World Tamil Blog Aggregator Thendral: சித்தார்த்தன்

Monday 31 August 2020

சித்தார்த்தன்

சித்தார்த்தா
கட்டிய மனைவியை
கொட்டும் இரவில்
தட்டிய தூசென
விட்டுச் செல்ல 
மனம் வந்தது எப்படி..?.
நீ புத்தனாகலாம்
என்னைப்பொறுத்தவரை
பெற்ற மகவை கதறவைத்து
பற்றற்றேன் என்ற நீ
புனிதனல்ல..
நீ சென்றுவிட்டாய்
கேளாத சொற்களை
கேள்வியாய் எனைத்துளைத்தெடுத்த
வேள்வியை உணர்வாயா..
விட்டுச் செல்வது ஆணுக்கு
விந்தை கழித்து செல்வதாக...
எக்காலமும் குழந்தையை
எந்த பெண்ணும் விட்டுவிடாள்
குரங்கு சுமக்கும் குட்டியாக
கங்காருவின் குட்டியாக
நினைவிலும் தோளிலிலும்
சுமந்து திரிந்த என்வலி உணராய்...
சித்தாத்தா உலகம் உனைப் போற்றலாம்...
மனைவி மகவை விட்டு செல்ல
வழிகாட்டிய உன்னை தாயுலகு 
மன்னிக்காதென்றும்...
புனிதர் எல்லோருக்கும்
புனிதராக முடியாது....
சித்தார்த்தா...
மு.கீதா
புதுக்கோட்டை

2 comments :

  1. நல்ல கவிதை. முகநூலிலும் வாசித்தேன்.

    பாராட்டுகள்.

    ReplyDelete
  2. மிக்க நன்றி சகோ

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...