World Tamil Blog Aggregator Thendral: இரவு-2

Thursday 15 September 2016

இரவு-2

இரவு -2
--------------

மென்மழைத்தூறலில் இரவின்று கவிய
இலைகள் தாங்கிய முத்துகள் சிதற

முனகலில் பறவைகள் நனைந்ததைக்கூற
கண்மலர் மூட கனவுகள் காத்திருக்க

 பொங்கும் அழகுடன் முகிலினில்
மறைந்தவள் மென்மையாய் ஒளிர...
 விண்மீன்கள் இறைந்திட்ட பாதைகளில்
காற்றென் கூந்தலைக்கலைக்க
 
 இசையின் துணையோடு
 நெடுந்தூர  பயணத்தில்

நரம்பினை ஊடுறுவும் குளிரினை
ரசித்தபடி மென்முறுவலோடு...
.
மெல்லச்சிவக்கும் பாதையின் முடிவில்
அடர்வன புட்களின் சிறகசைப்பில் ....
 
மென்பனி மெத்தையில்
சிறகுகள் விரித்து நீல்வானம் தொடுவதாக...






4 comments :

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...