World Tamil Blog Aggregator Thendral: வீதி

Thursday 27 August 2020

வீதி

வியக்க வைக்கும் தமிழரின் மேன்மை...
ஒருவாரமாக மூன்றாம் முறையாக மீண்டும் வேள்பாரி நாவலுடன் பயணிக்கிறேன்.வீதி கூட்டத்திற்காக 'வேள்பாரியில் பெண்கள்' என்ற தலைப்பில் எனது உரைக்காக..
பொன்னியின் செல்வன் நாவல் அதிசயம் என்றாலும் என்னை அது வியக்க வைத்ததே தவிர புதைய வைக்கவில்லை... பெருமிதம் தோன்றவில்லை...
ஆனால் வேள்பாரி எனது முன்னோரின் கதை . அவர்கள் இயற்கையை உயிராக நேசித்து இயற்கையோடு இணைந்து வாழ்ந்த வரலாறு...
அவர்களின் இயற்கை அறிவு.மருத்துவ அறிவு...காணும் செடிகளை எல்லாம் தங்கள் பாதுகாப்பிற்கு,மருத்துவத்திற்கு .விளையாட்டிற்கு என பயன்படுத்திய பேரறிவு.முதுகிழவன் வேலை வாங்குகிறான் என்று அவனுக்கு கொடுக்கும் வெற்றிலையில் தும்மி இலை கொடுத்து தும்ம வைக்கும் இளைஞர்கள்... அவர்களுக்கு காமஞ்சுருக்கி இலை கொடுத்து ஆட முடியாமல் செய்வதுடன் பெண்களுக்கு காமமூட்டி சாறு கொடுத்து அவர்களைத் தூண்டி இளைஞர்களை நாணவைக்கும் குறும்பு..
குலநாகினிகளின் காட்டரணால் பாதுகாக்கப்படும் பறம்பு...என எத்தனை அதிசயங்கள்..
எழுத்து கற்றவன் என்ற பெருமிதம் கொண்ட கபிலரிடம எழுத்துன்னா என்ன எனக் கேட்டு அவருக்கு பறம்பு கற்றுக் கொடுக்கும் வாழ்க்கைப் பாடம்...
பேரரசுகளின் பேராசை புகழுக்காக எதையும் செய்யும் அகங்காரம் இன்றைய உலகமயமாக்கலால், கார்ப்பரேட் நிறுவனங்களால் அதன் வணிக தந்திரத்தால் மக்கள் அடையும் துயரம் என நிகழ்காலத்தோடு ஒப்பிட வைக்கும் மூவேந்தர்களின் சூழ்ச்சி...என விரிகிறது... 
இறுதியில் மூவேந்தர்கள் போரிட்டாலும் தனது தோழன் நீலனைக் காப்பாற்றும் முயற்சி மட்டுமே செய்யும் பாரியின் நீலனின் வீரம், வள்ளி,ஆதினியின் காதலும் அறிவும் ,காட்டின் அதிசயங்கள் என நம்மை முருகன் வள்ளியை ஈர்க்க ஏழிலைப்பாலை மரத்திற்கு அழைத்து சென்று கவர்வதைப்போல நம்மையும் நமது அறிவை, பண்பாட்டை ,வீரத்தை,காதலை,பெண்களை மதிக்கும் தன்மையைக் காட்டி கவர்ந்து மகிழவைத்து தமிழன்டா என பெருமிதம் கொள்ள வைக்கிறது..
கொரோனா விடுமுறையில் நமது குழந்தைகளுக்கு இந்நூலை அறிமுகப்படுத்தி நமது உண்மை  வரலாறை  அறிமுகம் செய்ய வேண்டும் ஒவ்வொருவரும்...
பாரி வேறு நாம் வேறல்ல ..ஆனால் எப்படி திரிந்து போனோம் யாரால் என்பதை நுட்பமாக உணரலாம்...
வாருங்கள் வீதி கலை இலக்கியக் களம்-75 பவளவிழா இணையவழி நிகழ்வில் கலந்து கொள்ள...

4 comments :

  1. வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி நன்றி சகோ

      Delete
  2. Replies
    1. மிக்க நன்றி அய்யா

      Delete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...