World Tamil Blog Aggregator Thendral: வீதி கலை இலக்கியக் களம் 77

Sunday 25 October 2020

வீதி கலை இலக்கியக் களம் 77

வீதி கூட்டத்திற்கு எழுத்தாளர் கி.ரா அவர்கள் வருகை

வீதி கலை இலக்கியக் களம் 77
இதுவரை நடந்த வீதி கூட்டங்களில் ஆகச் சிறந்த கூட்டமாக இன்றைய வீதி அமைந்தது.
மகிழ்வில் மனம் கூத்தாடுவதை உணர்கிறோம் ஏனெனில் எதிர்பாராத ஆச்சரியமாக எழுத்தாளர் கி.ரா அவர்கள் இன்று வீதி நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தார் .மாபெரும் எழுத்தாளரை வீதி வணங்கி மகிழ்ந்தது.நம்ப முடியாத உண்மை.எத்தனை எளிமையாக நூற்றாண்டை நெருங்கும் அவரின் எளிமை உன்னதமானது.
கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள் அறிமுக உரை நிகழ்த்தினார்.
எழுத்தாளர் நாறும்பூநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கி.ராவின் கதைகள் குறித்தும்,அவருடனான நட்பு குறித்தும்,கரிசல் இலக்கிய வகைமையின் சிறப்பு குறித்தும் கை தேர்ந்த கதை சொல்லியாக கூட்டத்தை தன் வசப்படுத்தினார்.
வீதி உறுப்பினர்களான இரா.ஜெயா சுற்றுப்புற சூழல் கதையும்,மலையப்பன் கோபல்ல கிராமம் நாவலும், கிரேஸ் பிரதிபா அட்லாண்டா சொந்த சீப்பு கதையும், சுபஸ்ரீ முரளீதரன் சென்னை கதவு கதையும்,கமலம்எறும்பு கதையும், காரைக்குடி கிருஷ்ணாவேலைவேலையே வாழ்க்கை கதையும், சகோதரர் பாண்டியன்எழுத மறந்தகதையும்,கீதா பேதை கதையும், குறித்து மிகச் சிறப்பாக விமர்சனம் செய்தனர். சகோதரர் கஸ்தூரி ரங்கன் கூட்டத்திற்கு தலைமை பொறுப்பை ஏற்று சிறப்பாக நடத்தி குருபூஜை கதையும் குறித்து மிகச் சிறந்த விமர்சனங்களைக் கூறிய விதம் அருமை.
கீதா வரவேற்புரை கூற,சோலச்சி நன்றியுரை கூற கூட்டம் நான்கு மணி நேரத்திற்கு மேல் வீதி நடைபெற்றது.
வீதி கூட்டத்திற்கு எழுத்தாளர் கி.ரா வை வரவழைத்த தோழர் நாறும்பூநாதன் அவர்களை வீதி வணங்கி மகிழ்கிறது.மிக்க நன்றி தோழர்.
இன்றைய பொழுது கி.ராவின் நினைவுகளோடு இனிமையாக கழிந்தது...
விரைவில் வீதி உறுப்பினர்கள் கி.ராவை சந்திக்க அனுமதி அளித்துள்ளார்.. மிக்க நன்றி அனைவருக்கும்.

1 comment :

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...