World Tamil Blog Aggregator Thendral: யாருக்கான கல்வி இது?

Thursday 31 August 2017

யாருக்கான கல்வி இது?

யாருக்கான கல்வி இது?
கொஞ்சம் கூட சிந்தித்திருப்போமா....
எக்காலத்திலும் தமது வணிகத்திற்கு பாதிப்பு வந்து விடக்கூடாது என்று திட்டமிட்டு , சிந்தனையை தூண்டி விடக்கூடாது என்று....மெக்காலேவால் உருவாக்கப்பட்ட கல்வி முறையை.....
இன்றைய இந்தியாவில் உள்ள முதலாளிகளுக்காகப் பணி செய்ய கற்பித்துக் கொண்டு உள்ளோம்.
சிலர் மட்டுமே செல்வச்செழிப்பில் வாழ 99 சதவீத மக்கள் வறுமையால் வாடக் காரணமென்ன என்று கேள்வியைத் தூண்டாதக் கல்வியால் பயன் என்ன?
ஒவ்வொருவரும் தாம் மட்டும் வறுமையில் இருந்து விடுபட எண்ணி வாழ்கிறோமே...ஒட்டுமொத்தமாக வறுமையை ஒழிக்க போராடுகிறோமா?
ஜனநாயக நாட்டில் கல்வி சமத்துவமாக அமையவில்லை ....சமமாக கொடுக்கவில்லை என்றால் அது எப்படி ஜனநாயக நாடாகும்....?
இதை கற்பிக்கும் ஆசிரியர்கள் உணர்ந்துள்ளோமா?
இந்த கல்வியறிவும் இல்லையெனில் நம் கதி என்ன?
இதைக்கூட அனைவருக்கும் கொடுக்க முடியவில்லையே....
சென்னை மாநகராட்சியில் படித்து முதுகலை பட்டம் வாங்கிய துப்புரவாளர்களின் இளைஞர்கள் மாநகராட்சி பணியாளர் பணிக்கு விண்ணப்பித்த போது ... அவர்களுக்கு வழங்கப்பட்ட பணி என்ன தெரியுமா...
கல்வி அறிவு இல்லாத அவர்களின் தாத்தா , அப்பா.செய்து வந்த அதே துப்புரவாளர் பணி.... வேணும்னா செய் இல்லைனா போவென துரத்தும் போது அரசுப் பணின்னு ஏற்று கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டனர்....
என்ன படித்தாலும் இறுகப் பிடித்து இருக்கும் மூட நம்பிக்கையை ஒழிக்காத கல்வி...... ஒரு கல்வியா?
கல்வி என்பது எழுத்தறிவு தருவது அல்ல... மக்களுக்கு விழிப்புணர்வு கொடுப்பதாக அமைய வேண்டும் என்று பாவ்லோபிரேயர் சொன்னபோது அவரை சிறையில் அடைத்தார்களே....ஏன்?
ஒரு போதும் மக்கள் சிந்திக்கவே கூடாதென நினைக்கும் முதலாளித்துவ அதிகாரம் ...
மக்களுக்கு எதிரான விசயங்களை சட்டப்படி நியாயம் என்று நம்மையே ஏற்க வைக்க தானே இந்த கல்வியறிவு.... பயன்படுகிறது.
சமச்சீர் கல்வி வேண்டும் என்ற போராட்டத்தில் உருவானது இந்த"கல்விமேம்பாட்டு கூட்டமைப்பு"என்ற அமைப்பு.....என்றார் . தோழர் சு.மூர்த்தி.
கல்வி அனைவருக்கும் சமமாகக்கொடுக்க வேண்டும் என்று ஏன் ஆசிரியர்கள் போராட மறுக்கிறோம்?
சமூகச்சிந்தனையே வரக்கூடாது என்று கிரிக்கெட் பின்னால்...... கேளிக்கை களுக்கு பின்னால் இளைஞர்களை.    துரத்தும் காரணம் என்ன?
மதம்......வறுமையை, துன்பத்தை,தலைவிதி என்று ஏற்றுக்கொள்ள வைப்பது எந்த விதத்தில் நியாயம்?
உப்பு மூட்டை சுமக்கும் கழுதை கதை.....முதலாளிக்கு துரோகம் செய்யக்கூடாது என்று குழந்தையிலேயே கற்றுக் கொடுக்கிறதே.....
இந்த பத்து ஆண்டுகளுக்கஅரசு பள்ளி மாணவர்கள் 256 பேர் மட்டுமே மருத்துவக் கல்லூரி யில் படித்து உள்ளனர்.இனி அதுவும் கிடையாது.
இப்போ மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கும் கிடையாது என்கிற போது தான்.....உணரத்துவங்குகிறோம்.
நடுத்தர வர்க்கம் தனக்கு ஆபத்து வந்தால் மட்டுமே சமூக நீதி கேட்கும் நிலை.
சமவெளி மாணவர்களுக்கே இந்த நிலை என்றால் மலைவாழ் மக்களுக்கு என்ன நீதி கிடைக்கும்.அவர்களுக்கு கல்வி உத்திரவாதம் உண்டா....?
என்று கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு சு.மூர்த்தி அவர்கள் கேட்ட போது..........
சிந்திக்க வேண்டிய சூழ்நிலை......
இந்த வாய்ப்பை தந்த புதுகை செல்வா அவர்களுக்கு மிக்க நன்றி..

தொடர்ந்து போராட வேண்டிய நியாயங்கள் அதிகம்......
அதற்கு சிந்திக்க க்கூடிய தோழமைகள் ஒன்றிணைய வேண்டும்......



5 comments :

  1. கல்விமுறையில்.. பாடத்திட்டத்தில் மாற்றம் கட்டாயம் வரவேண்டும். வாழ்வதற்கான துணிவையும் தன்னம்பிக்கையையும் அவன் கற்ற கல்வி தரவேண்டும்.. மாறாக அவனிருக்கும் நிலையிலிருந்து இன்னும் கீழிறக்கக்கூடாது. கல்விமுறை மாற்றத்துக்காக தொடர்ந்து பாடுபடும் ஆசிரியப் பெருந்தகைகள் அனைவருக்கும் பாராட்டுகள்.

    ReplyDelete
  2. தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு
    கற்றனைத் தூறும் அறிவு.
    கலிகாலத்தில் கல்வியே வியாபார பொருளாகிப்போனதால் கிணறுகளிலும் தண்ணீர் இல்லை கல்வியிலும் தரமில்லை பொருளீட்டுவதை கருத்தில் கொண்டே கல்வி புகட்டப்படுவதால் இயந்திர மயமாக்கப்படுகிறது மனித இனம்

    ReplyDelete
  3. கல்வி முறையில் மிகவும் பின் தங்கி அல்லது பொருத்தமற்ற நிலையில் உள்ளோம் என்பதே உண்மை.

    ReplyDelete
  4. நிச்சயமாய் இப்பத்திய குழந்தைகளுக்கான கல்விமுறை இல்லை.

    ReplyDelete
  5. நல்ல பகிர்வு அக்கா...
    யாருக்கான கல்வி முறை என்பதுதான் தற்போதைய கேள்வியும் குழப்பமும்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...