World Tamil Blog Aggregator Thendral: உலகப் பெண் கவிஞர் யார் ? எவர்? தொடர் 2

Friday 23 October 2020

உலகப் பெண் கவிஞர் யார் ? எவர்? தொடர் 2

உலகப் பெண் கவிஞர் யார்?எவர்?

கென்யா கவிஞர் வார்சன் ஷைர்.



அனைவருக்கும் வணக்கம் உலகில் புகழ் பெற்ற கவிஞர்களை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த மாதம் மிக இளமையான பெண்கவிஞரான வார்சன் ஷைர்.சோமாலியப் பெற்றோருக்கு கென்யாவில் 1988 இல் பிறந்தவர்.பிறகு இங்கிலாந்திற்கு இடம் பெயர்ந்து லண்டனில் வாழ்ந்து பிரிட்டனைத் தாயகமாக கொண்டு வாழ்கிறார் ...ஏனோ பிரிட்டனை தனது சொந்த நாடாக எண்ணமுடியவில்லை. தாய் நாட்டிற்கு செல்லும் ஆசை கனவாகவே இருந்தாலும் அவர் தனது சோமாலிய ஆப்பிரிக்க மக்களின் வாழ்வியலை ,பண்பாட்டை ,அவர்களின் வலியை,அகதி வாழ்வின் துயரத்தை ,குறிப்பாக அகதிப்பெண்களின் தாங்கவியலா துன்பங்களைத் தந்து எழுத்தால் உலகெங்கும் உணரச் செய்தார் .

இளம் வயதினராக இருந்தாலும் அவரது எழுத்தின் வன்மை ஆப்பிரிக்க மக்களின் துயரத்தை ,வேதனையை தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கிறது.தனது பூர்விக நாட்டு மக்களைப் பார்க்கும் பொழுது எல்லாம் தனது மக்களின் பழங்கதைகளை கேட்டு அறிந்து எழுத்தில் பதிவு செய்கிறார்.எல்லா அகதிகளின்  துயரங்களை தனது துயரங்களாக எண்ணி பதிவு செய்கிறார்

.”ஒன்று, நான் எந்த நபரைப் பற்றி எழுதுகிறேனோஅவரைப்பற்றி எனக்கு  தெரியும் அல்லது நான் எழுதும் ஒவ்வொரு நபரும் நான் தான் .அவர்களின் ஆழ் மன அமைப்பை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியும்என்கிறார் வார்சன் ஷைர்.

தனது கவிதைகளுக்காக இளம் வயதிலேயே பல பரிசுகளையும், அவருக்கான அங்கீகாரத்தையும் பெற்றிருக்கிறார்.2013 இல் ப்ரூனெல் பல்கலைக்கழகம் உருவாக்கிய ஆப்பிரிக்கக்கவிதைப் பரிசை அவருக்கு வழங்கியது.2014இல் லண்டனின் இளம் அரசவைக் கவிஞராக ஷைர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.பிரபல பாப் பாடகி பியான்ஸே நோல்ஸ் 2019இல் வெளியிட்ட ’லெமனேடு’ஆல்பத்தில் வார்சன் ஷைரின் கவிதை வரிகள் இடம்பெற்றன.

எவ்வளவு புகழ் கிடைத்தாலும் அவரது எளிமையை உலகம் பாராட்டியது. .அகதிகளின் குரலாகவே அவரின் கவிதைகள் முழங்கின.

குறிப்பிடத்தக்க கவிதையாக

“வீடென்பது சுறாமீனின் வாயாக இருந்தாலொழிய

யாருமே தங்கள் வீட்டை விட்டு

வெளியேறுவதில்லை”

என்ற வரிகள் அகதி வாழ்வின் அடையாள வாசகங்களாக உள்ளன.

2011 இல் அவர் எழுதிய  நூலின் பெயரே அவரின் காட்சியாய்”குழந்தைப்பெற்றுக்கொள்ள என் தாய்க்கு கற்றுக்கொடுத்தல்”என்ற சிறிய தொகுப்பை வெளியிட்டுள்ளார்.அவரது கவிதைகள் அனைத்தும் கட்டப்படாத பூக்களென மணம் வீசி வலம் வருகின்றன.ஒரு தொகுப்பைக்கூட போடாத ஒரு கவிஞர் உலகப் புகழ் பெற்றுள்ளார் என்றால் அது வார்சன் ஷைர் மட்டுமே.ஏனெனில் அவரது கவிதைகள் நேர்மையைச் சுமந்து தவறு செய்தவர்களைச் சுட்டெரித்தது.உண்மையின் சுடரேந்தி துயரத்தின் வலியைக்காட்டியது..

தனிமைக்குறித்து”என் தனிமை மிகவும் நன்றாக இருக்கிறது. நீ என் தனிமையைவிட  நீ இனிமையாக இருந்தால் நான் உனக்கு மட்டுமே வேண்டும் .”என்றார்.

மிக நீண்ட கவிதைகளில் ஒன்றாக

அசிங்கம்

உன் மகள் அசிங்கம்

அவள் இழப்பை அணுக்கமாக அறிவாள்,

முழு நகரங்களை வயிற்றில் சுமக்கிறாள்.

குழந்தையில் உறவினர்கள் அவளைத் தூக்கமாட்டார்கள்

அவள் உடைந்த மரம்கடல் நீர்

அவள் போரை நினைவுபடுத்துவதாக அவர்கள்

சொன்னார்கள்.

அவளது பதினைந்தாவது பிறந்த நாளில் அவளுக்குச்

சொல்லிக்கொடுத்தாய்

அவள் முடியை எப்படி கயிறு போலக் கட்டிக்கொண்டு

சாம்பிராணி புகைக்காட்டி வாட்டுவதென.

அவளை பன்னீர் கொண்டு வாய்க்கொப்பளிக்க

வைத்தாய்

அவள் இருமியபோது சொன்னாய்

உன்னைப் போன்ற மகாந்தொ

தனிமையாகவோ வெறுமையாகவோ வாசம் வீசக்

கூடாது.

நீ அவள் தாய்

ஏன் அவளை எச்சரிக்கவில்லை

அரிக்கப்படும் படகென அவளை அணைத்தபடி

அவள் கண்டங்களால் போர்த்தப்பட்டிருந்தால்

அவளது பற்கள் சிறு காலனிகளென்றால்

அவள் வயிற் ஒரு தீவென்றால்

அவள் தொடைகள் எல்லைகளென்றால்

ஆண்கள் அவளை நேசிக்கப்பொவதில்லையெனச்

சொல்லவில்லை.

எந்த ஆணுக்கு

உலகம் எரிவதைப் பார்க்க வேண்டும்

தன் படுக்கையறையில் படுத்தபடி ?

உன் மகளின் முகம் ஒரு சிறிய கலகம்

அவள் கைகள் உள் நாட்டுப்போர்

ஒவ்வொரு காதுக்குப்பின்னும்

ஒரு அகதிமுகாம்

அசிங்கமான விசயங்கள் இறைந்து கிடக்கும் உடல்

ஆனாள் கடவுளே,

அவ்வளவு அழகாக அணிகிறாள் அல்லவா

இந்த உலகை?

கவிஞர் வார்சன் ஷைர்.மேலும் அவரைப்பற்றி அறிந்து போற்ற வேண்டுகிறேன்.

நன்றி

மு.கீதா

 

 

  


No comments :

Post a Comment

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...