World Tamil Blog Aggregator Thendral: நாம் சிரிக்கும் நாளே திருநாள்

Wednesday 30 October 2013

நாம் சிரிக்கும் நாளே திருநாள்


ஏன் அம்மா
நாம்வெடித்து மகிழ்வதெப்போ..?


 அடுத்த ஆண்டு காசுவரும்
 ஆசையா  நீ கேட்ட வெடிகளை
கட்டாயம் வாங்கிடலாம் என்றாள்

மத்தாப்பூ குச்சிகளை பெட்டியில்
வச்சுகிட்டேகேட்டாள்..தங்கச்சி
எனக்கும் நிறைய மத்தாப்பூவென..

இயலாத புன்சிரிப்பில் தங்கமே
தவறாமல் வாங்குவோம் என்றாள்..

வெடி மருந்தை அடுக்கிக் கொண்டே
கிழிந்த முந்தானையால் முகம் துடைக்க
எத்தனித்த வேளையிலே...

பட்டாசுடன் பட்டாசாய்
என் அம்மாவும்வெடித்துசிதறினாளே..

கையில் தீயுடன் தங்கையும்
காலில் நெருப்புடன் நானும்
தூக்கி எறியப்பட்டோமே..

வெடித்த வான்வெடியில்
என் அம்மாவின் சதைத்துண்டுகள்
வானத்தில் பூப்பூவாய் தெறித்து
அன்பு மகனே ..ஆசையா நீ கேட்ட
வானவெடியெ பார்த்துக்கோ என்றது

எஞ்சோட்டு சிறார்களே
எங்களையும் நினைப்பீரோ நீங்க வெடிக்கும் வெடியில்
 எங்களின் சதைத்துண்டுகள் கலந்திருக்கும்..
அதன் வடிவில் நாங்க நீங்க

வெடிப்பதை பார்த்து மகிழ்வோம்..அப்போது
 நாம் சிரிக்கும் நாளே திருநாள் 


19 comments :

  1. அருமை... கவிதையை (இணைப்பை) நடுவர்களுக்கு அனுப்பி வைக்கிறேன்... கலந்து கொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி...

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. மனதை உலுக்கிய சம்பவங்களை
    உரைத்த உணர்வுக்கவிதை....

    போட்டியில் வெறிபெற வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தோழமைக்கு நன்றி

      Delete
  3. ஐயோ...பட்டாசே வேண்டாமப்பா...பட்டாசுத் தொழிற்சாலை நேரில் பார்த்து வந்த என் தோழி சொல்லியதெல்லாம் கண்ணில் நீர் வரவழைத்தன...உங்கள் கவிதையும்!
    உண்மை நிலைமை சொல்லிய கவிதை அருமை!

    ReplyDelete
    Replies
    1. உண்மை கவிதை எழுதிவிட்டேன்.அதிலிருந்து இன்னும் மீள முடியவில்லை.

      Delete
  4. உண்மையை உரக்கச் சொல்லும் உன்னதக் கவிதையை படைத்தமைக்கு நன்றிகள் சகோதரி. மனதை கனக்க வைத்தது கவிவரிகள். படத்தேர்வும் கவியோடு சேர்ந்து உலுக்குகிறது. பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
    Replies
    1. நன்றி உடனுக்குடன் வரும், உங்கள் விமர்சனம் மேலும் எழுதத்தூண்டுகிறது .நன்றி சார்.

      Delete
  5. பட்டாசுத் தொழிற்சாலை விபத்துகள் எப்பவும் நமது மனதை அடியோடு அசைக்கும். அந்த தீர்க்க முடியாத சோகத்தை கவிதையில் கொண்டு வந்திருக்கிறீர்கள்.
    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.
    தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி .தொடர்ந்து உங்களின் வாழ்த்துக்களை விரும்புகிறேன்மா

      Delete
  6. மனதை உலுக்கியச் சம்பவங்கள்
    இதயம் கனக்கிறது

    ReplyDelete
    Replies
    1. சொல்ல முடியா வேதனை சார்

      Delete
  7. மற்றவர் வாட நாம் வாழ்வா தீபாவளி என நறுக்கென கேட்கிறது கவிதை .போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரி!

    ReplyDelete
  8. மிக்க நன்றி சார்

    ReplyDelete
  9. மற்றவர்களை மகிழ்விக்கும் பட்டாசுகள் தொழிலாளர்களின் மீளாத்துயரிலும் கண்ணீரிலும் ஆனது என்று நினைக்கும்போது மனம் வேதனைகொள்கிறது போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. உணர்ச்சிப் பிழம்பாய் உருவான ஓவியக் கவிதை-- நன்று தோழி.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...