World Tamil Blog Aggregator Thendral: ஐந்தறிவினம்

Friday 8 November 2013

ஐந்தறிவினம்

புள் கூறியது
அழுகின்ற பார்ப்பை
அணைத்து ஆறுதல் கூறு...

பெற்ற மகவை
சாக்கடை,குப்பையில் வீச
நெல்மணி,கள்ளிப்பால் புகட்ட
மனசாட்சி மறந்த
மனித இனம்
ஆறறிவால் செய்யும்...

நாமோ
முயன்று கூடு கட்டி
நலமுடன் வளர்த்து
பறக்கும் வரை காக்கும்
பகுத்தறிவற்ற
”ஐந்தறிவினம்”

2 comments :

  1. வணக்கம் சகோதரி.
    ஆறறிவுக்கு அந்தறிவு எவ்வளவோ மேல் என்றே தோன்றுகிறது. அதனால் தான் என்னவோ அந்தறிவை அழிக்கும் வேலையை ஆறறிவு செய்கிறது. கவிதை நன்று. தொடர்ந்து தங்கள் கவிவரிகளைத் தாருங்கள். பகிர்வுக்கு எனது நன்றிகளும் பாராட்டுகளும்.

    ReplyDelete
  2. ஆறறிவைவிட மற்ற அறிவுகள் மேல்தான்.என்னைப் பொறுத்தவரையில் மனிதன்தான் ஓரறிவு, சுயநலம் என்ற ஓரறிவு

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...