World Tamil Blog Aggregator Thendral: இன்று பலி தான்யா

Wednesday 14 September 2016

இன்று பலி தான்யா

இன்று பலி தான்யா 15.9.16
---------------------------

சுடச்சுட படிப்போம் குருதி வழியும் நாக்குடன்

இன்னும் எத்தனை பெண்களை பலி கொடுக்க போகிறோம்..காதல் வெறியர்களுக்கு...

ஒருத்தனையாவது நடுத்தெருவில் கல்லால் அடிச்சி கொன்றிருந்தால்...மற்றவன் யோசிப்பானோன்னு கோவம் வருது..

காவல் துறை ....அமைதி காக்கட்டும்

சட்டம் தன் கடமையைச்செய்யாமல் போகட்டும்.

அம்மா ஆட்சியில் பெண்களை அநியாயமாக பலிகொடுத்தோம் என்ற அவப்பெயர் சூழட்டும்...

பெண் அரசு செய்யும் போதே இப்படி எனில் ...தமிழ்நாட்டில் பெண்ணினம் இல்லாது அழிந்தே போகட்டும்...

பெண்ணைப்பெற்ற ஆண்கள் பயந்து பயந்து சாகட்டும்.

திரைப்படங்கள் இன்னும் ஆண்களை வெறியர்கள் ஆக்கட்டும்..

நாம் முகநூலில் புலம்பியே வெந்து மடிவோம்..

5 comments :

  1. "ஒண்ணுமில்லை" என்ற தலைப்பில் கவிதை அனுப்புமாறு நீங்க பகிர்ந்த செய்தியைப் முகநூலில் படித்தேன் இப்போது தேடினால் கிடைக்க வில்லை.விவரம் கிடைக்குமா?

    ReplyDelete
  2. வேதனை நிறைந்த கோபம்!

    ReplyDelete
  3. வேதனை...
    கவிதையாய் வெடித்திருக்கிறது...

    ReplyDelete
  4. வேதனை.
    அங்கே மட்டுமல்ல.... இங்கேயும் இக்கொடுமைகள் தொடர்கின்றன....

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...