World Tamil Blog Aggregator Thendral: வீதி கலை இலக்கியக்களம் 29 ஆவது கூட்டம்

Monday 25 July 2016

வீதி கலை இலக்கியக்களம் 29 ஆவது கூட்டம்

                                                  வீதி
 கலை இலக்கியக்களம் 29 ஆவது கூட்டம்
 நாள் :31.7.16
 இடம் :ஆக்ஸ்போர்டு சமையற்கலைக்கல்லுரி
            புதிய பேரூந்து நிலைய மாடி.புதுகை
 அன்புடன் அழைக்கின்றோம்.....
 வீதி நிறுவனர் முனைவர் அருள்முருகன் அவர்களின் நூல் பாறை ஓவியங்கள் அறிமுக விழா .....

 கவிஞர் வைகறையின் மகன் ஜெய்க்குட்டிக்காகத் திரட்டிய நிதி வழங்கும் விழா...

 உதவிய நல்ல உள்ளங்களை ,உதவப்போகும் நல்ல உள்ளங்களை விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க அழைக்கின்றோம். நிதி உதவி அளிப்பவர்களின் ஆதரவால் இதுவரை ரூ 1,85,000 சேர்ந்துள்ளது.மொத்தமாகக் கொடுத்தால் ஜெய்க்குட்டியின் வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்... இது முதல் தவணை தான்.

 இன்று வரை அவருக்காக அரசுப்பணம் எதுவும் வராத நிலையில் கல்விக்கட்டணம் கூட கட்டமுடியாமல் தான் பள்ளியில் சேர்ந்திருக்கிறான்.அவன் முன் இருந்த நிலையும் தற்போது அவன் வாழும் வீட்டையும் காண்கையில் மனம் பேதலித்து நிற்கின்றது.வைகறை ஏன் இப்படி செய்தாய் என அலறவே தோன்றுகிறது.

 முடிந்தவரை புதுக்கோட்டை வைகறைக்குடும்பத்திற்கு இயன்ற உதவியைச்செய்யும்.முகநூலிலும்,வலைப்பூவிலும் வைகறைக்காக எழுதி நிதி திரட்டித்தந்த நல்ல உள்ளங்களுக்கு பொள்ளாச்சி இலக்கிய வட்டமும்,வீதி கலை இலக்கியக்களமும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றது.
 உதவிகள் தொடர்ந்து வேண்டுகிறோம்.
 கவிஞன் அனாதை இல்லை என்பதை உணர்த்தவே...

4 comments :

  1. வணக்கம்
    நிகழ்வு சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. விழா சிறக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. தகவலுக்கு நன்றி சகோதரியாரே!

    ReplyDelete
  4. விழா சிறக்க வாழ்த்துகள். கலந்து கொள்ளும் ஆர்வம் இருப்பினும் கலந்து கொள்ள இயலாத சூழல்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...