World Tamil Blog Aggregator Thendral: ஹாசினி பேசுகிறேன்...

Thursday 14 September 2017

ஹாசினி பேசுகிறேன்...

ஹாசினி பேசுகிறேன்.

அம்மா உங்கள் மகளை இழந்து வருத்தப்பட வேண்டாம்.தினம்தினம் பெண் குழந்தைகளை கொடுமையாக வன்முறை செய்யும் இந்த நாட்டில் இருந்து விரைவில் இறந்ததை எண்ணி நிம்மதி அடையுங்கள்.

உங்களிடம் பேசனும் போலருக்கு அம்மா.

என்னை அவன் தூக்கி சென்ற போது ஏனோ அடிவயிற்றில் மின்சாரம் தாக்கியது போல் உணர்ந்தேன்.
அவன் படுத்திய பாடுகளை ..... எப்படி கூற அம்மா....

அவன் என் உடல் எங்கும் கடித்தான்.எப்படி வலித்தது தெரியுமா?.. வலியில் கத்தியபோது வாயில் துணியை வைத்து அடைத்து விட்டான்.அண்ணா வேண்டாம் என்று கதறிய போதும் விகாரமான முகத்தை என் உடலெங்கும் தேய்த்தான்.
அம்மான்னு துடித்து உதைத்த என் கால்களை விரித்து அய்யோ அம்மான்னு கண்ணீர் விட்டு கதறிய பின்னும் என் பிறப்பு உறுப்பில்.......
வீடெங்கும் சிதறிய ரத்த துளிகளை துடைத்தான்.மயங்கிய என்னை அய்யோ இன்னும் என்ன செய்வானோ என்று மனம் பதறியது....

வீட்டில் இருந்த சாக்கை எடுத்து வந்து அதில் என்னை அமுக்கினான்....நீட்டிய கால்களை உடைத்து கட்டினான்....இப்பவாவது என் அம்மா கிட்ட விட்டு விட மாட்டானான்னு ஆசைப்பட்டேன் மா..
ஆனால் என் மீது சில்லென்று தண்ணீர் போல் நனைத்தது.....அய்யோ பெட்ரோல் வாசம் வருதே அம்மா நான் உன்னை இனி பார்க்கவே மாட்டேனா.... எறிந்து கொண்டே துடித்தேன் மா.ஏனோ ஒரு நாள் நான் கம்பிமத்தாப்பில் சுட்டுக்கொண்டபோது நீ பதறி அழுத நினைவு வர கருகி கருகிப் போனேன் மா.

கடைசிவரை அப்பாவை பார்க்கத் தோணவில்லை.... அம்மா.

No comments :

Post a Comment

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...