் பள்ளியில் அப்படிப்பட்ட மாணவிகளை அன்பு ஒன்றின் மூலமாக வே....அவளை முன்னேற்றி உள்ளோம் தெரியுமா?

.பல வீடுகளில் இப்போது தான் முதல் தலைமுறையே பள்ளியின் வாசலை மிதிக்கின்றனர்.

தங்கள் குழந்தைகளை மதிய உணவிற்காக வும்.பாதுகாப்பிற்காகவும் மட்டுமே அனுப்பும் பெற்றோர் எத்தனை பேர் தெரியுமா?

இன்னும் பலருக்கு கல்வியின் முக்கியத்துவம் அறியாதவர்களின் குழந்தைகளுக்கு நாங்கள் கற்றுக் கொடுக்கிறோம்.

நாட்டின் சிறந்த மனிதர்களாக ஆக்கும் முயற்சி எங்களுடையது.

மதிப்பெண் நோக்கி ஓடத்துவங்கும் பொழுது எத்தனை குழந்தைகள் விரட்டி அடிக்கப்பட்டு எங்களை நாடுகின்றனர் தெரியுமா?

படித்த பெற்றோரின் கல்வியின் முக்கியத்துவம் தெரிந்த பெற்றோரின் குழந்தைகளும்
வாழ்க்கையே பிரச்சினையாக இருக்கும் பெற்றோரின் குழந்தைகளும் ஒன்று அல்ல.

எஙகளுக்கு பள்ளி ப்பணி மட்டுமல்ல..... அரசுப் பணி அத்தனைக்கும் ஆசிரியர்கள் தான் செய்ய வேண்டும்.

ஒரு குழந்தை வளர்கையில் கண்டிக்காமல் இரு என்று கூறுவது அந்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கும் என்பது தெரியுமா?

இப்போது இருக்கும் சமூகச்சீரழிவை உண்டாக்கும் பல காரணிகளோடு ஒத்துழைக்காத பெற்றோரின் குழந்தைகளை வைத்து கொண்டு நாங்கள் படும் வேதனையை என்னவென்று கூறுவது?

நாங்கள் மதிப்பெண் வாங்கும் இயந்திரங்களை உருவாக்கவில்லை.
அடிமட்ட மக்களின் பிரச்சனையில் கை கோர்க்கிறோம்.

3 comments :

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...