World Tamil Blog Aggregator Thendral: மீட்போமா?

Sunday 17 November 2013

மீட்போமா?



அறியாமல்
அன்னையை அடகாய்..

உயிர்பல தந்தோம்
மீட்கவே...

அறிந்தே
அடகாய்மீண்டும்...

வட்டிக்கடைக்காரனுக்கு
வயிற்றுப்பசி தெரியுமா..?

இளைஞர்களோ
கதாநாயகர்களின் புகழ்பாடி..

மற்றவர்களோ
வீதிதனில் கதைபேசி..

வயிற்றில் கலக்கம்
வாராக்கடனை வசூலிக்க
என்செய்வானோ..!


உணர்விழந்து..
மானமிழந்து..
மொழியிழந்து...
தவிப்போமா..!

அன்னையை
மீட்போமா...?

6 comments :

  1. சிந்திக்க வேண்டிய வரிகள்...

    ReplyDelete
  2. உண்மைதான்...மீண்டும் அடகுவைக்கத்தானே செய்கிறோம் தாய்நாட்டை..சரியாகப் புரிந்துகொண்டேனா தோழி? :)

    ReplyDelete
  3. வணக்கம் சகோதரி
    அன்னையை மீட்டெடுக்க ஒவ்வொருவரும் சூலுரைப்போம். இன்றைய இளைஞர்கள் மீது ஒரு வித அச்சம் இருந்தாலும் நிச்சயம் நம்பிக்கையும் இருக்கிறது. காட்சிகள் மாறும். பகிர்வுக்கு நன்றி சகோதரி. (இணையக்கோளாறு காரணமாக வலைப்பக்கம் வர முடியவில்லை)

    ReplyDelete
    Replies
    1. நம்பிக்கை தான் வாழ்வோம் சகோதரா.வருகைக்கு நன்றி.

      Delete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...