World Tamil Blog Aggregator Thendral: கலைப் பண்பாட்டு நிறுவனம் பயிற்சி

Thursday 21 September 2017

கலைப் பண்பாட்டு நிறுவனம் பயிற்சி

கலை பண்பாட்டுத்துறையின் மூலம் மூன்று நாள் பயிற்சி 20.9.17-22.9.17 வரை

காலை மதிப்பிற்குரிய மாவட்டக் கல்வி அலுவலர் , இராணியார் அ.ம.மே.நி.பள்ளியின் தலைமைஆசிரியர் மற்றும் CCRT யின் DRP திருமிகு ரெங்கராஜன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.

முகாமில் முதல் நாள் நிகழ்வில் ஆய்வாளர், முனைவர், யு.ஜி.சி.விருது பெற்றவர்.... இந்தியாவில் எங்கு ஆய்வாளர்கள் கூட்டம் நடந்தாலும் மரியாதையுடன் அழைக்கப்படக்கூடிய மதிப்பிற்குரிய மன்னர் கல்லூரியின் பேராசிரியர் சந்திரபோஸ் அவர்கள் கருத்துரை வழங்கினார்.
பல்லாண்டுகளாக ஆய்வு செய்த மகதப்பேரரசு வட நாட்டில் இருந்து தென்னாட்டிற்கு இடம் பெயர்ந்த வரலாற்றை சான்றுகளோடு விவரித்தார் கள்.
இந்தியாவில் ஆதியில் இருந்தவர்கள் நாகர்களே . அவர்கள் ஆயிரக்கணக்கான பிரிவில் உலகெங்கும் சிதறி வாழ்ந்துள்ளனர்.
மேலும் நாகர் என்ற பெயரில் சங்க இலக்கியச்சான்றுகளை எடுத்துரைத்த போது மலைத்து நின்றோம்.

நாகர்களின் வாழ்க்கை முன்னேற்றமே நாகரீகமானது என்றார்.

10 ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வுக்காக அர்ப்பணித்து செய்த அவரது பணி பாராட்டத்தக்கது.
வாழ்த்துகள் சார்.

அத்தோடு என்னால் விட முடியாது எங்கிருந்தோ வட மாநில அரசின் வரலாற்றை ஆய்வு செய்த நீங்கள் கீழடிக்காக செய்தது என்ன என்றேன்?

கீழடி ஆய்வாளர்கள் எனக்கு பிறகு வந்த சமீபத்திய மாணவர்கள் தான்.... எனக்கு தெரிந்தவர்கள் தான் என்றார்...
கீழடி ஆதாரங்கள் உண்மை எனில் தமிழ் நாட்டை சேர்ந்த ஆய்வாளர்கள் அனைவரும் அமர்நாத் அவர்களுக்காக குரல் கொடுக்காதது ஏன் என்றேன்?

உண்மை அறிந்தவர்கள் சுயநலவாதி யாக இருப்பதால் தான் இந்த நிலமை என்றார்.

ஒன்றும் அறியாத நாங்கள் குரல் கொடுப்பதை விட நீங்கள் ஆதாரங்களோடு குரல் எழுப்பினால் உங்கள் பின் அனைவரும் போராடுவார்களே என்றேன்....போராடிக்கொண்டே தான் இருக்கிறோம் எல்லாம் அரசியல்.....

இப்படி உண்மை அறிந்தும் மௌனமாய், சுயநலமாக இருப்பது தமிழினத்திற்கு செய்யும் துரோகமில்லையா என்று எனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன்........

ஆய்வாளர்கள் மனது வைத்தால் முடியும்....
வித்தியாசமான பயிற்சி தான்.....கலைப் பண்பாட்டு பயிற்சி.இரண்டாம் நாள்.

 தஞ்சாவூர் பெரிய கோவில், சரஸ்வதி மகால் களப்பயணம்.

எத்தனை முறை பார்த்தாலும் பிரமிப்பையே தரும் தஞ்சாவூர் பெரிய கோவில்...
எந்த பொறியியல் கல்லூரியில் படித்து இருப்பார்கள்.
இப்பதான் தரம் குறைவான கல்வி  தருகின்றோமா...

100ஆண்டுகள் வரை வாழும் வன்னி மரம்....

1000 ஆண்டுகளுக்கு மேலான கோவில்.

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைக்குள் இருக்கும் மண் தன்மை போல் தான் இத்தனை ஆண்டுகள் ஆகியும் கோவில் தன் நிலை மாறாமல் உள்ளது ....என்ற செய்தி.

பட்டு போல் மென்மையாக இருக்கும் சரஸ்வதி மகால் சுவர்கள்....அதை பாதுகாக்காமல் தங்கள் பெயர்களை கீறி எழுதியுள்ள மக்கள்.....
அங்கு உள்ள அருங்காட்சியகம்....
பல்லாண்டுகளுக்கு முன்பே மனித உடல்.விலங்குகளின் உடல்....அறுவை சிகிச்சை பற்றிய தகவல்கள்... பின்னர் ஏன் மருத்துவம் தமிழில் இல்லாது போனது?

அரிதான கலை பொருட்கள்....

தஞ்சாவூர் மாவட்டத்தின் சிறப்புகளை எடுத்துரைக்கும் ஒளி ஒலி காட்சி....

சரபோஜி மன்னரின் தர்பார் மண்டபம்....

கண்கள் போதவில்லை....



























...

4 comments :

  1. ஆகா,தஞ்சாவூருக்கு வந்து சென்றீர்களா
    மகிழ்ந்தேன் சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அண்ணா.....குழுவோடு வந்ததால்.... தகவல் தெரிவிக்க வில்லை.... நன்றி அண்ணா

      Delete
  2. தஞ்சைக்கு வந்ததறிந்து மகிழ்ச்சி. பகிர்வு அருமை. வாழ்த்துகள்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...