World Tamil Blog Aggregator Thendral: மழையோடு

Saturday 16 November 2013

மழையோடு


மழைக்கால
சன்னலோர பயணத்தில்
சாரல் முகம் தடவ
சில்லென்ற தென்றலில்
சிலிர்த்த உடல் பூவென மலர
மகிழ்ந்த மழை வேகமாய்
உள்நுழைந்தது நனைத்திடவே!

தடுக்க எண்ணி சன்னல் சாத்த
மேற்கூறைவழி கள்ளனாய்
மேல்நனைக்க
மழைக்கு உதவியது
அரசு பேருந்து...!

விட்டிறங்கி கலந்தேன்
மழையோடு மழையாய்....

மகிழ்வாய்..

4 comments :

  1. அட!.. அருமை!
    இறுதியில் மழையில் நடந்து நனைந்தே
    அந்த சுகத்தை அனுபவித்தாயிற்று...:)

    ரசித்தேன்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...