World Tamil Blog Aggregator Thendral: உலகப் பெண்கவிஞர் யார் ? எவர்? தொடர் 1

Friday 23 October 2020

உலகப் பெண்கவிஞர் யார் ? எவர்? தொடர் 1

உலகப் பெண் கவிஞர் -யார் எவர் ?

கவிஞர் மாயா ஏஞ்சலோ.



அமெரிக்கப் பெண் எழுத்தாளர் .கவிஞர் ,சமூகச் செயற்பாட்டாளர் ,நடிகை,பாடகி,பத்திரிக்கையாளர்,திரைப்படைப்பாளர் என பன்முகமாய் இயங்கியவர்.கறுப்பெழுத்தின் முன்னோடிமார்ட்டின் லூதர் ,மால்கம் எக்ஸ் ஆகியோருடன் சமூக இயக்கங்களில் பங்கேற்றவர் .இனவெறிக்கு எதிராகப் போராடியவர் ஆறு மொழிகளுக்கு மேல் எழுதவும் பேசவும் தெரிந்தவர் .எகிப்து கானா நாட்டுப்பத்திரிக்கைகளின் ஆசிரியராகப் பணிபுரிந்த கவிஞர் மாயா ஏஞ்சலோ அவர்கள் ....

அவரது கவிதைகள் அறச் சீற்றம் நிறைந்த சொற்களால் நிறைந்தவை, அவரது வாழ்வின் துயரத்தை காட்டும் கண்ணாடி. தனது ஏழு வயதில் தாயின் நண்பரால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானபோது குடும்பத்தின் அன்பின் வலியில் அழுகுரலோடு தன்னை புதைத்துக்கொண்டாள். தனது குரல் அந்த மனிதனை நான்கே நாட்களில் கொன்றுவிட்டது என்பதை ஏற்க முடியாது ஆறு ஆண்டுகள் மௌனச் சிறையில் மூழ்கினாள். ஆறு ஆண்டுகால வாசிப்பு அவருக்கு மனித குலத்தின் உயிர் நாடியை உணர்த்தியது. பதினான்கு வயதில் அநீதிக்கு எதிராக, சொற்களை கொண்டே போர் தொடுக்க முடியும் என்பதை புரியவைத்தது.

 "I know why the caged bird sing (1969)". என்ற சுயசரிதை நூலை அடுத்து ஒன்பது நூல்களில் தனது சுயசரிதையை எழுதியுள்ளார்.

·         Life doesn't frighten me (1993).

·         My Painted House, My friendly chicken and me (1994).

·         Kofi  and his magic (1996).

·         ஆகிய நூல்களை குழந்தைகளுக்காக எழுதியுள்ளார்.அவரது முதல் சுயசரிதை நூல் வன்கொடுமைக்கு ஆளான கறுப்பின பெண்ணின் வழியைக் கூறிய போது உலகே அவரைத் தாக்கியது .நான் வன்முறையையும் ,அடக்குமுறையையும் வன்கொடுமைகளையும் இலக்கியத்தால் எதிர்கொள்ளத்துணிந்தார் .

          அவரது குரல் ஒடுக்கப்படுபவர்களுக்கான குரல் ,குறுகிய கம்பிகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டாலும் கீழ் வானத்தில் எனது சிறகுகள் மிதக்கப் போவதில்லை என்பதை அறிந்தாலும் ,நான் எனது அலகைத்திறந்து பாட முயற்சிக்கிறேன் .கூண்டுப் பறவைதான் என்றாலும் தான் பாட மறப்பதில்லை என்றவரின் கவிதை கடத்தும் சோகம் படிப்பவர்கள் மனதில் உறைந்து நிற்கும் .

                      இன்றைய நவீன உலகில் பெண் உடல் மாற்றப்பட்டுள்ளதை ,பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியை தனது சொற்களால் நெய்து ஆயுதமாக்கினார் .

       'உங்கள் கடுப்பான ,திரிக்கப்பட்ட பொய்களால்

        வரலாற்றில் என்னை வரைந்திருக்கலாம்,

        பாழ்கதியில் என்னை நீங்கள் மிதித்து

        துவைத்திருக்கலாம் ,அப்படி இருந்தாலும்

        தூசிப்புழுதியாக ,நான் உதித்தேழுவேன்'

என்று காலத்தால் அழியாத . விளங்குகின்றார் .

அவரது கவிதை வரிகள் ...

'கூண்டுப்பறவை ஏன் பாடுகிறதென்று எனக்குத் தெரியும்

சுதந்திரப்பறவை காற்று மீதேறித் தாவிப் பாயும்

விசை தீரும்வரை சமநிலை கொண்டு மிதக்கும்

ஆரஞ்சு வண்ண சூரியக் கதிர்களில்

தன் சிறகுகளை நனைக்கும் .

வானத்தை உரிமை கொள்ளும் தைரியம் பெறும்.

ஆனால் கூண்டுப்பறவை தன்

குறுகிய கூட்டுக்குள் அலைகிறது ......

என தொடரும் கவிதை அவரது வலியை காற்றில் எழுதி மனதில் உறைந்து நிற்கும் ..

அவரது நூல்கள் அனைவரும் வாசிக்க வேண்டிய நூல்களில் ஒன்று ..

நன்றி .


No comments :

Post a Comment

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...