World Tamil Blog Aggregator Thendral: எது சுதந்திரம்?

Saturday 19 October 2013

எது சுதந்திரம்?

இன்று சுதந்திர தினம்
பல நாட்களுக்கு முன்பிருந்தே
பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக
பேருந்து நிலையம்

 புகைவண்டி நிலையம்
மக்கள் கூடும் இடங்கள்

 அனைத்திலும்
பலமாக பாதுகாப்பு வலையங்கள்
கொடி ஏற்றி முடியும் வரை
வன்முறைகள் ஏதும் 

நிகழ்ந்து விடக்கூடாதென்று
காவல் துறையினரின் 

மனதுக்குள் வேண்டுதல்கள்
அறுபத்தேழாவது சுதந்திர தினம்
அதிக பாதுகாப்புகளோடு
அமைதியாக கொண்டாடப்பட்டது
செய்தி

.கொடியேற்ற வீட்டை விட்டு
 வெளியே வந்தேன்.
.சாலையின் மத்தியில்
 வேப்பம் பழத்தை சுவாரசியமாக
 இரு கால்களால் பிடித்து
சுவைத்துக் கொண்டிருந்த 

அணிலொன்றின் பார்வை
என்னை கேலி செய்வது போல்

 இருந்ததை
என்னால் தவிர்க்க முடியவில்லை....

2 comments :

  1. சொன்னவிதம் அருமை... உண்மை...

    ReplyDelete
  2. நன்றி.உண்மையில் அணிலின் பார்வை என்னை கேலி செய்ததாய் உணர்ந்தேன்

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...